Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Tuesday, September 20, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -12

04. இமாம் அஹ்மதும் சமூக மாற்றமும்

அரசியல் பற்றிய இமாம் அஹ்மதின் சிந்தனைகள், அவரது பொதுவான சிந்தனைப் போக்கான பாரம்பரிய சிந்தனை முறைமையைக் கொண்டதாக அமைந்திருந்தன.

பெரும்பாலான ஸஹாபாக்களும் தாபியீன்களும் கொண்டிருக்கும் கருத்தை இங்கு இமாம் அஹ்மத் முதன்மைப்படுத்தினார். கிலாபத், பைஅத் போன்ற அம்சங்கள் மட்டுமன்றி பொதுவாக சட்ட சிந்தனையிலும் இமாமின் போக்கு இவ்வாறு அமைந்திருந்தது. அத்தோடு இமாம் யதார்த்தபூர்வமான பார்வைக் கொண்டிருந்தார். குழப்ப நிலைகளைத் தவிர்த்து அமைதியும் சமாதான நிலையும் நிலவ வேண்டும் என்ற கருத்தை இவர் கொண்டிருந்தார். அத்தோடு முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பேணுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற போக்கும் இவரிடம் இருந்தது.
---------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் இது ஒருவகையாகும். அல்குர்-ஆன், ஸுன்னா, ஸஹாபாக்கள், தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்தும் போக்கே இதுவாகும். அல்குர்-ஆனினதும் ஸுன்னாவினதும் வசனங்களுக்குக் காரணங் காணுவதில் இவர்கள் ஆழ்ந்து போக மாட்டார்கள். அல்குர்-ஆன் ஸுன்னாவுக்கு அடுத்தபடியாக ஸஹாபாக்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்துவார்கள். தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்கு அல்லது அவர்களில் பெரும்பாலோரது கருத்துக்கு இவர்கள் ஒரு பெறுமானத்தைக் கொடுப்பர்.(மொழிபெயர்ப்பாளன்).
---------------------------------------------------------------------------------------------------------
அநியாயக்காரனாக இருந்தாலும் தன் பலத்தால் ஆட்சிக்கு வந்த இமாமுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை விட அவருக்குக் கட்டுப்படுவதே கடமையானது எனவும் அவர் கூறினார். ஒரு சர்வாதிகார ஆட்சியாளன் பல வருடங்கள் திட்டமிட்டுச் செய்யும் அநியாயங்களை விட கூடுதலான அநியாயங்களை அவனுக்கெதிரான ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தும். இது பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தி விடும் என இமாம் இக்கருத்திற்கு நியாயம் கூறினார். இக்கருத்து இமாம் மாலிக்கின் கருத்தை ஒத்திருக்கிறது எனக் கூறலாம்.

ஆயினும் இமாம் மாலிக்குக்கும், அஹ்மதுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கு அவதானிக்க வேண்டும். இமாம் மாலிக் அரசுக்கெதிரான் ஆயுதப் போராட்டத்தின் குழப்ப நிலைகளையும் கண்டார். ஆட்சியொன்று கவிழ்வதையும் அதன் பாரிய குழப்ப நிலைகளையும் கண்டார். ஏனெனில், இமாம் மாலிக் இருவேறு கிலாபத்துக்களைக் கண்டவர். இரு காலப்பிரிவுகளிலும் வாழ்ந்தவர். இவ்விரு காலப்பிரிவுகளிலும் போராட்டங்களும் குழப்ப நிலைகளும் வலுத்திருந்தன. அவற்றை இமாம் மாலிக் கண்டதோடு அக்காலப் பிரிவுகளிலேயே வாழ்ந்தார். எனவே, அவற்றால் அவர் பாதிக்கப்பட்டார்.

ஆயினும், இமாம் அஹ்மத் குழப்பநிலைகளை அதிகமாக அவதானிக்கவில்லை. அவரது காலப்பிரிவு குழப்ப காலப்பிரிவை அண்மித்ததாக இருக்கவும் இல்லை. அமீனுக்கும், மஃமூனுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தையும் அதனால் விளைந்த குழப்பநிலையையுமே இமாம் அஹ்மத் அவதானித்தார். அக்குழப்ப நிலையின் விளைவு இறுதியில் மோசமாக அமைந்ததையும் இமாம் கண்டார்.

அதாவது பாரசீக ஆதிக்கம் ஆட்சியில் வேரூன்றியது. பித்அத்கள் பரவின. இஸ்லாத்துக்குப் புறம்பான சிந்தனைகள் அதிகாரபீடத்தில் ஆதிக்கம் செலுத்தின. பித்அத் போக்காளர்கள் ஆட்சியாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தினர். அவர்களால் இமாம் சிறைவாசத்திற்கு உட்பட்டார்; துன்புறுத்தவும் பட்டார். மஃமூன், முஃதஸிம், வாஸிக் என தொடராக வந்த மூன்று ஆட்சியாளர்களால் அவர் துன்புறுத்தப்பட்டர். எனினும், இவை எதுவும் இமாம் அவர்களது உள்ளத்தில் பழிவாங்கும் உணர்வையோ ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சிந்தனையையோ விதைக்கவில்லை.

சிறையும் அங்கு கிடைத்த சித்திரவதைகளும் சட்டங்களை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவில்லை. அப்படி நடந்திருப்பின் அது மனோஇச்சையின் விளைவாகப் போயிருக்கும் அல்லது தமது காலப்பிரிவு ஆட்சியாளர்கள் கொடுத்த துன்பங்களின் விளைவாகப் போயிருக்கும். ஆதாரபூர்வமான ஸுன்னா, இஸ்லாத்தின் ஆரம்ப சந்ததியினரின் நடைமுறை, அவர்களது அனுபவங்கள் என்பவற்றிலிருந்தே கிலாபத் பற்றியும், அதற்கு எதிராக ஆயுதம் தூக்குவது பற்றியுமான சட்டங்களை இமாம் வகுத்தார். அத்தோடு இமாம், சமூக நலன்களையும் கவனத்தில் கொண்டார். சாதாரண எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இமாம் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை மறுத்தார். ஆட்சியாளர் நிலை எவ்வாறு இருப்பினும் அவருக்கெதிராக ஆயுதம் தூக்குவது அத்துமீறிய நடவடிக்கை என்றே இமாம் கணித்தார். தன்னைச் சித்திரவதை செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதைக் கூட இவ்வாறே இமாம் கருதினார்.

இறைவன் நாடினால் வளரும்....

நூலாசிரியர் பற்றி... | முன்னுரை | பதிப்புரை | முந்தைய பகுதி

Thursday, September 08, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -11

இமாம் அவர்களது காலத்து அரசியல் சூழல் பற்றி இங்கு விளக்குவது அவசியம். உமையாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள் இப்போது பலவீனமுற்றிருந்தன. ஷீயா, கவாரிஜ்கள் என்ற இரு முக்கிய பிரிவினரே ஆயுத முனையில் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடியவர்கள். இக்காலப்பிரிவில் இவர்கள் பலவீனமுற்றுப் போனதனால் குழப்ப நிலைகள் நீங்கி ஓரளவு அமைதி நிலவியது. இவர்கள் இரு சாராரும் ஆயுதங்களை வைத்து விட்டு பேனா என்ற ஆயுதத்தைத் தூக்க இப்போது ஆரம்பித்திருந்தார்கள். ஏனெனில் அரசு, ஆயுத மோதலுக்குப் பதிலாக கருத்துப் பரிமாறலொன்றை ஏற்படுத்தும் வகையில் பல அமர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த வகையில் பல சிந்தனைகளைச் சீர்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. எனவே, ஒவ்வொரு பிரிவினரும் ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக தங்கள் சிந்தனைகளை ஆதாரங்களோடு பதிய முனைந்தனர். கருத்து ரீதியாக தம் சிந்தனைகளைப் பாதுகாக்க முனைந்தனர். இப்பின்னணியில் மக்கள் பல்வேறு கலைகளிலும், அறிவுத் துறைகளிலும் ஈடுபாடு காட்டலானார்கள்.

மொழி அறிஞர்கள் இலக்கண விதிகளை வகுக்க ஆரம்பித்தார்கள். கலீல் இப்னு அஹ்மத் போன்ற இலக்கிய அறிஞர்கள் யாப்பிலக்கணத்தை வகுக்கலானார்கள். இஸ்லாமிய சட்டம், ஹதீஸ், தப்ஸீர் போன்ற துறைகள் இவ்வகையில் வகுக்கப்படலாயின. அப்போதைய இஸ்லாமிய அரசும் மேற்கே ஸ்பெயினிலிருந்து கிழக்கே சீனா வரையில் பரந்து விரிந்திருந்தது. எனவே, வளர்ச்சியடைந்த நகரங்கள் பல உருவாயின.ஒ வ்வொரு நகரும் பிரசித்தி பெற்ற அறிஞர்கள் பலரால் பிரபல்யம் ஆகியது. விளைவாக அறிவு தேடுவதற்கான பயணங்களும் அதிகரித்தன.

அப்பாஸிய கலீபாக்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும், வீண் விளையாட்டுக்களில் சற்று அளவு மீறி ஈடுபாடு கொண்டவர்களாகவும், தடுக்கப்பட்ட, ஹராமான சில செயல்களை நெருங்கிச் சென்றவர்களாகவும் இருந்தார்கள். இத்தகைய சில பலவீனங்கள் அவர்களில் பலரிடம் காணப்பட்டபோதிலும் அவர்கள் மார்க்க உணர்வு கொண்டவர்களாக இருந்தார்கள். அறிஞர்களை நெருக்கமாக்கிக் கொண்டார்கள். அவர்களை உயர்த்தி மதித்தார்கள். அவர்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். அத்தோடு அறிவுக்கான வழிகளையும்,படி ப்பதற்கான வசதிகளையும் நன்கு ஏற்படுத்தினார்கள். மார்க்கத்திற்குப் புறம்பான சிந்தனைகளோடும், முஃதஸிலாக்களோடும் போராட அறிஞர்களின் உதவியையும் பெற்றார்கள். மஃமூன், வாஸித், முஃதஸிம் போன்ற சிலர் முஃதஸிலாக்களுக்கு ஆதரவாக நின்று அறிஞர்களை ஒதுக்கி அவர்களைத் துன்புறுத்தினார்கள் என்பது உண்மையாயினும் அப்பாஸிய கலீபாக்களில் ஏனையோர் அவ்வாறு இருக்கவில்லை. குறிப்பாக ஹாரூன் ரஸீத் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள், ஹதீஸ் துறை அறிஞர்கள், உபதேசகர்கள் போன்றோரைத் தனக்கு நெருக்கமாக வைத்து கொண்டார். முஃதஸிலாக்களை அவர் சிறை வைத்ததாக வரலாற்றில் பதிவுள்ளது. கலீபா முதவக்கிலும் முஃதஸிலாக்களை ஒதுக்கி இஸ்லாமிய அறிஞர்களை மீண்டும் பலம் பெற்றவர்களாக மாற்றினார்.

இந்த வகையில் பொதுவாக அப்பாஸிய கலீபாக்கள் சிலபோது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு இருந்தாலும் அறிஞர்களின் உபதேசங்களைச் செவிமடுத்தார்கள்.

அறிஞர்களுக்குக் கிடைத்த இந்த அந்தஸ்தின் காரணமாக அறிவு தேடும் போக்கு சமூகத்தில் வளர்ந்தது. குறிப்பாக அறிவுமன்றங்கள் கலீபாக்கள், கவர்னர்களின் மாளிகைகளில் தொடர்ந்தமையும் அங்கு கவிஞர்களும், சட்ட அறிஞர்களும், பல் தரப்பட்ட அறிவுத்துறைகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களும் போட்டி போட்டுக் கொண்டு சென்றமையும் அறிவு தேடுவோருக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.

இறைவன் நாடினால் வளரும்....


நூலாசிரியர் பற்றி... முன்னுரை பதிப்புரை முந்தைய பகுதி

Monday, August 08, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -10

03.இமாம் ஷாபிஈயும் சமூக மாற்றமும்.

இமாம் ஷாபிஈ அப்பாஸிய காலப் பிரிவில் ஹிஜ்ரி 150-ல் பிறந்தார். இவ்வாண்டிலேயே இமாம் அபூஹனீபாவும் மரணித்தார். இமாம் ஷாபிஈ இமாம் மாலிக்கிடம் கற்றார். குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் இமாம் மாலிக்கிடம் கல்வி கற்பதிலேயே ஈடுபட்டிருந்தார். பின்னர் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ள நஜ்ரானில் அரச தொழிலொன்றையும் செய்தார். அத்தொழில் மூலம் நீதியை நிலைநாட்டினார் என்பதோடு தனக்கு இழைக்கப்படும் அநீதிகள், தீங்குகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டார். குறைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்தவராகவும் இறைதூதர் (ஸல்) அவர்களின் வம்சாவழியைக் கொண்டவராகவும் இருந்தமையால் 'அலவி' பிரிவினரைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்டார். அப்போது அப்பாஸியர் அலவி தலைவர்களையும், அவர்களது செயற்பாடுகளையும் தேடித் திரிந்து வந்தமையே இதன் பின்னணியாகும். இந்த வகையில் சூழ்ச்சியாலும் பொய் முறையீடுகளாலும் இமாம் ஷாபிஈ கைது செய்யப்பட்டு பக்தாதுக்கு அனுப்பப்பட்டார். இது ஹிஜ்ரி 184-ல் நிகழ்ந்தது.

இமாம் அவர்களுக்கு ஏற்பட்ட இந்தத் துன்பம் அருளாக அமைந்தது எனக் கூறக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இமாம் பாக்தாதில் இமாம் அபூஹனீபாவின் மாணவர் முஹம்மத் இப்னு ஹஸனைச் சந்தித்தார். ஏற்கனவே ஹிஜாஸ் பிரதேச சட்ட அறிவு இவரிடம் இருந்தது. இப்போது ஈராக்கிய சட்ட அறிவையும் முஹம்மத் இப்னு ஹஸனிடமிருந்து கற்றுக் கண்டார். இந்த வகையில் அறிவுசார் சட்ட அறிவும், பாரம்பரிய சட்ட அறிவும் இமாமிடம் ஒன்றிணைந்தன.

பின்னர் மீண்டும் மக்கா திரும்பினார். ஹஜ்ஜின்போது பெரும் அறிஞர்களைச் சந்தித்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களில் ஒருவர். இந்த வகையில் பல அறிஞர்களது சிந்தனைப் போக்கையும் இமாம் படித்துத் தேர்ந்தார். அதன் விளைவாக இமாம் அவர்களால் தனியானதொரு சிந்தனைப் போக்கை உருவாக்க முடிந்தது. வித்தியாசமான இருவகை சட்ட சிந்தனைப் போக்கையும் ஆழ்ந்து படித்ததன் பின்னர் மக்காவில் ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் இமாம் ஷாபிஈ தங்கி இருந்தார். அங்கு பலருடனும் கருத்துப் பரிமாறல்களையும், வாதப் பிரதிவாதங்களையும் நடாத்தினார். வித்தியாசமான பல கருத்துக்களையும், வேறுப்பட்ட சிந்தனைப் போக்குகளையும் அவற்றினூடே அவதானித்தார்.

இவ்வாறு இமாம் ஷாபிஈ நன்கு கற்றுத் தேர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்றதன் பின்னர் சட்ட ஆக்கத்திற்கான விதிகளையும், கொள்கைகளையும் வகுக்கத் துவங்கினார். பின்னர் பக்தாதுக்கு இரண்டாம் முறையாக ஹிஜ்ரி 915-ல் வந்தார். அப்போது இமாமிடம் இதுவரை காணாத தனியான சட்ட ஆய்வு முறைமை இருந்தது. பக்தாத் வந்த இமாம் கலீபா மஃமூனின் சபையில் பாரசீக செல்வாக்கு இருந்ததை அவதானித்தார். இது இஸ்லாமிய சிந்தனையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதிகளாக அக்காலத்தில் கணிக்கப்பட்ட முஃதஸிலாக்கள் கலீபாவிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். கலீபாவின் எழுத்தாளர்களாகவும், நெருங்கிய அந்தரங்கமானவர்களாகவும் இவர்களே காணப்பட்டனர். தமது கொள்கைப் போக்குடன் ஒத்து வராத அறிஞர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்களாகவும் இவர்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில் அவமானப்படத்தக்க நாட்டில் நிலைக்க இமாம் ஷாபிஈ விரும்பவில்லை. தனது நம்பிக்கை குறித்து பல வாதங்களை நடத்திய பிறகே இமாம் இம்முடிவுக்கு வந்தார். இமாம் ஷாபிஈயின் கீழ்வரும் கவிதை இந்த உண்மையை விளக்குகிறது.

அவமானம் தரும் நாட்டில் மரியாதைக்குரியோர் இருப்பது
அதனை விட்டு புறப்பட முடியுமானால்
சாத்தியமற்ற ஒன்றே.


இந்த நிலையில்தான் "அல்குர்ஆன் படைக்கப்பட்டதா?" என்ற இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்ற பிரச்சினை தோன்றியது. சட்ட, ஹதீஸ்துறை அறிஞர்களுக்கு இது பெரும் சோதனையாக அமைந்தது. இந்நிலையில் கலீபா மஃமூன் இமாம் ஷாபிஈ அவர்களுக்கு நீதிபதிப் பதவியை அளித்தார். எனினும், இமாம் அதனை ஏற்கவில்லை. இமாமின் சிந்தனைப் போக்குக்கு இதுவே பொருத்தமானதாகும்.

இவ்வகையில் பக்தாதில் தங்கியிருப்பதும் இமாம் ஷாபிஈக்குப் பொருத்தமாக இருக்கவில்லை. அங்கிருந்து பயணப்பட வேண்டிய நிலையே உருவாகியது. பயணப்பட்டுப் போய் வாழ வசதியானதும், பொருத்தமானதுமான இடமாக இமாம் எகிப்தைக் கண்டார். அங்கு பயணப்படும் போது கீழ்வருமாறு பாடினார்கள்.

எனதுள்ளம் எகிப்து செல்ல ஆசை கொள்கிறது
அதற்கு பாலை நிலங்களையும்
பல பூமிகளையும் கடக்க வேண்டும்
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
வெற்றிக்கும் செல்வத்திற்கும்
நான் அழைக்கப்படுகிறேனா?!
அல்லது மரணக் குழியை நோக்கித்தான்
அழைக்கப்படுகிறேனா?
எனக்குத் தெரியவில்லை!


மக்களது மனப்போக்குகளை இமாம் ஷாபிஈ ஆழமாகப் புரிந்திருந்தார். புரிந்து கொள்ளும் நுண்ணிய பார்வைத் திறன் அவருக்கிருந்தது. பயணங்கள் செல்வதில் மிகுந்த விருப்பமுடையவர்களாவும் இமாம் இருந்தார். எனவே, மக்களது கொடுக்கல் வாங்கல்கள், பழக்க வழக்கங்கள் அவர்களது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றியெல்லாம் இமாம் நன்கு அறிந்திருந்தார். கீழ்வரும் இமாமின் கவிதை இக்கருத்தை விளக்குகிறது.

கிழக்காகவும் மேற்காகவும்
நாடுகளெல்லாம் சுற்றித்திரிவேன்
என் தேவையைப் பெறுவேன்.
அல்லது ஊருக்குப் புதியவனாக இறப்பேன் நான் அழிந்தால்
அல்லாஹ்வே அதனைக் காப்பான் தப்பினால்
அண்மையில் நான் மீண்டு வரலாம்.


உண்மையில் பயணங்கள் ஒரு சட்ட அறிஞனுக்கு நிறைய அறிவைக் கொடுக்கக் கூடியன என்பதோடு பயணம் இயல்பாகவே பல அனுபவங்களையும் தரக் கூடியது.

இறைவன் நாடினால் வளரும்....

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -9

இந்த வகையில் குழப்ப நிலையின் போது புரட்சியாளனின் பக்கமோ ஆட்சியாளனின் பக்கமோ இமாம் மாலிக் நிற்கவில்லை. இருபிரிவிலும் யாருக்கும் உதவ முடியாது என அவர் கருதினார். ஏனெனில், இரு பிரிவினரும் பாவத்தில் வீழ்ந்துள்ளனர் என அவர் கருதினார். "கலீபாவுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு எதிராகப் போராடுவது ஆகுமா?" என இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "உமர் பின் அப்துல் அஸீஸ் போன்ற ஒருவருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்களாயின் ஆகும்" என்றார். "உமர் இப்னு அப்துல் அஸீஸைப் போல் ஆட்சியாளன் இல்லாவிட்டால்" என மீண்டும் இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "அப்படியாயின் அல்லாஹ் ஓர் அநியாயக்காரன் மூலம் இன்னோர் அநியாயககாரனை பழிவாங்குகிறான். பின்னர் இருவரையுமே பழிவாங்குவான். விட்டு விடு" என்றார்.

இமாம் மாலிக் இலட்சியவாதத் தோற்றங்களோடு மட்டும் நின்றுவிடாது யதார்த்த நிலையையும் அவதானிக்கும் போக்குக் கொண்டவர். இந்த வகையில் இப்போக்கை அவர் கடைபிடித்தார். ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர்கள் செய்ய முயலும் சில தீய செயல்களை அழித்துவிடலாம். அதேவேளை முழுமையாக அவர்கள் சீர்திருந்தி உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஒருவர் அவர்களில் தோன்றவும் கூடும். எனவே, கவர்னர்கள் ஆட்சியாளர்களிடம் இமாம் மாலிக் சென்றார்; அவர்களுக்கு உபதேசித்தார்; வழிகாட்டினார்; நற்செயல்களின் பக்கம் அழைத்தார். அவர் செய்த ஆழ்ந்த உபதேசங்கள் பல இன்றும் காணக் கிடைக்கின்றன.

கலீபா அபூ ஜஃபர் மன்சூர், மஹ்தி, ஹாரூன் ரஷீத் போன்றோர் விடயத்தில் பல சந்தர்ப்பங்களில் இமாம் மாலிக் எடுத்த நிலைப்பாடுகள் மிகுந்த பாராட்டுக்குரியன; மிகுந்த கண்ணியத்திற்குரியன. இமாம் மாலிக் கலீபாக்களைச் சந்திக்கும் போது தம்மை மிகுந்த கண்ணியத்தோடு வைத்து கொள்வார். அது தனது உபதேசத்திற்கு நல்ல பாதிப்பைத் தரும் என்று அவர் கருதினார். ஆட்சியாளர்களைச் சூழ இருப்போர் அவர்களைப் பொய்யாகப் புகழ்வது அவர்களது பிழையான செயல்களையும் சிறந்ததாகக் காட்டும்போக்கு பற்றியே மாலிக் பெரிதும் பயந்தார். ஏனெனில், இந்த நிலையில் எவரின் உபதேசமும் வழிகாட்டலும் அவர்களிடம் பயன்கொடுக்காது போகும் என அவர் உணர்ந்தார்.

இமாம் மாலிக்கின் இத்தகைய சிந்தனைப்போக்கிற்கும் நடத்தைக்கும் அவரது இயல்பான அமைதியான போக்குக் கொண்ட ஆளுமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த வகையில் சமூக ஸ்திர நிலை சிறந்த மாற்றத்திற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்கும் என இவர் கண்டார். இந்நிலையில் மோசமான நிலையிலிருந்து நல்ல நிலைக்கும், நல்ல நிலையிலிருந்து மிகச் சிறந்த நிலைக்கும் படிபடியாகச் செல்ல முடியும் என அவர் கண்டார்.

இறைவன் நாடினால் வளரும்....

Saturday, August 06, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -8

02.இமாம் மாலிக்கும் சமூக மாற்றமும்.

இமாம் மாலிக் ஹிஜ்ரி 92 இல் பிறந்து 179 இல் இறந்தார். 90 ஆண்டுகளைக் கொண்ட தனது இந்நீண்ட வளமிகுந்த ஆயுளில் இரு பெரும் அரசுகளைக் கண்டார். இக்காலப் பிரிவில் இஸ்லாமிய ஆட்சி விரிந்து பரந்திருந்தது. அவர் இக்காலப் பிரிவில் நிகழ்ந்த குழப்ப நிலைகளையும் பாரியளவு மனித உயிர்களைப் பலிகொண்ட புரட்சிகளையும் கண்டார். கவாரிஜ்களும் அலவிகளும் ஆயுதம் ஏந்திய புரட்சிகளையும் அவதானித்தார். இவற்றின் விளைவால் சத்தியம் நிலைநாட்டப் படவோ அசத்தியம் அழிக்கப்படவோ செய்யாது என்பதை உணர்ந்தார். சமூகத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை அவர் அவதானித்தார். தனக்கு முன் வாழ்ந்த தனது ஆசிரியர்களிடம் அப்போது நிகழ்ந்த, அவர்கள் வாழ்ந்து அவதானித்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இமாம் மாலிக் பெற்றார்.

'ஹர்ரா' யுத்தம் என்றழைக்கப்படும் யுத்த நிகழ்ச்சி பற்றியும் அவ்வேளை இறைதூதர் [ஸல்] அவர்களின் புனிதஸ்தலமான மதீனா எவ்வளவு தூரம் மோசமாக சீரழிக்கப்பட்டது என்பதையும் அதனைக் கண்ட தமது ஆசிரியர்களிடம் இமாம் கேட்டறிந்தார். அப்துல்லாஹ் இப்னுஸுபைருக்கும் அப்துல் மலிக் பின் மர்வானுக்கும் இடையிலான யுத்த நிகழ்வையும் இமாம் அறிந்தார். அப்போது அல்லாஹ்வின் புனிதஸ்தலமான கஃபாவும் கூட பாதிக்கப்பட்டதை அறிந்திருந்தார். மன் ஜனீக் என்ற கோபுர வடிவ ஆயுதத் தக்குதலுக்கு அது உட்பட்டது. முழு ஹிஜாஸ் பிரதேசமும் படைத் தரப்பினரின் வெறித்தனமான மிக மோசமான செயற்பாடுகளூக்கு உட்பட்டுச் சீரழிந்தது. உண்மையில் அப்பிரதேசம் மக்கள் அமைதி தேடிச் செல்லும் பூமி, புனித வணக்கக் கிரியைகளின் பூமி. ஆனால் கண்மூடித்தனமான குழப்பநிலைகள் இப்படித்தான் எதனையும் விட்டு வைப்பதில்லை; புனிதமும் புனிதமல்லாததும் அதற்கு ஒன்றுதான்.

இத்தகையதொரு நம்பிக்கையிழந்த சூழலில் வாழ்ந்தவர், மிகச் சரியான ஷுறா அடிப்படையிலான ஆட்சி தோன்றுவதில் நம்பிக்கை இழப்பது இயல்பே. அபூபக்கர், உமர், உஸ்மான் [ரழி] போன்றோர் கால உன்னத ஆட்சியை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடு இக்காலப் பிரிவில் மிகக் குறைவு என இச்சூழ்நிலையினைக் கருதுவது மிக யதார்த்தமானது என்பதில் சந்தேகமில்லை. எனவே,இருக்கும் நிலையை அங்கீகரிப்பது தவிர வேறு வழியில்லை. இஸ்லாம் வேண்டுகின்ற அந்த ஆட்சிமுறை என்பதலல்ல-யதார்த்தத்தை உணர்ந்து கொண்டதால் வந்த முடிவே இதுவாகும்.

இருக்கும் சமுக நிலையை மாற்ற முற்பட்டால் பெரும் தீமைகளுக்கு அது இட்டுச் செல்லும்; பாரிய சீர்கேடுகளைத் தோற்றுவிக்கும்; நல்ல விளைவுகளை எதிர் பார்ப்பது மிகக் கடினம் என்ற யதார்த்த உண்மைகளே இம்முடிவுக்கு வர அவரை நிர்பந்தித்தன. அத்தோடு அதுவரையிலும் நிகழ்ந்த போராட்டங்களும் ஆட்சிக்கெதிரான அனைத்து முயற்சிகளும் இருந்த நிலையை இன்னும் மிக மோசமான நிலைக்கே இட்டுச் சென்றுள்ளன என்ற வகையில் இரு விடயங்களில் ஒன்றைத் தெரிவு செய்ய முற்படும்போது குறைந்த பாதகம் கொண்டதைத் தெரிவு செய்தலே புத்திசாலித்தனமான செயல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். எனவே இமாம் மாலிக் அமைதி நிலையைச் சமாதானத்தைத் தெரிவு செய்தார் என்றால் இருந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டார் என்பது அதன் பொருளன்று. அது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்; மாற்ற முடியாத ஒரு நிலை என்பதே காரணமாகும்.

இந்த வகையில் ஆட்சிக்கெதிரான புரட்சி பெரும் குழப்பநிலைக்கும் இரத்தம் சிந்தலுக்கும் இட்டுச் செல்லும் என அனுபவங்களின் அடியாக இமாம் மாலிக் உறுதியாக நம்பினார். எனவே, ஆட்சிக்கெதிரான புரட்சி சரியான நிலைப்பாடு என அவர் காணவில்லை.

ஆட்சிக்கெதிரான புரட்சி குழப்பநிலையை உருவாக்கும்; சமூக ஒழுங்குகளில் சீர்குலைவை ஏற்படுத்தும்; மக்கள் நிலைமைகளைக் குழப்பிவிடும்; உயிருக்கும் மானத்திற்கும் செல்வத்திற்கும் அழிவையும் பாதகத்தையும் ஏற்படுத்தும் என இமாம் கண்டார். திட்டமிட்டு பல வருடங்களில் சாதிக்க முடியாத அநியாயத்தைச் சில மணித்தியாலக் குழப்பம் ஏற்படுத்தி விடும் என அவர் கருதினார். இந்த வகையில், இமாம் மாலிக் ஆட்சிக்குக் கட்டுபடாது புரட்சி செய்யும் கருத்தை ஏற்கவில்லை. அப்படியான புரட்சியின் பிரச்சாரகராகவும் இருக்கவில்லை. அத்தகைய புரட்சிக்கு ஒத்துழைக்கவும் இல்லை. அதேவேளை, அவரது காலத்தில் வாழ்ந்த கவர்னர்களுக்கோ கலீபாக்களுக்கோ சார்பான பிரச்சாரகராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ அவர் இருக்கவில்லை. யாருடைய பிரச்சாரகராகவும் நிற்காது நடுநிலையைக் கடைபிடித்தலே சரியான நிலைப்பாடு என அவர் கண்டார். குழப்பநிலைகளை வெறுத்த இமாம் மாலிக்கின் இந்த நிலைப்பாடு, மதீனாவில் அவர்களது காலப்பிரிவில் ஒரு வித்தியாசமான நிலைப்பாடாக இருக்கவில்லை. மதீனாவின் அறிஞர்களும் இதே போக்கையே கொண்டிருந்தார்கள்.

பிரிவினைக்கு வழிவகுக்காது சமூகத்திலிருந்த ஆட்சிக்கு இமாம் மாலிக் கட்டுப்பட்டார்கள். ஆயினும், தனது காலத்து ஆட்சியாளர்களின் ஆட்சி இஸ்லாத்தின் சட்டதிட்டங்களுக்கும் அல்குர்-ஆனின் வழிகாட்டலுக்கும் முழுமையாக உட்பட்டிருந்தது என அவர் காணவில்லை. ஓரளவான சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கலாம் என்ற வகையிலேயே ஆட்சிக்குக் கட்டுப்படுதலை இமாம் மாலிக் ஏற்றார். குழப்பநிலைகள், பிரச்சினைகள் நீங்கிய அமைதியான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் ஏற்படுத்தும் பாதிப்பு பாரியதாக அமையலாம் என அவர் கருதினார்.

எனவே, நல்லுபதேசத்தினூடாகவும் உரிய இடத்தில் சத்தியத்தைப் பேசுவதனூடாகவும் சீர்திருத்த முயற்சியில் அவர் ஈடுபட்டார். வழிகாட்டும் பொறுப்புகளையும் அவர் ஏற்றார். ஆட்சியாளனைச் சீர்திருத்துவதிலும் கூடிய கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆட்சியாளனின் சீரிய நிலை ஆளப்படுவோரின் சீரான நிலைக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இறைவன் நாடினால் வளரும்....

Friday, August 05, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -7

ஹுஸைன் இப்னு அலி [ரழி] அவர்கள் யஸிதுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தபோது அதிகமான நபித்தோழர்கள் உயிர் வாழ்ந்தனர். தாபிஈ சட்ட அறிஞர்கள் எல்லோருமே அப்போது உயிர் வாழ்ந்தார்கள். ஆயினும் எந்த ஸஹாபியும் தாபிஈயும் ஹுஸைன் [ரழி] அவர்களின் செயற்பாட்டை ஹராம் என்று சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் ஹுஸைன் [ரழி] அவர்கள் போராடச் செல்வதை தடுத்தார்கள். காரணம் 'ஈராக்வாசிகள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல; போராட்டம் பல அபாயங்களைக் கொண்டது. அது வெற்றியடையும் சாத்தியம் மிகக் குறைவு' என்றுதான் தடுத்தார்கள். அநியாயக்காரர்களுக்கு எதிராக, வழிபிறழ்வோருக்கெதிராக போராடல் சட்டரீதியானது. எனினும் போராடும் முன்னர், வெற்றிசாத்தியமானதுதானா? குறித்த இலக்கை அடைந்து கொள்ள முடியுமா? வழிபிறழ்ந்த ஆட்சியை அகற்றியதன் பின்னர் சிறந்த ஆட்சியொன்றை அமைப்பது சாத்தியம்தானா? என்பவற்றை உறுதிப்படுத்தலும் திட்டமிட்டுக் கொள்ளலும் மிக அவசியமாகும். இந்த வகையில் ஸஹாபாக்கள் சிலர் ஹுஸைன் [ரழி] அவர்களோடு கருத்து வேறுபட்டிருப்பின் அது திட்டமிடல், விளைவு சாத்தியப்பாடு என்பன குறித்ததாக அமைந்ததே தவிர போராட்டம் ஆகுமானதா இல்லையா என்பது குறித்தல்ல.

ஹஜ்ஜாஜின் அத்துமீறிய ஆட்சியின்போது அப்துர் ரஹ்மான் அல் அஸ் அத்தின் தலைமையில் நடந்த புரட்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். இப்புரட்சியின்போது ஸளீத் இப்னு ஸுபைர், ஷஃபி இப்னு அபி லைலா அபுல் புக்திரி போன்ற பல பெரும் சட்ட அறிஞர்களைக் கொண்ட ஓர் இராணுவப் பிரிவு இப்னு அஸ் அதுக்குச் சார்பாக நின்றதாக இப்னு கஸிர் குறிப்பிடுகின்றர்.

இப்போராட்டத்தில் கலந்து கொள்ளாது ஓதுங்கிக் கொண்ட எந்த அறிஞரும் இப்புரட்சியை ஆகுமானதல்ல எனக் கூறவில்லை. போரில் கலந்து கொண்ட சட்ட நிபுணர்கள் அஸ் அதின் படைமுன் நிகழ்த்திய உரைகள் இது அனுமதிக்கப்பட்டசெயல் என்பதைக் காட்டுகின்றன.

ஹஜ்ஜாஜின் காலப்பிரிரிவில் மக்காவில் புரட்சி செய்த இப்னு ஸுபைரின் செயர்பாடும் இதற்கு இன்னொரு உதாரணமாகும். இவ்வாறு ஆரம்பகால அறிஞர்கள் அநியாயக்கார ஆட்சிக்கெதிராக ஆயுதப் புரட்சி செய்தல் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். எனினும் இப்னு அஸ் அதின் புரட்சியின்போது சிறைபிடிக்கப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் பசியலும் தாகத்திலும் விடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இப்னு ஸுபைரின் புரட்சியின் போது 'மன் ஜனீக்' என்ற போர்க் கருவி மூலம் கஃபா தாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர்.

இமாம் அபூ ஹனீபா ஆயுதப் போராட்டத்தின்போது இத்தகைய மோசமான விளைவுகள் உருவாகலாம் என எதிர்பார்க்கவில்லை. ஆயினும் இப்புரட்சிகளின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் சக்தியை வீணாக அழிப்பதும் பெருந்தொகையானோர் கொல்லப்படலும் மட்டுமே நிகழ்ந்தது. எனவே மாற்றத்திற்கு வழி ஆயுதப் போராட்டமே என்ற முதலாம் நூற்றாண்டு அறிஞர்கள் கொண்டிருந்த கருத்து மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முதலாம் நூற்றாண்டில் பிறந்த அபூ ஹனீபாவும் அக்கருத்தையே கொண்டிருந்தார்களெனினும் இமாம் அபூ ஹனீபாவின் சிந்தனைப் பாதிப்புக்குட்பட்ட அபூ யூசூப் போன்ற அவரது மாணவர்கள் அபூ ஹனீபாவின் இக்கருத்துப் போக்கினைக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். புரட்சிகளின் விளைவுகள் தந்த பாடத்தினால் முஸ்லிம் சமூகத்தில் இன்னொரு கருத்து தோன்றலாயிற்று. இக்கருத்தே அஹ்லுஸ் ஸுன்னாவின் பொதுக் கருத்து என அழைக்கப்படுகின்றது.

ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றமான இக்கருத்து தோன்றுவதற்கு முதலாம் நூற்றாண்டின் சட்ட அறிஞர்களுக்குப் புரியாமல் போன சில திட்டவட்டமான அல் குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களே காரணமாயின என்று ஒரு போதும் கூற முடியாது. ஆட்சி மாற்றத்திற்குப் பிரயோகிக்கப்பட்ட வன்முறை வழிமுறை அடைந்த தொடர் தோல்விகளும் அதன் விளைவாக உருவான பாரிய உயிர் அழிவும் பல்வேறு குழப்ப நிலைகளுமே இவ்விரண்டாம் கருத்து தோன்றக் காரணமாயின.

இந்தவகையில் புதிய மாற்றங்களுக்கும் புரட்சிகளால் நிகழ்ந்த சமூக விளைவுகளுக்கும் ஏற்ப புதியதொரு கருத்தை முன்வைக்கும் வகையில் இமாம் மாலிக் அடுத்து தோன்றுகின்றார்.


இறைவன் நாடினால் வளரும்....

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -6

இமாம் அபூ ஹனீபா நப்ஸ் ஜகிய்யாவின் சகோதரர் இப்றாஹீமுக்கு பைஅத் செய்யுமாறு தூண்டி வந்தார். அவரோடு போராட இணைந்து கொள்வது ஸுன்னத்தான ஹஜ்ஜுக்குச் செல்வதைவிட உயர்ந்தது என பத்வா வழங்கினார். ஹனபி மத்ஹபின் உயர்ந்த சட்ட அறிஞர்களான இமாம் ஜஸ்ஸாஸ், மக்கீ," பத்வா பஜாஜிய்யா" என்ற நூலின் ஆசிரியர் ஆகியோர் இமாம் அபூ ஹனீபாவின் கீழ்வரும் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். "முஸ்லிம் சமூகத்திற்கு வெளியே நிராகரிப்பாளர்களோடு போராடுவதைவிட, முஸ்லிம் சமூகத்தை அதனுள்ளே காணப்படும் நெறிபிறழ்வுகளிலிருந்து விடுதலை செய்யப் போராடுவது சிறந்தது."

ஆபுபக்கர் அல் ஜஸ்ஸாஸ் தமது அஹ்காமுல் குர்ஆன் என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்; அநியாயங்களோடும் அநியாய ஆட்சியாளர்களோடும் போராடுவது குறித்த அவரது கருத்து பிரபல்யமானது. எனவேதான் இமாம் அவ்ஸாஇ 'அபூ ஹனீபாவின் எல்லா விடயங்களையும் நாம் ஏற்றோம்; சகித்துக் கொண்டோம். கடைசியில் அவர் வாள் தூக்குவது பற்றிய கருத்தைக் கொண்டு வந்தார். அந்நிலையில் அவரை எம்மால் எற்க, சகிக்க, முடியாமல் போய்விட்டது' என்கிறார் [அஹ்காமுல் குர் ஆன் வா- 1, பக்.81]

நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதை வாயால் செய்வது கடமையாகும். அது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் வாளால் தீமையைத் தடுக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. [அஹ்காமுல் குர் ஆன், வா- 1, பக்.81]. அதாவது உபதேசமும் நற்போதனைகளும் பயன்படாதபோது பரிகாரம் என்ற கருத்தை அபூ ஹனீபா கொண்டிருந்தார்.

இது இமாம் அபூ ஹனீபா மட்டும் கொண்டிருந்த கருத்தல்ல. இப்னு ஹஜர் பத்ஹுல் பாரியில் குறிப்பது போன்று இது ஆரம்பகால அறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது. ஹிஜ்ரி முதாலம் நூற்றாண்டில் வாழ்ந்த அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்த பேரறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது.

அபூபக்கர் [ரழி] அவர்கள் கலீபாவாக பை அத் செய்யப்பட்ட பின்னர் நிகழ்த்திய முதலாவது உரையில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்; 'அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நான் வழிப்பட்டு நடக்கும் வரை எனக்குக் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தால் எனக்குக்கட்டுப்பட்டு நடப்பது உங்களுக்கு கடமையன்று' [ஸுரா;இப்னு ஹிஷாம் வா௪, பக்- 211]

உமர்[ரழி] அவர்கள்கீழ்வாருமாறு கூறுகின்றார்; 'யார் முஸ்லிம்களின் ஆலோசனையின்றி ஒரு தலைவருக்கு பைஅத் செய்கின்றாரோ அந்த பைஅத் செய்யப்பட்டவருக்கு பைஅத் செல்லுபடியாகாது. அத்தோடு பைஅத் செய்தவர்களின் பைஅத்தும் நிறைவேறாது' (முஸ்னத் அஹ்மத் வா- 1, பக்- 391).

இறைவன் நாடினால் வளரும்....

Wednesday, March 18, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 11.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9, பாகம் 10

பணமா?

ஆசிரியர்: அடுத்து ஒரு கேள்வி. நான் கேட்கிறேன் என்பதற்காக யாரும் சொல்ல வேண்டாம். விஞ்ஞானபூர்வமான உண்மையை மக்களுக்குக் காட்டணும்கிறதற்காக கேக்கறேன். எப்படி ஆப்பரேஷன் தியேட்டரில் போய் நிர்வாணமாக சிகிச்சை செய்யறமோ அதுமாதிரி உண்மையை தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். மதம் மாறுவதற்கு இங்கே யாராவது ஒருத்தராவது பணம் வாங்கியிருக்கிறாங்களா?

ஒவ்வொருவர் சம்மதத்தோடும்....

(உமரும் கூட இருப்பவர்களும் ஒட்டு மொத்தமாக இல்லை என்று சொல்கிறார்கள்)

உமர்: நாங்க யாரும் பணம் வாங்கவும் இல்லை. கொடுக்கவும் இல்லை. மதம் மாறணும்கிற எண்ணம் வந்த பிறகு நாங்க ஒவ்வொரு வீடா போயி கேட்டோம் - கேட்ட பிறகு ஒட்டு மொத்தமா மதம் மாறணும்கிற முடிவுக்கு வந்து ஒரு பேப்பர்ல எழுதினோம். நாங்க யாருடைய தூண்டுதலும் இல்லாம நாங்களா மனமுவந்து இந்து மதத்திலிருந்தும் இந்து மதத்திலிருக்கிற 'பள்ளர்' என்ற பிரிவிலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறோம் என்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கித் தான் செய்தோம். இந்தப் புரளியெல்லாம் கிளப்பி விட்டது, இங்கே ஆர்.எஸ்.எஸ். ஒரு அய்யன் முளைச்சிருகிறான்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்

ஆசிரியர்: அவரு பேரு என்னங்க?

உமர்: அனந்தராமசேஷன்னு ஒரு அய்யன். அவரு தான் எல்லா புரளியும் கிளப்பி விடுகிறார். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தைப் போட்டு ஒருத்தரோடொருத்தர் சண்டையைக் கூட்டறதே அந்த ஆள்தாங்க. ஊரை அடிச்சு போட்டுருவோம்னு மிரட்டறதும் அந்த ஆள்தாங்க.

ஆசிரியர்: அவங்க வேலையே அது தானே. பிரிட்டிஷ் காலத்திலருந்து நாம பார்த்துக்கிட்டு தானே வர்றோம்.

உமர்: அவங்க பாலிசியே 'பிரிட்டிஷ் பாலிசிதானே.

இறைவன் நாடினால் வளரும்....

Wednesday, September 03, 2008

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 10.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?

ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?

உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

கிறிஸ்தவ மதம் மாறினால்....

ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?

உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.

இறைவன் நாடினால் வளரும்....

Sunday, June 22, 2008

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 9.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8

உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.

'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!

'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'

அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.

ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?

உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.

ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?

உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?

இறைவன் நாடினால் வளரும்....

Tuesday, December 25, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 8.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7


உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?

உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?

உமர்: சராசரி 5 பேரு.

ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.

உமர்: ஆமாம்!

முக்கியமானவரை மறப்பதா?

ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை இது மாதிரி தொந்தரவு இருக்குது.

இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் - நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?

உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.

ஏன்னா, அவங்க சாதி இந்துன்னு வைச்சுக்கிறாங்களே தவிர அரிஜன் என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.

அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு அரிஜனை இந்துவா ஏத்துகிறதில்ல.

ஆக முடியாது

இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி இந்துக்களுக்கும் அரிஜனனுக்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி அரிஜன் இந்து ஆக முடியும்?

ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.

இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?

உமர்: சந்திக்கலிங்க.

ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?

இறைவன் நாடினால் வளரும்.

Saturday, June 09, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 7.


இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்:
நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.
ஏது மரியாதை?

ஆசிரியர்: நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?

உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!

ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?

உமர்:
எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.
ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?

உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.

ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?

உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.

துவேஷமே காரணம்

ஆசிரியர்:
மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?
உமர்:
துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.
ஆசிரியர்: நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?

உமர்: ஆமா!

ஆசிரியர்:
இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?
இறைவன் நாடினால் வளரும்.

Thursday, June 07, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 6.


மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?
(ஒலிநாடா பதிவிலிருந்து தரப்படுகிறது)

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-

உமர்செரீப்:
இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க" என்று சொன்னேன்!
ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?

உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.

ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?

20 வருடம் முன்பே

உமர்செரீப்:
20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.
இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.
ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.
ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

Wednesday, June 06, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 5.


தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக 'திரிசூலம்' வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.

அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

'விசுவ இந்து பரிஷத்' ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் 'பக்தி போதை'யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.

மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!.

- கி. வீரமணி

இறைவன் நாடினால் வளரும்.

Saturday, February 03, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 4.


இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.


இறைவன் நாடினால் வளரும்.

Tuesday, January 30, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 3.


விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் அ,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.

சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.

மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.

இறைவன் நாடினால் வளரும்.

Saturday, January 27, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 2.

It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.

The incident was communally interpreted by the RSS and VHP as 'an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.' It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite,, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP's socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.

It is this break that a conservative upper-caste HINDU seemed unable to bear and accept-primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People's Awakening) to "warn" the HINDUS about "the international conspiracy to devour Hinduism". During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue.

The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for "national integration". The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.

இதன் தமிழாக்கம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.

இறைவன் நாடினால் வளரும்.

Tuesday, January 09, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 1.

முன்னுரை - கி.வீரமணி.
1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர்.

அவர்களை நான் அந்தப்பகுதிக்கு கழகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, இந்தச் சமூகப்பிரச்சினையில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று, அங்கே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், மதம் மாறாத அதே சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் - பல வயதுக்காரர்களையும் சந்தித்து, கேள்வி கேட்டு ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து அதையே ஒரு சிறு நூலாக அப்படியே அவர்கள் கூறியதை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாக்காது வெளியிட்டேன்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த நாள் 25-07-1981 ஆகும்!

அங்கே மொத்தம் உள்ள 300 குடும்பங்களில் 210 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியுள்ளனர். இவர்கள் 19-02-1981 அன்று மதம் மாறினார்கள்.

இந்த ஆண்டில்(2002) ஒரியண்டல் லாங்குமென்ஸ் லிமிடெட் புத்தக கம்பெனியினரால் வெளியிடப்பட்டுள்ள "Vishwa Hindu Parishad and Indian Politics" என்ற ஓர் ஆங்கில நூல் - இதன் ஆசிரியர் "மஞ்சேரி காட்ஜு" என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார். இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African Studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி பட்ட ஆய்வினை இந்த தலைப்பில் மேற்கொண்டு செய்தார். அது தான் மேலே காட்டிய நூலாக வெளிவந்துள்ளது.

அந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில், "Translation to Mass Activism" தீவிரதன்மை கொண்ட மக்கள் இயக்கமாக(வி.இ.ப) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.

In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1,300 almost all of whom were "Untouchables", became a centre of controversy when large-scale conversions to Islam were reported. For the VHP and its associate organizations, the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but "a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan," financed by petrodollars.

இறைவன் நாடினால் வளரும்.

Wednesday, December 27, 2006

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 4.

முஸ்லிகள் – இஸ்லாம்தான் இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க வல்ல மார்க்கம் என்பதை எடுத்துச் சொல்லிடவேண்டும்.

இந்த நிலையில் "இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்" எத்துணை பொருள் செறிந்த, காலத்திற்கேற்ற முழக்கம் என்பதை உணர்ந்தேன்.

அம்பேத்கர் "மதமாற்றம் தான் தீண்டாமைக்குத் தீர்வு" எனக் குறிப்பிட்டார். அம்பேத்கர் இஸ்லாத்திற்கு வந்திருக்கவேண்டும். அப்போது இருந்தவர்கள் இஸ்லாத்தைச் சரிவர அவரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்றே எனக்குப் படுகின்றது.

நான்: "இல்லை" (நான் குறுக்கிட்டேன்.)

"அம்பேத்கருக்கு அழைப்பே விடுக்கப்பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி ஹைதராபாத் நிஜாம் அவர்கள் அம்பேத்கர் அவர்களுக்கும் அவர்களோடு இஸ்லாத்திற்கு வருபவர்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்திட முன் வருவதாகச் சொன்னார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கல்வி கூடத்தை ஆரம்பிக்க முன் வந்த போது, அதற்கான இடத்தை அவர் பெறுவதில் முஸ்லிம்கள் பெருமளவில் உதவி செய்தார்கள்.

தலித் மக்களை மட்டுமே கொண்ட அந்தக் கல்விக் கூடத்தில் பாடங்கள் பயிற்றுவிக்க உயர்ஜாதி ஆசிரியர்கள் முன்வாராத போது முஸ்லிம்கள் முன் வந்தார்கள்.

அதே போல்தான் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்திற்கு முன்னால் நடை்பெற்ற வட்டமேஜை மாநாட்டில் ஜின்னா அத்தனை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், முஸ்லிம்களுக்குக் கிடைக்கவிருந்த சலுகைகளை விட்டுக்கொடுத்திடவும் தயாராக இருந்தார்.

இதற்கு அம்பேத்கர் அவர்களும் நன்றி சொல்லியுள்ளார்கள்"

என்று அவரிடம் விளக்கிவிட்டு, "நீங்கள் அடுத்து என்ன செய்வதாகத் திட்டம்?" என்று கேட்டோம். அவர் தொடர்ந்தார்.

பிலால் சாஹிப்: அடுத்து என் மக்களை விடுவிக்க என்னால் இயன்ற அளவு எல்லாவற்றையும் செய்திடத் தயாராக இருக்கின்றேன்.

நான் திண்ணையில் தூங்குகின்றேனா, உண்கின்றேனா என்பவையெல்லாம் எனக்குப் பொருட்டல்ல.

என் மக்களின் விடுதலைக்குப் பாடுபட்டிட சித்தமாக இருக்கின்றேன்.

நான்: உங்கள் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாற்றைக் கொண்டது. முஸ்லிகளையும் இஸ்லாத்தையும் வெறுக்கக் கற்றுக் கொண்டு, முஸ்லிகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றிட முன் வந்து இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

இதற்கு முன்னால் தமிழகத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

பகுத்தறிவு பாசறைகள் என்று பறைசாற்றப்பட்டவற்றிலிருந்து வந்ததால் அவர் இஸ்லாத்தை ஏற்றுகொண்டது ஒரு புது வரலாற்றையும், அனுபவத்தையும், அணுகுமுறையையும் தந்தது.

அதன் பின்னர் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் வழி இஸ்லாத்தை அறிந்து அதனை ஏற்றுக்கொண்ட கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள், கம்யூனிசத்திலிருந்து வந்தார். அஃது ஒரு புதிய வரலாற்றையும் அனுபவத்தையும் தந்தது.

நீங்கள் ஹிந்துத்வாவிலிருந்து வந்திருப்பது பிறிதோர் புது அனுபவத்தைத் தருகின்றது.

உங்கள் வாழ்க்கையை எழுதி மக்களுக்குச் சொன்னாலே அஃதோர் விடுதலை வேட்கையை ஏற்படுத்துமே?

பிலால் சாஹிப்: ஆமாம். ஆனால் என்னால் அமர்ந்து எழுதுவது இயலாது. நான் களத்தில் உழைத்துப் பழக்கப்பட்டவன். நீங்கள் யாரையாவது அமர்த்தினால் நான் சொல்கின்றேன். அவர் எழுதித் தரலாம்.

இந்தப் பணிக்காக தேஜஸ் மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரை நியமித்து விட்டு வந்தேன்.

எங்களை முதலில் அழைத்துப்போய் பிலால் அவர்களின் வீட்டைக் காட்டிய இரண்டு சகோதரர்களும் பிலால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே இருந்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்தோம் பின்னால்.

முஸ்லிகள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் நாம் இஸ்லாத்தை அவர்களிடமிருந்து மறைத்து விட்டதாகவே கருதுகின்றனர்.

அவர்களாக இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளும்போது நம்மீது வேகப்படுகின்றார்கள்.

குறிப்பாக நாம்தான் உண்மையான தேசியவாதிகள் என வாதிடும் போது, நாம் தான் மதச் சார்பின்மையின் திரு உருவங்கள் எனக் காட்டிக் கொள்ளும் போதும், எங்களுக்கும் உங்கள் அரசாங்கத்தில் ஏதேனும் கொடுங்கள் என யாசிக்கும்போதும் அவர்களுக்கு இஸ்லாம் தெரியாமலேயே போய்விடுகின்றது.

இவற்றிற்கெல்லாம் மேலாக நாம் இஸ்லாத்தின் போதனைகளின்படி வாழ்ந்து காட்டுபவர்களாக இருந்திட வேண்டும்.

இஸ்லாத்திற்கு வருவது என்பது ஒளியை நோக்கி வருவதாகும். அப்படியானால் முஸ்லிம்கள் ஒளிக்கு - வெளிச்சத்திற்கு சொந்தக்காரர்கள் என்று பெயர் பெற்றவர்கள். நாம் இருட்டிலிருப்பவர்களிடம் யாசகம் கேட்டால் நாமும் ஒளியை மறைத்தக் குற்றத்திற்கு ஆளாவோம்....!

அல்ஹம்துலில்லாஹ்!(அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்)

நிறைவு பெற்றது.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 3.

அமுக்கப்பட்ட மக்களின் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல் நாசர் மஹ்தனியிடமும், அவருடைய இயக்கத்திலும் எதிரொலிக்கக் கண்டேன்.

ஆகவே நான் நாசர் மஹ்தனியின் கூட்டங்களைத் தொடர்ந்து கவனிக்கலானேன்.

அவருடைய உத்வேகம் முஸ்லிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இப்படிப் பலரும் அங்கம் வகிக்கும் ஓர் பெரும் இயக்கமாக பி.டி.பி. வளர்ந்து வருவதைக் கண்டேன்.

என்னையும் அந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு பணியாற்றினேன்.

என் இயல்பான, எதார்த்தமான ஈடுபாடு எல்லோரையும் கவர்ந்தது. பி.டி.பி.யிலும், நான் மெல்ல மெல்ல உயர்ந்தேன்.

பி.டி.பி.யின் தொண்டர்கள் என்னிடம் பாரபட்சமின்றி காட்டிய பாசம் என்னுள் உண்மையான அன்பைப் பிரவாகம் எடுத்து ஓடச்செய்தது.

பி.டி.பி.யிலுன், நான் கொட்டிய உழைப்பால் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவனானேன்.

இப்போது நான் முஸ்லிகளோடு நித்திய வாழ்க்கை தொடங்கிவிட்டேன்.

அதாவது நான் ஆரம்பத்தில் எந்த முஸ்லிகளை வெறுப்பதற்குக் கற்றுத் தரப்பட்டேனோ அந்த முஸ்லிகளை நான் இப்போது நேரில்
சந்திக்கின்றேன்.

எந்த முஸ்லிம்களை இங்கே இந்த நாட்டில் வாழவிட்டிருப்பது தன்மானக் குற்றம் என எண்ணினேனோ அந்த முஸ்லிகளோடு நான் வாழத் தொடங்கி இருகின்றேன்.

(இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு வினாவைத் தொடுக்கின்றார்)

நான் என் வாழ்க்கையைப் பற்றி மேற்கொண்டு சொல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி:

நாசர் மஹ்தனியைப் பற்றி உங்கள் கருத்தென்ன ?

நாசர் மஹ்தனி ஏனைய முஸ்லிம் அரசியல் இயக்கங்களை போல் ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர். விஷேஷமாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. மேற் கொண்டு சொல்லுங்கள்.

நாசர் மஹ்தனி எனக்கு இஸ்லாத்தைப் பற்றியத் தெளிவுகளைத் தந்தவர். அதனால் நான் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கின்றேன்.
P.D.P.யின் தலைவர் நாசர் மஹ்தனியின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் முஹம்மத் பிலால் தன்னுடைய நன்றிப்
பெருக்கைக் காட்டுகின்றார். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு அதாவது நேர்வழி பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் நாசர் மஹ்தனி என்பதால் அவர் அவரை நன்றியோடும், கண்ணியத்தோடும் பார்க்கின்றார். நான் இதை அவரிடம் கேட்டும் விட்டேன். அவர் அதை ஒப்புக் கொண்டார். தனக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாசர் மஹ்தனி தனக்கும், தனது சமுகத்திற்கும் நேர்வழி காட்டியிருக்கின்றார் என்பதுதான் அவரது நன்றிப் பெருக்கிற்குக் காரணம்.

[மீண்டும் தொடர்ந்தார்]

நான் பி.டி.பி.யில் சேர்ந்தபோது முஸ்லிம்களோடு வாழ ஆரம்பித்திருந்தேன்.

அதாவது நான் முஸ்லிம்களை ஊன்றிக் கவனித்தேன். அவர்களோடு வாழ்ந்தேன்.

பி.டி.பி யின் பணிகளுக்காக நான் வெளியூர் சென்றபோதெல்லாம் பி.டி.பி யின் பிரதிநிதிகள் என்னை வரவேற்றார்கள்.

முஸ்லிம்கள் அதிலும் பஞ்சையர்கள் - அன்றாடம் காய்ச்சிகள் யாதார்த்தமாக என்னை வரவேற்றார்கள். அவர்கள் உழைத்து ஈட்டிய பொருளில் எனக்குத் திண்பண்டங்கள் வாங்கித் தருவார்கள். இவர்கள் காட்டிய யதார்த்தம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

அது வரை நான் எங்கேயும் சந்திக்காக ஒரு எதார்த்தத்தை இந்தத் தொண்டர்களிடம் சந்தித்தேன்.

அதே போல் நாசர் மஹ்தனி கண்ணியப்படுத்தப்படும் போதும், அவர் கற்றவர்களாலும், செல்வந்தவர்களாலும் விருந்து வைத்து உபசரிக்கப்படும் போதும் நான் விலகி நிற்க வேண்டியதில்லை. நான் அவர்களோடு இயைந்து இணைந்து நிற்க முடிந்தது; உண்ண முடிந்தது; உறங்க முடிந்தது.

அதன் பின்னர் முஸ்லிம்களால் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் பிலால் (அல்லாஹ்வின் ஆசியும் அருளும் அவர்கள் மீது உண்டாக்கட்டும்) அவர்களின் வரலாற்றைக் கற்றேன்.

முஹம்மது(ஸல்)அவர்கள் பிலால்(ரலி)அவர்களை வைத்திருந்த விதமும், அவர்கள்பால் கொண்டிருந்த அன்பும் என்னை மிகவும் நெகிழச் செய்தது. இன்றளவும் பிலால் (ரலி) அவர்கள் பால் முஸ்லிம்கள் காட்டும் நேசத்திற்கும், பாசத்திற்கும் அளவேயில்லை. இது என்னுள் பல நிரந்தர மாற்றங்களைக் கொண்டுவந்தது.

தொழுகையில் காட்டும் சமாதானம் அல்லாஹ்வின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை என்னுள் ஆழப்பதிய வைத்தது.

இஸ்லாத்தை ஏற்பது என முடிவு செய்தேன். சில நூல்களைக் கற்றேன். மனதால் மாறினேன். இறைவனின் அடியானாக, இது நடந்தது இரண்டு மாதங்களுக்கு முன்.

நான் முஹம்மது பிலால் ஆனேன். என் மனைவி ஃபாத்திமா ஆனாள். என் முதல் குழந்தை ஷாகிதா ஆனாள். இரண்டாவது குழந்தை தஸ்லீம் ஆனாள்.

இப்போது நான் குழிவேலிப் புலியில் இருக்கிறேன்.

இங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது. இந்த பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஒரு முஸ்லிம் இருக்கின்றார். அவருடைய வசதியையும், வளத்தையும் வைத்துப் பார்க்கும் போது நான் எந்த விதத்திலேயும் அவருக்கு ஈடாக மாட்டேன்.

ஆனால் பள்ளியில் தொழப்போகும்போது நான் முன்னே சென்றால் நான் முன் வரிசையில் தொழுவேன். அவர் எனக்குப் பின்னால் நின்று தொழுவார். அவர் அல்லாஹ்வை ஸஜ்தா செய்திடும் போது என் கால் அவர் தலையைத் தொடும்.

இதில் அல்லாஹ்வைத் தொழுவதில் அணிவகுத்து நிற்பதில் பின்னே நிற்பவன், முன்னே நிற்பவன் என்ற எண்ணங்கள் யாரிடமுமில்லை.

மாறாக அந்தத் தனவந்தர் என்னைப் பார்த்திடும் போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். கட்டித் தழுவுகின்றார். உடன் பிறந்த ஓர் சகோதரனாகவே என்னை நடத்துகின்றார்.

இது என்னுள் நிரந்தர களிப்பை ஏற்படுத்துகின்றது.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 26(பேட்டி-4)

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

இறைவன் நாடினால் வளரும்.