tag:blogger.com,1999:blog-193551432024-03-07T13:35:38.944-08:00களஞ்சியம்படித்ததில் பிடித்த நூல்களின் தொகுப்பு.அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-19355143.post-45562713811465528322011-09-20T21:42:00.000-07:002011-09-20T22:24:34.379-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -12<div align="justify"><div style="text-align: center;"><span style="font-weight: bold;">04. இமாம் அஹ்மதும் சமூக மாற்றமும்</span><br /></div><br />அரசியல் பற்றிய இமாம் அஹ்மதின் சிந்தனைகள், அவரது பொதுவான சிந்தனைப் போக்கான பாரம்பரிய சிந்தனை முறைமையைக் கொண்டதாக அமைந்திருந்தன.<br /><span class="fullpost"><br />பெரும்பாலான ஸஹாபாக்களும் தாபியீன்களும் கொண்டிருக்கும் கருத்தை இங்கு இமாம் அஹ்மத் முதன்மைப்படுத்தினார். கிலாபத், பைஅத் போன்ற அம்சங்கள் மட்டுமன்றி பொதுவாக சட்ட சிந்தனையிலும் இமாமின் போக்கு இவ்வாறு அமைந்திருந்தது. அத்தோடு இமாம் யதார்த்தபூர்வமான பார்வைக் கொண்டிருந்தார். குழப்ப நிலைகளைத் தவிர்த்து அமைதியும் சமாதான நிலையும் நிலவ வேண்டும் என்ற கருத்தை இவர் கொண்டிருந்தார். அத்தோடு முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பேணுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற போக்கும் இவரிடம் இருந்தது.<br />---------------------------------------------------------------------------------------------------------------<br /><blockquote>இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் இது ஒருவகையாகும். அல்குர்-ஆன், ஸுன்னா, ஸஹாபாக்கள், தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்தும் போக்கே இதுவாகும். அல்குர்-ஆனினதும் ஸுன்னாவினதும் வசனங்களுக்குக் காரணங் காணுவதில் இவர்கள் ஆழ்ந்து போக மாட்டார்கள். அல்குர்-ஆன் ஸுன்னாவுக்கு அடுத்தபடியாக ஸஹாபாக்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்துவார்கள். தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்கு அல்லது அவர்களில் பெரும்பாலோரது கருத்துக்கு இவர்கள் ஒரு பெறுமானத்தைக் கொடுப்பர்.(மொழிபெயர்ப்பாளன்).</blockquote>---------------------------------------------------------------------------------------------------------<br />அநியாயக்காரனாக இருந்தாலும் தன் பலத்தால் ஆட்சிக்கு வந்த இமாமுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை விட அவருக்குக் கட்டுப்படுவதே கடமையானது எனவும் அவர் கூறினார். ஒரு சர்வாதிகார ஆட்சியாளன் பல வருடங்கள் திட்டமிட்டுச் செய்யும் அநியாயங்களை விட கூடுதலான அநியாயங்களை அவனுக்கெதிரான ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தும். இது பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தி விடும் என இமாம் இக்கருத்திற்கு நியாயம் கூறினார். இக்கருத்து இமாம் மாலிக்கின் கருத்தை ஒத்திருக்கிறது எனக் கூறலாம்.<br /><br />ஆயினும் இமாம் மாலிக்குக்கும், அஹ்மதுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கு அவதானிக்க வேண்டும். இமாம் மாலிக் அரசுக்கெதிரான் ஆயுதப் போராட்டத்தின் குழப்ப நிலைகளையும் கண்டார். ஆட்சியொன்று கவிழ்வதையும் அதன் பாரிய குழப்ப நிலைகளையும் கண்டார். ஏனெனில், இமாம் மாலிக் இருவேறு கிலாபத்துக்களைக் கண்டவர். இரு காலப்பிரிவுகளிலும் வாழ்ந்தவர். இவ்விரு காலப்பிரிவுகளிலும் போராட்டங்களும் குழப்ப நிலைகளும் வலுத்திருந்தன. அவற்றை இமாம் மாலிக் கண்டதோடு அக்காலப் பிரிவுகளிலேயே வாழ்ந்தார். எனவே, அவற்றால் அவர் பாதிக்கப்பட்டார்.<br /><br />ஆயினும், இமாம் அஹ்மத் குழப்பநிலைகளை அதிகமாக அவதானிக்கவில்லை. அவரது காலப்பிரிவு குழப்ப காலப்பிரிவை அண்மித்ததாக இருக்கவும் இல்லை. அமீனுக்கும், மஃமூனுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தையும் அதனால் விளைந்த குழப்பநிலையையுமே இமாம் அஹ்மத் அவதானித்தார். அக்குழப்ப நிலையின் விளைவு இறுதியில் மோசமாக அமைந்ததையும் இமாம் கண்டார்.<br /><br />அதாவது பாரசீக ஆதிக்கம் ஆட்சியில் வேரூன்றியது. பித்அத்கள் பரவின. இஸ்லாத்துக்குப் புறம்பான சிந்தனைகள் அதிகாரபீடத்தில் ஆதிக்கம் செலுத்தின. பித்அத் போக்காளர்கள் ஆட்சியாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தினர். அவர்களால் இமாம் சிறைவாசத்திற்கு உட்பட்டார்; துன்புறுத்தவும் பட்டார். மஃமூன், முஃதஸிம், வாஸிக் என தொடராக வந்த மூன்று ஆட்சியாளர்களால் அவர் துன்புறுத்தப்பட்டர். எனினும், இவை எதுவும் இமாம் அவர்களது உள்ளத்தில் பழிவாங்கும் உணர்வையோ ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சிந்தனையையோ விதைக்கவில்லை.<br /><br />சிறையும் அங்கு கிடைத்த சித்திரவதைகளும் சட்டங்களை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவில்லை. அப்படி நடந்திருப்பின் அது மனோஇச்சையின் விளைவாகப் போயிருக்கும் அல்லது தமது காலப்பிரிவு ஆட்சியாளர்கள் கொடுத்த துன்பங்களின் விளைவாகப் போயிருக்கும். ஆதாரபூர்வமான ஸுன்னா, இஸ்லாத்தின் ஆரம்ப சந்ததியினரின் நடைமுறை, அவர்களது அனுபவங்கள் என்பவற்றிலிருந்தே கிலாபத் பற்றியும், அதற்கு எதிராக ஆயுதம் தூக்குவது பற்றியுமான சட்டங்களை இமாம் வகுத்தார். அத்தோடு இமாம், சமூக நலன்களையும் கவனத்தில் கொண்டார். சாதாரண எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இமாம் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை மறுத்தார். ஆட்சியாளர் நிலை எவ்வாறு இருப்பினும் அவருக்கெதிராக ஆயுதம் தூக்குவது அத்துமீறிய நடவடிக்கை என்றே இமாம் கணித்தார். தன்னைச் சித்திரவதை செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதைக் கூட இவ்வாறே இமாம் கருதினார்.<br /><br /><span style="color:#000099;">இறைவன் நாடினால் வளரும்....<br /><br /></span><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color:#336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color:#336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color:#336699;">பதிப்புரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2011/09/11.html"><span style="color:#336699;">முந்தைய பகுதி</span></a></span></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-57553171307252571352011-09-08T00:26:00.000-07:002011-09-20T22:36:20.915-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -11<div align="justify">இமாம் அவர்களது காலத்து அரசியல் சூழல் பற்றி இங்கு விளக்குவது அவசியம். உமையாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள் இப்போது பலவீனமுற்றிருந்தன. ஷீயா, கவாரிஜ்கள் என்ற இரு முக்கிய பிரிவினரே ஆயுத முனையில் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடியவர்கள். <span class="fullpost">இக்காலப்பிரிவில் இவர்கள் பலவீனமுற்றுப் போனதனால் குழப்ப நிலைகள் நீங்கி ஓரளவு அமைதி நிலவியது. இவர்கள் இரு சாராரும் ஆயுதங்களை வைத்து விட்டு பேனா என்ற ஆயுதத்தைத் தூக்க இப்போது ஆரம்பித்திருந்தார்கள். ஏனெனில் அரசு, ஆயுத மோதலுக்குப் பதிலாக கருத்துப் பரிமாறலொன்றை ஏற்படுத்தும் வகையில் பல அமர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்தது.<br /><br />இந்த வகையில் பல சிந்தனைகளைச் சீர்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. எனவே, ஒவ்வொரு பிரிவினரும் ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக தங்கள் சிந்தனைகளை ஆதாரங்களோடு பதிய முனைந்தனர். கருத்து ரீதியாக தம் சிந்தனைகளைப் பாதுகாக்க முனைந்தனர். இப்பின்னணியில் மக்கள் பல்வேறு கலைகளிலும், அறிவுத் துறைகளிலும் ஈடுபாடு காட்டலானார்கள்.<br /><br />மொழி அறிஞர்கள் இலக்கண விதிகளை வகுக்க ஆரம்பித்தார்கள். கலீல் இப்னு அஹ்மத் போன்ற இலக்கிய அறிஞர்கள் யாப்பிலக்கணத்தை வகுக்கலானார்கள். இஸ்லாமிய சட்டம், ஹதீஸ், தப்ஸீர் போன்ற துறைகள் இவ்வகையில் வகுக்கப்படலாயின. அப்போதைய இஸ்லாமிய அரசும் மேற்கே ஸ்பெயினிலிருந்து கிழக்கே சீனா வரையில் பரந்து விரிந்திருந்தது. எனவே, வளர்ச்சியடைந்த நகரங்கள் பல உருவாயின.ஒ வ்வொரு நகரும் பிரசித்தி பெற்ற அறிஞர்கள் பலரால் பிரபல்யம் ஆகியது. விளைவாக அறிவு தேடுவதற்கான பயணங்களும் அதிகரித்தன.<br /><br />அப்பாஸிய கலீபாக்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும், வீண் விளையாட்டுக்களில் சற்று அளவு மீறி ஈடுபாடு கொண்டவர்களாகவும், தடுக்கப்பட்ட, ஹராமான சில செயல்களை நெருங்கிச் சென்றவர்களாகவும் இருந்தார்கள். இத்தகைய சில பலவீனங்கள் அவர்களில் பலரிடம் காணப்பட்டபோதிலும் அவர்கள் மார்க்க உணர்வு கொண்டவர்களாக இருந்தார்கள். அறிஞர்களை நெருக்கமாக்கிக் கொண்டார்கள். அவர்களை உயர்த்தி மதித்தார்கள். அவர்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். அத்தோடு அறிவுக்கான வழிகளையும்,படி ப்பதற்கான வசதிகளையும் நன்கு ஏற்படுத்தினார்கள். மார்க்கத்திற்குப் புறம்பான சிந்தனைகளோடும், முஃதஸிலாக்களோடும் போராட அறிஞர்களின் உதவியையும் பெற்றார்கள். மஃமூன், வாஸித், முஃதஸிம் போன்ற சிலர் முஃதஸிலாக்களுக்கு ஆதரவாக நின்று அறிஞர்களை ஒதுக்கி அவர்களைத் துன்புறுத்தினார்கள் என்பது உண்மையாயினும் அப்பாஸிய கலீபாக்களில் ஏனையோர் அவ்வாறு இருக்கவில்லை. குறிப்பாக ஹாரூன் ரஸீத் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள், ஹதீஸ் துறை அறிஞர்கள், உபதேசகர்கள் போன்றோரைத் தனக்கு நெருக்கமாக வைத்து கொண்டார். முஃதஸிலாக்களை அவர் சிறை வைத்ததாக வரலாற்றில் பதிவுள்ளது. கலீபா முதவக்கிலும் முஃதஸிலாக்களை ஒதுக்கி இஸ்லாமிய அறிஞர்களை மீண்டும் பலம் பெற்றவர்களாக மாற்றினார்.<br /><br />இந்த வகையில் பொதுவாக அப்பாஸிய கலீபாக்கள் சிலபோது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு இருந்தாலும் அறிஞர்களின் உபதேசங்களைச் செவிமடுத்தார்கள்.<br /><br />அறிஞர்களுக்குக் கிடைத்த இந்த அந்தஸ்தின் காரணமாக அறிவு தேடும் போக்கு சமூகத்தில் வளர்ந்தது. குறிப்பாக அறிவுமன்றங்கள் கலீபாக்கள், கவர்னர்களின் மாளிகைகளில் தொடர்ந்தமையும் அங்கு கவிஞர்களும், சட்ட அறிஞர்களும், பல் தரப்பட்ட அறிவுத்துறைகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களும் போட்டி போட்டுக் கொண்டு சென்றமையும் அறிவு தேடுவோருக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.<br /><span class="Apple-style-span"><span style="color:#000099;"></span><span class="Apple-style-span"><span style="color:#000099;"><br />இறைவன் நாடினால் வளரும்....</span></span><br /><br /><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color:#336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color:#336699;">முன்னுரை</span></a> <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color:#336699;">பதிப்புரை</span></a> <a href="http://islamiccollections.blogspot.com/2011/08/10.html"><span style="color:#336699;">முந்தைய பகுதி</span></a></span></span></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-78463588714760582662011-08-08T16:53:00.000-07:002011-09-20T22:37:30.498-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -10<div style="text-align: justify;"><span style="font-weight:bold;">03.இமாம் ஷாபிஈயும் சமூக மாற்றமும்.</span><br /><br />இமாம் ஷாபிஈ அப்பாஸிய காலப் பிரிவில் ஹிஜ்ரி 150-ல் பிறந்தார். இவ்வாண்டிலேயே இமாம் அபூஹனீபாவும் மரணித்தார். இமாம் ஷாபிஈ இமாம் மாலிக்கிடம் கற்றார். குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் இமாம் மாலிக்கிடம் கல்வி கற்பதிலேயே ஈடுபட்டிருந்தார்.<span class="fullpost"> பின்னர் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ள நஜ்ரானில் அரச தொழிலொன்றையும் செய்தார். அத்தொழில் மூலம் நீதியை நிலைநாட்டினார் என்பதோடு தனக்கு இழைக்கப்படும் அநீதிகள், தீங்குகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டார். குறைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்தவராகவும் இறைதூதர் (ஸல்) அவர்களின் வம்சாவழியைக் கொண்டவராகவும் இருந்தமையால் 'அலவி' பிரிவினரைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்டார். அப்போது அப்பாஸியர் அலவி தலைவர்களையும், அவர்களது செயற்பாடுகளையும் தேடித் திரிந்து வந்தமையே இதன் பின்னணியாகும். இந்த வகையில் சூழ்ச்சியாலும் பொய் முறையீடுகளாலும் இமாம் ஷாபிஈ கைது செய்யப்பட்டு பக்தாதுக்கு அனுப்பப்பட்டார். இது ஹிஜ்ரி 184-ல் நிகழ்ந்தது.<br /><br />இமாம் அவர்களுக்கு ஏற்பட்ட இந்தத் துன்பம் அருளாக அமைந்தது எனக் கூறக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இமாம் பாக்தாதில் இமாம் அபூஹனீபாவின் மாணவர் முஹம்மத் இப்னு ஹஸனைச் சந்தித்தார். ஏற்கனவே ஹிஜாஸ் பிரதேச சட்ட அறிவு இவரிடம் இருந்தது. இப்போது ஈராக்கிய சட்ட அறிவையும் முஹம்மத் இப்னு ஹஸனிடமிருந்து கற்றுக் கண்டார். இந்த வகையில் அறிவுசார் சட்ட அறிவும், பாரம்பரிய சட்ட அறிவும் இமாமிடம் ஒன்றிணைந்தன.<br /><br />பின்னர் மீண்டும் மக்கா திரும்பினார். ஹஜ்ஜின்போது பெரும் அறிஞர்களைச் சந்தித்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களில் ஒருவர். இந்த வகையில் பல அறிஞர்களது சிந்தனைப் போக்கையும் இமாம் படித்துத் தேர்ந்தார். அதன் விளைவாக இமாம் அவர்களால் தனியானதொரு சிந்தனைப் போக்கை உருவாக்க முடிந்தது. வித்தியாசமான இருவகை சட்ட சிந்தனைப் போக்கையும் ஆழ்ந்து படித்ததன் பின்னர் மக்காவில் ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் இமாம் ஷாபிஈ தங்கி இருந்தார். அங்கு பலருடனும் கருத்துப் பரிமாறல்களையும், வாதப் பிரதிவாதங்களையும் நடாத்தினார். வித்தியாசமான பல கருத்துக்களையும், வேறுப்பட்ட சிந்தனைப் போக்குகளையும் அவற்றினூடே அவதானித்தார்.<br /> <br />இவ்வாறு இமாம் ஷாபிஈ நன்கு கற்றுத் தேர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்றதன் பின்னர் சட்ட ஆக்கத்திற்கான விதிகளையும், கொள்கைகளையும் வகுக்கத் துவங்கினார். பின்னர் பக்தாதுக்கு இரண்டாம் முறையாக ஹிஜ்ரி 915-ல் வந்தார். அப்போது இமாமிடம் இதுவரை காணாத தனியான சட்ட ஆய்வு முறைமை இருந்தது. பக்தாத் வந்த இமாம் கலீபா மஃமூனின் சபையில் பாரசீக செல்வாக்கு இருந்ததை அவதானித்தார். இது இஸ்லாமிய சிந்தனையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதிகளாக அக்காலத்தில் கணிக்கப்பட்ட முஃதஸிலாக்கள் கலீபாவிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். கலீபாவின் எழுத்தாளர்களாகவும், நெருங்கிய அந்தரங்கமானவர்களாகவும் இவர்களே காணப்பட்டனர். தமது கொள்கைப் போக்குடன் ஒத்து வராத அறிஞர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்களாகவும் இவர்கள் காணப்பட்டனர்.<br /><br />இந்நிலையில் அவமானப்படத்தக்க நாட்டில் நிலைக்க இமாம் ஷாபிஈ விரும்பவில்லை. தனது நம்பிக்கை குறித்து பல வாதங்களை நடத்திய பிறகே இமாம் இம்முடிவுக்கு வந்தார். இமாம் ஷாபிஈயின் கீழ்வரும் கவிதை இந்த உண்மையை விளக்குகிறது.<br /><br /> <span style="font-weight:bold;">அவமானம் தரும் நாட்டில் மரியாதைக்குரியோர் இருப்பது<br /> அதனை விட்டு புறப்பட முடியுமானால் <br /> சாத்தியமற்ற ஒன்றே.</span><br /><br />இந்த நிலையில்தான் "அல்குர்ஆன் படைக்கப்பட்டதா?" என்ற இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்ற பிரச்சினை தோன்றியது. சட்ட, ஹதீஸ்துறை அறிஞர்களுக்கு இது பெரும் சோதனையாக அமைந்தது. இந்நிலையில் கலீபா மஃமூன் இமாம் ஷாபிஈ அவர்களுக்கு நீதிபதிப் பதவியை அளித்தார். எனினும், இமாம் அதனை ஏற்கவில்லை. இமாமின் சிந்தனைப் போக்குக்கு இதுவே பொருத்தமானதாகும்.<br /><br />இவ்வகையில் பக்தாதில் தங்கியிருப்பதும் இமாம் ஷாபிஈக்குப் பொருத்தமாக இருக்கவில்லை. அங்கிருந்து பயணப்பட வேண்டிய நிலையே உருவாகியது. பயணப்பட்டுப் போய் வாழ வசதியானதும், பொருத்தமானதுமான இடமாக இமாம் எகிப்தைக் கண்டார். அங்கு பயணப்படும் போது கீழ்வருமாறு பாடினார்கள்.<br /><br /><span style="font-weight:bold;">எனதுள்ளம் எகிப்து செல்ல ஆசை கொள்கிறது<br />அதற்கு பாலை நிலங்களையும்<br />பல பூமிகளையும் கடக்க வேண்டும்<br />அல்லாஹ்வின் மீது சத்தியமாக <br />வெற்றிக்கும் செல்வத்திற்கும்<br />நான் அழைக்கப்படுகிறேனா?!<br />அல்லது மரணக் குழியை நோக்கித்தான்<br />அழைக்கப்படுகிறேனா?<br />எனக்குத் தெரியவில்லை!</span><br /><br />மக்களது மனப்போக்குகளை இமாம் ஷாபிஈ ஆழமாகப் புரிந்திருந்தார். புரிந்து கொள்ளும் நுண்ணிய பார்வைத் திறன் அவருக்கிருந்தது. பயணங்கள் செல்வதில் மிகுந்த விருப்பமுடையவர்களாவும் இமாம் இருந்தார். எனவே, மக்களது கொடுக்கல் வாங்கல்கள், பழக்க வழக்கங்கள் அவர்களது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றியெல்லாம் இமாம் நன்கு அறிந்திருந்தார். கீழ்வரும் இமாமின் கவிதை இக்கருத்தை விளக்குகிறது.<br /><br /><span style="font-weight:bold;">கிழக்காகவும் மேற்காகவும்<br />நாடுகளெல்லாம் சுற்றித்திரிவேன்<br />என் தேவையைப் பெறுவேன்.<br />அல்லது ஊருக்குப் புதியவனாக இறப்பேன் நான் அழிந்தால்<br />அல்லாஹ்வே அதனைக் காப்பான் தப்பினால்<br />அண்மையில் நான் மீண்டு வரலாம்.</span><br /><br />உண்மையில் பயணங்கள் ஒரு சட்ட அறிஞனுக்கு நிறைய அறிவைக் கொடுக்கக் கூடியன என்பதோடு பயணம் இயல்பாகவே பல அனுபவங்களையும் தரக் கூடியது.<br /><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size:13px;"><span style="color:#000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color:#336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color:#336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color:#336699;">பதிப்புரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2011/08/9.html"><span style="color:#336699;">முந்தைய பகுதி</span></a></div></span></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-49531881219358138952011-08-08T16:44:00.000-07:002011-09-20T22:38:44.991-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -9<div style="text-align: justify;">இந்த வகையில் குழப்ப நிலையின் போது புரட்சியாளனின் பக்கமோ ஆட்சியாளனின் பக்கமோ இமாம் மாலிக் நிற்கவில்லை. இருபிரிவிலும் யாருக்கும் உதவ முடியாது என அவர் கருதினார். ஏனெனில், இரு பிரிவினரும் பாவத்தில் வீழ்ந்துள்ளனர் என அவர் கருதினார்.<span class="fullpost"> "கலீபாவுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு எதிராகப் போராடுவது ஆகுமா?" என இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "உமர் பின் அப்துல் அஸீஸ் போன்ற ஒருவருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்களாயின் ஆகும்" என்றார். "உமர் இப்னு அப்துல் அஸீஸைப் போல் ஆட்சியாளன் இல்லாவிட்டால்" என மீண்டும் இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "அப்படியாயின் அல்லாஹ் ஓர் அநியாயக்காரன் மூலம் இன்னோர் அநியாயககாரனை பழிவாங்குகிறான். பின்னர் இருவரையுமே பழிவாங்குவான். விட்டு விடு" என்றார்.<br /><br />இமாம் மாலிக் இலட்சியவாதத் தோற்றங்களோடு மட்டும் நின்றுவிடாது யதார்த்த நிலையையும் அவதானிக்கும் போக்குக் கொண்டவர். இந்த வகையில் இப்போக்கை அவர் கடைபிடித்தார். ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர்கள் செய்ய முயலும் சில தீய செயல்களை அழித்துவிடலாம். அதேவேளை முழுமையாக அவர்கள் சீர்திருந்தி உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஒருவர் அவர்களில் தோன்றவும் கூடும். எனவே, கவர்னர்கள் ஆட்சியாளர்களிடம் இமாம் மாலிக் சென்றார்; அவர்களுக்கு உபதேசித்தார்; வழிகாட்டினார்; நற்செயல்களின் பக்கம் அழைத்தார். அவர் செய்த ஆழ்ந்த உபதேசங்கள் பல இன்றும் காணக் கிடைக்கின்றன.<br /><br />கலீபா அபூ ஜஃபர் மன்சூர், மஹ்தி, ஹாரூன் ரஷீத் போன்றோர் விடயத்தில் பல சந்தர்ப்பங்களில் இமாம் மாலிக் எடுத்த நிலைப்பாடுகள் மிகுந்த பாராட்டுக்குரியன; மிகுந்த கண்ணியத்திற்குரியன. இமாம் மாலிக் கலீபாக்களைச் சந்திக்கும் போது தம்மை மிகுந்த கண்ணியத்தோடு வைத்து கொள்வார். அது தனது உபதேசத்திற்கு நல்ல பாதிப்பைத் தரும் என்று அவர் கருதினார். ஆட்சியாளர்களைச் சூழ இருப்போர் அவர்களைப் பொய்யாகப் புகழ்வது அவர்களது பிழையான செயல்களையும் சிறந்ததாகக் காட்டும்போக்கு பற்றியே மாலிக் பெரிதும் பயந்தார். ஏனெனில், இந்த நிலையில் எவரின் உபதேசமும் வழிகாட்டலும் அவர்களிடம் பயன்கொடுக்காது போகும் என அவர் உணர்ந்தார்.<br /><br />இமாம் மாலிக்கின் இத்தகைய சிந்தனைப்போக்கிற்கும் நடத்தைக்கும் அவரது இயல்பான அமைதியான போக்குக் கொண்ட ஆளுமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த வகையில் சமூக ஸ்திர நிலை சிறந்த மாற்றத்திற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்கும் என இவர் கண்டார். இந்நிலையில் மோசமான நிலையிலிருந்து நல்ல நிலைக்கும், நல்ல நிலையிலிருந்து மிகச் சிறந்த நிலைக்கும் படிபடியாகச் செல்ல முடியும் என அவர் கண்டார். <br /><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size:13px;"><span style="color:#000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color:#336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color:#336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color:#336699;">பதிப்புரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2011/08/8.html"><span style="color:#336699;">முந்தைய பகுதி</span></a></div></span></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-88198644935829813912011-08-06T17:15:00.000-07:002011-09-20T22:39:15.563-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -8<div style="text-align: justify;"><span style="font-weight:bold;">02.இமாம் மாலிக்கும் சமூக மாற்றமும்.</span><br /><br />இமாம் மாலிக் ஹிஜ்ரி 92 இல் பிறந்து 179 இல் இறந்தார். 90 ஆண்டுகளைக் கொண்ட தனது இந்நீண்ட வளமிகுந்த ஆயுளில் இரு பெரும் அரசுகளைக் கண்டார். இக்காலப் பிரிவில் இஸ்லாமிய ஆட்சி விரிந்து பரந்திருந்தது. அவர் இக்காலப் பிரிவில் நிகழ்ந்த குழப்ப நிலைகளையும் பாரியளவு மனித உயிர்களைப் பலிகொண்ட புரட்சிகளையும் கண்டார். கவாரிஜ்களும் அலவிகளும் ஆயுதம் ஏந்திய புரட்சிகளையும் அவதானித்தார்.<span class="fullpost"> இவற்றின் விளைவால் சத்தியம் நிலைநாட்டப் படவோ அசத்தியம் அழிக்கப்படவோ செய்யாது என்பதை உணர்ந்தார். சமூகத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை அவர் அவதானித்தார். தனக்கு முன் வாழ்ந்த தனது ஆசிரியர்களிடம் அப்போது நிகழ்ந்த, அவர்கள் வாழ்ந்து அவதானித்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இமாம் மாலிக் பெற்றார். <br /> <br />'ஹர்ரா' யுத்தம் என்றழைக்கப்படும் யுத்த நிகழ்ச்சி பற்றியும் அவ்வேளை இறைதூதர் [ஸல்] அவர்களின் புனிதஸ்தலமான மதீனா எவ்வளவு தூரம் மோசமாக சீரழிக்கப்பட்டது என்பதையும் அதனைக் கண்ட தமது ஆசிரியர்களிடம் இமாம் கேட்டறிந்தார். அப்துல்லாஹ் இப்னுஸுபைருக்கும் அப்துல் மலிக் பின் மர்வானுக்கும் இடையிலான யுத்த நிகழ்வையும் இமாம் அறிந்தார். அப்போது அல்லாஹ்வின் புனிதஸ்தலமான கஃபாவும் கூட பாதிக்கப்பட்டதை அறிந்திருந்தார். மன் ஜனீக் என்ற கோபுர வடிவ ஆயுதத் தக்குதலுக்கு அது உட்பட்டது. முழு ஹிஜாஸ் பிரதேசமும் படைத் தரப்பினரின் வெறித்தனமான மிக மோசமான செயற்பாடுகளூக்கு உட்பட்டுச் சீரழிந்தது. உண்மையில் அப்பிரதேசம் மக்கள் அமைதி தேடிச் செல்லும் பூமி, புனித வணக்கக் கிரியைகளின் பூமி. ஆனால் கண்மூடித்தனமான குழப்பநிலைகள் இப்படித்தான் எதனையும் விட்டு வைப்பதில்லை; புனிதமும் புனிதமல்லாததும் அதற்கு ஒன்றுதான். <br /><br />இத்தகையதொரு நம்பிக்கையிழந்த சூழலில் வாழ்ந்தவர், மிகச் சரியான ஷுறா அடிப்படையிலான ஆட்சி தோன்றுவதில் நம்பிக்கை இழப்பது இயல்பே. அபூபக்கர், உமர், உஸ்மான் [ரழி] போன்றோர் கால உன்னத ஆட்சியை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடு இக்காலப் பிரிவில் மிகக் குறைவு என இச்சூழ்நிலையினைக் கருதுவது மிக யதார்த்தமானது என்பதில் சந்தேகமில்லை. எனவே,இருக்கும் நிலையை அங்கீகரிப்பது தவிர வேறு வழியில்லை. இஸ்லாம் வேண்டுகின்ற அந்த ஆட்சிமுறை என்பதலல்ல-யதார்த்தத்தை உணர்ந்து கொண்டதால் வந்த முடிவே இதுவாகும்.<br /><br />இருக்கும் சமுக நிலையை மாற்ற முற்பட்டால் பெரும் தீமைகளுக்கு அது இட்டுச் செல்லும்; பாரிய சீர்கேடுகளைத் தோற்றுவிக்கும்; நல்ல விளைவுகளை எதிர் பார்ப்பது மிகக் கடினம் என்ற யதார்த்த உண்மைகளே இம்முடிவுக்கு வர அவரை நிர்பந்தித்தன. அத்தோடு அதுவரையிலும் நிகழ்ந்த போராட்டங்களும் ஆட்சிக்கெதிரான அனைத்து முயற்சிகளும் இருந்த நிலையை இன்னும் மிக மோசமான நிலைக்கே இட்டுச் சென்றுள்ளன என்ற வகையில் இரு விடயங்களில் ஒன்றைத் தெரிவு செய்ய முற்படும்போது குறைந்த பாதகம் கொண்டதைத் தெரிவு செய்தலே புத்திசாலித்தனமான செயல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். எனவே இமாம் மாலிக் அமைதி நிலையைச் சமாதானத்தைத் தெரிவு செய்தார் என்றால் இருந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டார் என்பது அதன் பொருளன்று. அது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்; மாற்ற முடியாத ஒரு நிலை என்பதே காரணமாகும்.<br /><br />இந்த வகையில் ஆட்சிக்கெதிரான புரட்சி பெரும் குழப்பநிலைக்கும் இரத்தம் சிந்தலுக்கும் இட்டுச் செல்லும் என அனுபவங்களின் அடியாக இமாம் மாலிக் உறுதியாக நம்பினார். எனவே, ஆட்சிக்கெதிரான புரட்சி சரியான நிலைப்பாடு என அவர் காணவில்லை.<br /><br />ஆட்சிக்கெதிரான புரட்சி குழப்பநிலையை உருவாக்கும்; சமூக ஒழுங்குகளில் சீர்குலைவை ஏற்படுத்தும்; மக்கள் நிலைமைகளைக் குழப்பிவிடும்; உயிருக்கும் மானத்திற்கும் செல்வத்திற்கும் அழிவையும் பாதகத்தையும் ஏற்படுத்தும் என இமாம் கண்டார். திட்டமிட்டு பல வருடங்களில் சாதிக்க முடியாத அநியாயத்தைச் சில மணித்தியாலக் குழப்பம் ஏற்படுத்தி விடும் என அவர் கருதினார். இந்த வகையில், இமாம் மாலிக் ஆட்சிக்குக் கட்டுபடாது புரட்சி செய்யும் கருத்தை ஏற்கவில்லை. அப்படியான புரட்சியின் பிரச்சாரகராகவும் இருக்கவில்லை. அத்தகைய புரட்சிக்கு ஒத்துழைக்கவும் இல்லை. அதேவேளை, அவரது காலத்தில் வாழ்ந்த கவர்னர்களுக்கோ கலீபாக்களுக்கோ சார்பான பிரச்சாரகராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ அவர் இருக்கவில்லை. யாருடைய பிரச்சாரகராகவும் நிற்காது நடுநிலையைக் கடைபிடித்தலே சரியான நிலைப்பாடு என அவர் கண்டார். குழப்பநிலைகளை வெறுத்த இமாம் மாலிக்கின் இந்த நிலைப்பாடு, மதீனாவில் அவர்களது காலப்பிரிவில் ஒரு வித்தியாசமான நிலைப்பாடாக இருக்கவில்லை. மதீனாவின் அறிஞர்களும் இதே போக்கையே கொண்டிருந்தார்கள். <br /><br />பிரிவினைக்கு வழிவகுக்காது சமூகத்திலிருந்த ஆட்சிக்கு இமாம் மாலிக் கட்டுப்பட்டார்கள். ஆயினும், தனது காலத்து ஆட்சியாளர்களின் ஆட்சி இஸ்லாத்தின் சட்டதிட்டங்களுக்கும் அல்குர்-ஆனின் வழிகாட்டலுக்கும் முழுமையாக உட்பட்டிருந்தது என அவர் காணவில்லை. ஓரளவான சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கலாம் என்ற வகையிலேயே ஆட்சிக்குக் கட்டுப்படுதலை இமாம் மாலிக் ஏற்றார். குழப்பநிலைகள், பிரச்சினைகள் நீங்கிய அமைதியான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் ஏற்படுத்தும் பாதிப்பு பாரியதாக அமையலாம் என அவர் கருதினார்.<br /><br />எனவே, நல்லுபதேசத்தினூடாகவும் உரிய இடத்தில் சத்தியத்தைப் பேசுவதனூடாகவும் சீர்திருத்த முயற்சியில் அவர் ஈடுபட்டார். வழிகாட்டும் பொறுப்புகளையும் அவர் ஏற்றார். ஆட்சியாளனைச் சீர்திருத்துவதிலும் கூடிய கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆட்சியாளனின் சீரிய நிலை ஆளப்படுவோரின் சீரான நிலைக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. <br /><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size:13px;"><span style="color:#000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color:#336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color:#336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color:#336699;">பதிப்புரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2011/08/7.html"><span style="color:#336699;">முந்தைய பகுதி</span></a></div></span></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-75359301841378855622011-08-05T08:03:00.000-07:002011-09-20T22:47:24.815-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -7<div style="text-align: justify;">ஹுஸைன் இப்னு அலி [ரழி] அவர்கள் யஸிதுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தபோது அதிகமான நபித்தோழர்கள் உயிர் வாழ்ந்தனர். தாபிஈ சட்ட அறிஞர்கள் எல்லோருமே அப்போது உயிர் வாழ்ந்தார்கள். ஆயினும் எந்த ஸஹாபியும் தாபிஈயும் ஹுஸைன் [ரழி] அவர்களின் செயற்பாட்டை ஹராம் என்று சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் ஹுஸைன் [ரழி] அவர்கள் போராடச் செல்வதை தடுத்தார்கள்.<span class="fullpost"> காரணம் 'ஈராக்வாசிகள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல; போராட்டம் பல அபாயங்களைக் கொண்டது. அது வெற்றியடையும் சாத்தியம் மிகக் குறைவு' என்றுதான் தடுத்தார்கள். அநியாயக்காரர்களுக்கு எதிராக, வழிபிறழ்வோருக்கெதிராக போராடல் சட்டரீதியானது. எனினும் போராடும் முன்னர், வெற்றிசாத்தியமானதுதானா? குறித்த இலக்கை அடைந்து கொள்ள முடியுமா? வழிபிறழ்ந்த ஆட்சியை அகற்றியதன் பின்னர் சிறந்த ஆட்சியொன்றை அமைப்பது சாத்தியம்தானா? என்பவற்றை உறுதிப்படுத்தலும் திட்டமிட்டுக் கொள்ளலும் மிக அவசியமாகும். இந்த வகையில் ஸஹாபாக்கள் சிலர் ஹுஸைன் [ரழி] அவர்களோடு கருத்து வேறுபட்டிருப்பின் அது திட்டமிடல், விளைவு சாத்தியப்பாடு என்பன குறித்ததாக அமைந்ததே தவிர போராட்டம் ஆகுமானதா இல்லையா என்பது குறித்தல்ல. <br /><br />ஹஜ்ஜாஜின் அத்துமீறிய ஆட்சியின்போது அப்துர் ரஹ்மான் அல் அஸ் அத்தின் தலைமையில் நடந்த புரட்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். இப்புரட்சியின்போது ஸளீத் இப்னு ஸுபைர், ஷஃபி இப்னு அபி லைலா அபுல் புக்திரி போன்ற பல பெரும் சட்ட அறிஞர்களைக் கொண்ட ஓர் இராணுவப் பிரிவு இப்னு அஸ் அதுக்குச் சார்பாக நின்றதாக இப்னு கஸிர் குறிப்பிடுகின்றர்.<br /><br />இப்போராட்டத்தில் கலந்து கொள்ளாது ஓதுங்கிக் கொண்ட எந்த அறிஞரும் இப்புரட்சியை ஆகுமானதல்ல எனக் கூறவில்லை. போரில் கலந்து கொண்ட சட்ட நிபுணர்கள் அஸ் அதின் படைமுன் நிகழ்த்திய உரைகள் இது அனுமதிக்கப்பட்டசெயல் என்பதைக் காட்டுகின்றன. <br /><br />ஹஜ்ஜாஜின் காலப்பிரிரிவில் மக்காவில் புரட்சி செய்த இப்னு ஸுபைரின் செயர்பாடும் இதற்கு இன்னொரு உதாரணமாகும். இவ்வாறு ஆரம்பகால அறிஞர்கள் அநியாயக்கார ஆட்சிக்கெதிராக ஆயுதப் புரட்சி செய்தல் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். எனினும் இப்னு அஸ் அதின் புரட்சியின்போது சிறைபிடிக்கப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் பசியலும் தாகத்திலும் விடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இப்னு ஸுபைரின் புரட்சியின் போது 'மன் ஜனீக்' என்ற போர்க் கருவி மூலம் கஃபா தாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். <br /><br />இமாம் அபூ ஹனீபா ஆயுதப் போராட்டத்தின்போது இத்தகைய மோசமான விளைவுகள் உருவாகலாம் என எதிர்பார்க்கவில்லை. ஆயினும் இப்புரட்சிகளின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் சக்தியை வீணாக அழிப்பதும் பெருந்தொகையானோர் கொல்லப்படலும் மட்டுமே நிகழ்ந்தது. எனவே மாற்றத்திற்கு வழி ஆயுதப் போராட்டமே என்ற முதலாம் நூற்றாண்டு அறிஞர்கள் கொண்டிருந்த கருத்து மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<br /><br />முதலாம் நூற்றாண்டில் பிறந்த அபூ ஹனீபாவும் அக்கருத்தையே கொண்டிருந்தார்களெனினும் இமாம் அபூ ஹனீபாவின் சிந்தனைப் பாதிப்புக்குட்பட்ட அபூ யூசூப் போன்ற அவரது மாணவர்கள் அபூ ஹனீபாவின் இக்கருத்துப் போக்கினைக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். புரட்சிகளின் விளைவுகள் தந்த பாடத்தினால் முஸ்லிம் சமூகத்தில் இன்னொரு கருத்து தோன்றலாயிற்று. இக்கருத்தே அஹ்லுஸ் ஸுன்னாவின் பொதுக் கருத்து என அழைக்கப்படுகின்றது.<br /><br />ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றமான இக்கருத்து தோன்றுவதற்கு முதலாம் நூற்றாண்டின் சட்ட அறிஞர்களுக்குப் புரியாமல் போன சில திட்டவட்டமான அல் குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களே காரணமாயின என்று ஒரு போதும் கூற முடியாது. ஆட்சி மாற்றத்திற்குப் பிரயோகிக்கப்பட்ட வன்முறை வழிமுறை அடைந்த தொடர் தோல்விகளும் அதன் விளைவாக உருவான பாரிய உயிர் அழிவும் பல்வேறு குழப்ப நிலைகளுமே இவ்விரண்டாம் கருத்து தோன்றக் காரணமாயின. <br /><br />இந்தவகையில் புதிய மாற்றங்களுக்கும் புரட்சிகளால் நிகழ்ந்த சமூக விளைவுகளுக்கும் ஏற்ப புதியதொரு கருத்தை முன்வைக்கும் வகையில் இமாம் மாலிக் அடுத்து தோன்றுகின்றார். <br /><br /><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size:13px;"><span style="color:#000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color:#336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color:#336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color:#336699;">பதிப்புரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2011/08/6.html"><span style="color:#336699;">முந்தைய பகுதி</span></a></div></span></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-82580722106338448152011-08-05T07:56:00.000-07:002011-09-20T22:48:04.133-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -6<div style="text-align: justify;">இமாம் அபூ ஹனீபா நப்ஸ் ஜகிய்யாவின் சகோதரர் இப்றாஹீமுக்கு பைஅத் செய்யுமாறு தூண்டி வந்தார். அவரோடு போராட இணைந்து கொள்வது ஸுன்னத்தான ஹஜ்ஜுக்குச் செல்வதைவிட உயர்ந்தது என பத்வா வழங்கினார்.<span class="fullpost"> ஹனபி மத்ஹபின் உயர்ந்த சட்ட அறிஞர்களான இமாம் ஜஸ்ஸாஸ், மக்கீ," பத்வா பஜாஜிய்யா" என்ற நூலின் ஆசிரியர் ஆகியோர் இமாம் அபூ ஹனீபாவின் கீழ்வரும் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். "முஸ்லிம் சமூகத்திற்கு வெளியே நிராகரிப்பாளர்களோடு போராடுவதைவிட, முஸ்லிம் சமூகத்தை அதனுள்ளே காணப்படும் நெறிபிறழ்வுகளிலிருந்து விடுதலை செய்யப் போராடுவது சிறந்தது."<br /><br />ஆபுபக்கர் அல் ஜஸ்ஸாஸ் தமது அஹ்காமுல் குர்ஆன் என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்; அநியாயங்களோடும் அநியாய ஆட்சியாளர்களோடும் போராடுவது குறித்த அவரது கருத்து பிரபல்யமானது. எனவேதான் இமாம் அவ்ஸாஇ 'அபூ ஹனீபாவின் எல்லா விடயங்களையும் நாம் ஏற்றோம்; சகித்துக் கொண்டோம். கடைசியில் அவர் வாள் தூக்குவது பற்றிய கருத்தைக் கொண்டு வந்தார். அந்நிலையில் அவரை எம்மால் எற்க, சகிக்க, முடியாமல் போய்விட்டது' என்கிறார் [அஹ்காமுல் குர் ஆன் வா- 1, பக்.81]<br /> <br />நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதை வாயால் செய்வது கடமையாகும். அது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் வாளால் தீமையைத் தடுக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. [அஹ்காமுல் குர் ஆன், வா- 1, பக்.81]. அதாவது உபதேசமும் நற்போதனைகளும் பயன்படாதபோது பரிகாரம் என்ற கருத்தை அபூ ஹனீபா கொண்டிருந்தார்.<br /><br />இது இமாம் அபூ ஹனீபா மட்டும் கொண்டிருந்த கருத்தல்ல. இப்னு ஹஜர் பத்ஹுல் பாரியில் குறிப்பது போன்று இது ஆரம்பகால அறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது. ஹிஜ்ரி முதாலம் நூற்றாண்டில் வாழ்ந்த அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்த பேரறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது.<br /><br />அபூபக்கர் [ரழி] அவர்கள் கலீபாவாக பை அத் செய்யப்பட்ட பின்னர் நிகழ்த்திய முதலாவது உரையில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்; 'அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நான் வழிப்பட்டு நடக்கும் வரை எனக்குக் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தால் எனக்குக்கட்டுப்பட்டு நடப்பது உங்களுக்கு கடமையன்று' [ஸுரா;இப்னு ஹிஷாம் வா௪, பக்- 211] <br /><br />உமர்[ரழி] அவர்கள்கீழ்வாருமாறு கூறுகின்றார்; 'யார் முஸ்லிம்களின் ஆலோசனையின்றி ஒரு தலைவருக்கு பைஅத் செய்கின்றாரோ அந்த பைஅத் செய்யப்பட்டவருக்கு பைஅத் செல்லுபடியாகாது. அத்தோடு பைஅத் செய்தவர்களின் பைஅத்தும் நிறைவேறாது' (முஸ்னத் அஹ்மத் வா- 1, பக்- 391).<br /><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size:13px;"><span style="color:#000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color:#336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color:#336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color:#336699;">பதிப்புரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/5.html"><span style="color:#336699;">முந்தைய பகுதி</span></a></div></span></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-57147921339214165662010-10-27T01:05:00.000-07:002011-09-20T22:54:07.498-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -5<div style="text-align: justify;">எனினும், இமாம் ஸைதின் புரட்சி 123இல் அவர் கொலை செய்யப்பட்டதோடு முடிவுற்றது. அவருக்குப் பின்னர் அவரது மகன் யஹ்யா ஹிஜ்ரி125இல் குராசானில் புரட்சியை ஆரம்பித்து அவரும் தந்தையைப் போல் கொலையுண்டார். பின்னர் அப்துல்லாஹ் இப்னு யஹ்யா தன் பெற்றோர்களின் உரிமையைக் கோரி போராட்டத்தை ஆரம்பித்தார்.<span class="fullpost"> உமையா ஆட்சியின் இறுதிக் கலீபா மர்வான் இப்னு முஹம்மத் அனுப்பிய படைகளோடு இவர் யெமனில் மோதினார். எனினும், ஹிஜிரி 130இல் தனது பெற்றோர் போன்றே இவரும் ஷஹீதானார். அத்தோடு வேதனை மிக்க இந்த வரலாற்றுப் பக்கம் உண்மையாகவே மூடுண்டு போனது.<br /><br />ஸைத் இப்னு அலி [ரழி] இமாம் அபூ ஹனீபாவின் உள்ளத்தில் பெற்றிருந்த உயர்ந்த அந்தஸ்தை மேலே விளக்கியவற்றிலிருந்து புரிந்து கொள்ளமுடியும். இமாம் ஸைதின் போராட்டத்தை இறைத்தூதர் [ஸல்] அவர்களின் பத்ர் போருடன் ஒப்பிடும் அளவுக்கு இமாம் அபூ ஹனீபா சொன்னார்கள் என ஏற்கனவே கண்டோம்.<br /><br />ஸைத் இப்னு அலியின் அறிவு, ஒழுக்க, மார்க்க உணர்வு என்பவற்றை இமாம் அவர்கள் உணர்ந்து மதித்தார். ஸைதை தலைமைக்குத் தகுதிமிக்க சத்திய இமாமாகவே அபூ ஹனீபா கருதினார். போரில் பங்குகொள்ளாதவன் என்ற பெயர் தனக்கு வரக்கூடாது என்பதற்காக செல்வத்தின் மூலம் போராட்டத்திற்கு உதவவும் செய்தார். எனினும், அவரும் அவருக்குப் பின்னால் அவரது மகனும் அவருக்குப் பின்னால் அவரது பேரனும் கொல்லப்பட்டமையை இமாம் பார்க்க வேண்டியதாயிற்று. இது அவர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தைக் கொடுத்தது. எனவே நடந்த இவ்வநியாயங்கள் குறித்து அவரது நாவு பேசியது. கோபங்கொண்ட அறிஞர்களது நாவுகள் கொடுவாள் செய்யாதவற்றையும் செய்யும். அரசனின் வாளைவிட நாவின் தாக்குதல் மிகப்பலம் வாய்ந்தது.<br /><br />இமாம் அபூ ஹனீபாவின் நடத்தை அவர் கொள்கை ரீதியாக இப்பிரச்சினையில் கொண்டிருந்த கருத்துக்கு உடன்பாடாக உள்ளது. இமாம் ஸைத் கூபாவில் இருந்து புரட்சியை ஆரம்பித்தார். கூபா மக்களின் மனோநிலையையும் அவர்கள் அலி [ரழி] அவர்களோடு நடந்து கொண்ட முறையையும் இடைநடுவே ஹுஸைன் [ரழி] அவர்களைக் கைவிட்டமையையும் இமாம் அபூஹனீபா நன்கறிந்திருந்தார்.<br /><br />இமாம் ஸைத் ஆரம்பித்திருந்த இயக்கம் கூபாவில் மட்டுமே பரவியிருந்தது. நன்கு பலம் பெறும் அளவு வேறு பகுதிகளுக்கு அது பரவியிருக்கவில்லை. இயக்கத்தைத் துவங்கி ஆறு மாதங்கள் மட்டுமே சென்றிருந்தது. இக்காலப் பிரிவு பரவலுக்கோ இயக்க முதிர்ச்சிக்கோ போதுமானதல்ல. இக்காரணங்களால்தான் பல அறிஞர்களும் இமாம் ஸைதை எச்சரித்தார்கள். போராட்டத்தை துவங்குவதையும் தடுக்க முயன்றார்கள். இவற்றையெல்லாம் கண்ட இமாம் அபூ ஹனீபா இப்புரட்சியின் வெற்றி குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.<br /><br />அடுத்தபோராட்ட முயற்சியை "நப்ஸ் ஜகிய்யா" என அழைக்கப்பட்ட முஹம்மத் இப்னு அப்துல்லாஹ்வும் அவரது சகோதரர் இப்றாஹீமும் ஆரம்பித்தனர். இவர்கள் ஹுஸைன் [ரழி] அவர்களின் பிள்ளைகளாவர். இப்போராட்டம் ஹிஜ்ரி 145இல் நடைபெற்றது. அப்போது இமாம் அபூ ஹனீபா சமூகத்தில் பெரும் செல்வாக்கும் உயர்ந்த அந்தஸ்தும் பெற்றிருந்தார்.<br /><br />இம்முறை இமாம் அபூ ஹனீபாவின் நிலைப்பாடு முன்பை விட முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருந்தது. அபூஹனீபா இம்முறை இந்த இயக்கத்திற்குப் பகிரங்கமாகவே உதவினார். தமது வகுப்புகளில் தாம் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகவே பேசினார். கலீபா மன்சூரின் தளபதிகள் சிலரை நப்ஸ் ஜகிய்யாவோடு போராடச் செல்வதை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இமாமின் செல்வாக்கு சென்றது. அப்போது கலீபா மன்சூர் கூபாவில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இமாம் அபூ ஹனீபாவின் மாணவர்கள் தாம் அனைவருமே கைது செய்யப்பட்டு விடுவோமோ என்று கூடப் பயந்தார்கள்.<span class="Apple-style-span" style="font-size: 13px;"><span style="color: #000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color: #336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color: #336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color: #336699;">பதிப்புரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/4.html"><span style="color: #336699;">முந்தைய பகுதி</span></a></span></div>நஸீர் அஹமதுhttp://www.blogger.com/profile/13872615019748888619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-24247784583893809692010-10-19T02:40:00.000-07:002010-10-19T02:40:27.279-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -4<div style="text-align: justify;">இமாம் அபூ ஹனீபாவைப் பொறுத்தவரையில் அவர் இரு ஆட்சிகளைக் கண்டார். உமையா ஆட்சியின் ஆரம்ப பலமிக்க காலப்பிரிவிலும் அது பலவீனமுற்று வீழ்ச்சியடைந்த காலப்பிரிவிலும் அவர் வாழ்ந்தார். அப்பாஸீய அரசை அதன் தோற்ற காலப்பிரிவிலும் சிறு சிறு இராச்சியப் பிரிவுகளாகப் பரவி வருகின்ற போதும் கண்டார். பின்னர் உமையாக்களுடன் போராடி அவர்களிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் மீது அதிகாரம் செலுத்தியும், ஆசையூட்டியும், பயமுறுத்தியும் அவர்களைப் பணியவைக்கும் போதும் கண்டார். இவை அனைத்தையும் கண்ட இமாம் அபூ ஹனீபா அதனால் பாதிப்புறவும் செய்தார். எனினும், உமையாக்களுக்கு எதிரான புரட்சியாளர்களோடு அவரும் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.</div><br />
<div style="text-align: justify;">ஸைத் இப்னு அலி ஜைனுல் ஆபிதீன் [ரழி], உமையா கலீபா ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்கிற்கு எதிராக ஹிஜ்ரி 121இல் ஆயுதப்புரட்சி ஒன்றை மேற்கொண்டபோது இமாம் அபூ ஹனீபா, "இறை தூதர் [ஸல்] அவர்கள் பத்ர் யுத்தத்திற்குப்ப் புறப்பட்டது போன்றே இவருடைய புறப்பாடும் உள்ளது" என்று கூறியதாக வரலாற்றுப் பதிவு இருக்கின்றது. அப்போது அபு ஹனீபாவிடம், "அவ்வாறாயின் நீங்கள் ஏன் போரில் கலந்து கொள்ளாது பின் தங்குகிறீர்கள்?" என வினவப்பட்டது. இதற்கு இமாம், "என்னிடம் மக்கள் அமானிதமாகத் தந்த பொருட்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறு இப்னு அபீ லைலாவிடம் கேட்டேன். அவர் ஏற்கவில்லை. அந்நிலையில் நான் யுத்தத்தில் இறந்தால் அநியாயம் இழைத்தவனாக மரணிக்க வருமோ எனப் பயப்படுகின்றேன்" என்றார். அத்தோடு இமாம் அபூ ஹனீபா தான் போராட வராமைக்குக் கீழ்வருமாறு நியாயம் கூறியதாகவும் வரலாற்றுப் பதிவு உண்டு:</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">"மக்கள் அவரது தந்தையை இடைநடுவே கைவிட்டது போல் இவரையும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருப்பின் அவரோடு நான் போராடச் சென்றிருப்பேன். ஏனெனில், அவர் சத்தியத்தின் அடிப்படையில் எழுந்த இமாம். நான் நேரடிப் போரில் கலந்து கொள்ளாவிட்டாலும் செல்வத்தால் அவருக்கு உதவுகிறேன்." இந்தவகையில் பத்தாயிரம் திர்ஹம்களையும் இமாம் அபூ ஹனீபா அனுப்பிவைத்தார். தான் அனுப்பிய நபரைப் பார்த்து இமாம் ஜைனுல் ஆபிதீனிடம் தான் வராமைக்கான நியாயங்களை விளக்கிச் சொல்லுமாறும் கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தவகையில் இமாம் அபூ ஹனீபா உமையா ஆட்சிக்கெதிராக புரட்சி செய்வதை ஷரீஅத் ரீதியாக ஆகுமானது எனக் கண்டார் என்பது தெளிவாகின்றது. அவர் முஜாஹித்களோடு வாள்தூக்கிப் போராடவும் விரும்பியுள்ளார் என்பதும் தெளிவு. எனினும், விளைவு வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">ஜைனுல்ஆபிதீனின் ஆயுதப் போராட்டத்திற்குப் போதுமான ஆதரவும் நல்ல விளைவைத் தரக் கூடிய பலமும், அவரது சிந்தனையை ஏற்றுப் பாதுகாக்கும் உள்ளங்களும் இல்லாவிட்டாலும், அது சத்தியத்தின் செயற்பாடே என்ற கருத்தை இமாம் கொண்டிருந்தார் என்பதும் இங்கு தெளிவாகின்றது. இந்த வகையில் போராட்டத்தின் பலவீனமான இந்நிலையிலும் அதனைத் தடுக்கும் ஒருவராக அவர் இருக்க விரும்பவில்லை. எனவேதான் தமது ஆதரவைக் காட்ட பெரும் தொகைப் பணத்தைக் கொடுத்துதவினார். செல்வம் ஒரு முக்கிய சக்தி என்பதில் சந்தேகமில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><span style="color: #000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color: #336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color: #336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color: #336699;">பதிப்புரை</span></a> | <a href ="http://islamiccollections.blogspot.com/2010/10/3.html">முந்தைய பகுதி</a>இப்னு ஜமால்http://www.blogger.com/profile/17369794833892704219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-14319806236751212492010-10-18T02:37:00.000-07:002010-10-18T02:38:57.793-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -3<div style="text-align: center;"><strong><u>01.இமாம் அபூஹனீபாவும் சமூக மாற்றமும்</u></strong></div> <br />
<div style="text-align: justify;">கிலாபத்தோடு முஸ்லிம்கள் கொண்டிருந்த பற்று ஓர் இலட்சியவாத மாதிரியோடு தொடர்புபட்டிருந்தது. நேர்வழி சென்ற கிலாபத் அமைப்பையே[கிலாபா ராஷிதா] இங்கு குறிப்பிடுகிறோம். குறிப்பாக அவ்வுன்னத கிலாபத்தில் வாழ்ந்தவர்கள் மற்றும் அதனை தம் கண் முன்னே கண்டவர்களைப் பொறுத்தவரையில் இது தெளிவான உண்மையாக இருந்தது.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பின்னால் வந்த அதிகாரப் பற்று நிறைந்த முடியாட்சி முறைகளையோ அல்லது சர்வாதிகாரப் போக்குக் கொண்ட ஆட்சி அமைப்புக்களையோ கண்டபோது இவர்களுக்கு கிலாபத் மீது கொண்ட பற்று அதிகரித்தது. கடும் கசப்புணர்வும் அவர்களைப் பீடித்தது. முன்பிருந்த உன்னத நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்று அவர்கள் மிகுந்த அவாவுற்றனர். இந்த நிலைப்பாட்டிற்குள் தான் தங்கள் அவாவை சாதிக்க ஒன்றன் பின் ஒன்றாக பல இயக்கங்கள் தோன்றின. ஆனால், அவை அனைத்தும் தோல்வி கண்டன. ஏனெனில், அவ்வியக்கங்களை வழிநடத்தியோர் கருதியதைவிட அன்றைய நிலைமை மிக கடுமையாக இருந்தது. சமூக மாற்றங்கள் குறித்த அல்லாஹ்வின் நியதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவையும் காணப்பட்டது.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;"><span style="color: blue;">"ஒரு சமூகத்திலுள்ள மனிதர்கள் தம் உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றாத வரையில் அல்லாஹ் அச்சமூகத்தில் உள்ள நிலைகளை மாற்றுவதில்லை" [அர்ரஃத்:11].</span> </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உமையா, அப்பாஸிய காலப் பிரிவின்போது தோன்றிய சில ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை சீராகவும் அருள் நிறைந்ததாகவும் இருந்தது உண்மையே. எனினும், முஸ்லிம்கள் இலகுவாக கிலாபா ராஷிதாவுக்கு மீண்டுவிட முடியும் என நினைத்து விட்டார்கள். இலட்சிய மாதிரியைக் காட்டாத-ஆயினும் ஆழ வேருன்றிப் பதித்துவிட்ட பலமிக்க அந்த ஆட்சிகளை அகற்ற மிகப் பாரிய உழைப்பும் பெரும் தியாகங்களும் தேவைப்படும் என்பதை அவர்கள் உணரவில்லை. பாதுகாப்புக்குப் பெரும் படைப் பிரிவுகளையும் பாரிய செல்வங்களையும் கொண்டியங்கி வரும் அவ்வாட்சிகளை வெற்று ஆசைகளாலும் இலட்சியக் கனவுகளாலும் சிதறுண்ட சில சிறிய முயற்சிகளாலும் அகற்றிவிடல் சாத்தியமானதல்ல.</div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">இந்த நிலைகளிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவர பாரியளவு உயிரழிவும் சீர்கேடுகளும் தவிர்க்க முடியாதது என இஸ்லாமிய சட்ட நிபுணர்களும், அறிஞர்களும் கண்டனர். எனவே, அதனைத் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம் என்ற வகையில் வெறுப்புடனும் ஏற்க வேண்டியதாயிற்று. </div><div style="text-align: justify;"> </div><div style="text-align: justify;">பாரியளவு இரத்தம் சிந்தாமலும் பெரும் குழப்ப நிலைகளுக்கு வழி வகுக்காமலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க பாரிய கூட்டமைப்பு இல்லா நிலையில் புரட்சி செய்வதால் வரும் தீமைகள் நன்மைகளை விட பாரியவையாக இருக்கும் என அந்த சட்ட நிபுணர்களும் அறிஞர்களும் கண்டனர். எனவே, அவர்கள் உள்ளிருந்தே சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட முயன்றனர். இந்த வகையில் அவ்வறிஞர்களில் சிலருக்கு ஆட்சியாளர்களோடு நெருங்கிய தொடர்பிருந்தது. அவர்கள் அத்தொடர்பை ஆட்சியாளர்களுக்கு உபதேசிக்கப் பயன்படுத்தினர். ஏனெனில், அவ்வாட்சியாளர்கள் மூலம் சில அநியாயங்களும் சில வரம்பு மீறல்களும் நிகழ்ந்தபோதிலும் இஸ்லாமிய சட்டங்கள் மூலம் ஆட்சி புரியும் முஸ்லிம்களாகவே அவர்கள் இருந்தனர். <br />
<br />
உதாரணமாக, இமாம் ஸுஹ்ரி உமையாக்களுடன் சத்தியத்தில் நெகிழ்ந்து கொடுக்காத வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்தார். எனினும், இமாம் ஸயித் இப்னு அல் முஸய்யப், இப்னு அபீதிஃப் போன்றவர்களது ஆட்சியாளர்களைப் பொருத்தவரையிலான நிலைப்பாடு சத்தியத்தைப் பொறுத்தவரையில் பலமாகவும் மிகுந்த உறுதி கொண்டதாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><span style="color: #000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"><span style="color: #336699;">நூலாசிரியர் பற்றி...</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"><span style="color: #336699;">முன்னுரை</span></a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"><span style="color: #336699;">பதிப்புரை</span></a></div>இப்னு ஜமால்http://www.blogger.com/profile/17369794833892704219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-80527811563500135602010-10-17T09:40:00.000-07:002010-10-17T09:40:12.110-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -2<div style="text-align: center;"><div style="text-align: center;"><b><u><span style="font-family: TheneeUni;">பதிப்புரை</span></u></b></div><span style="font-family: TheneeUni;"><span style="font-weight: bold;"></span></span></div><br />
<div style="text-align: justify;"><span style="font-family: TheneeUni;">மாற்றம் ஒரு மாறாத சமூக விதி என்பர். இயங்கிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு சமூகத்தினதும் உயிர்த் துடிப்பு மாற்றத்தின் போக்குகளிலேயே தங்கியிருக்கிறது. சமூக அரசியல் போக்குகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தனி மனிதனையும் ஆழமாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்புகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைய முடியும். இந்த வகையில் சமூக - அரசியல் மாற்றம் பற்றிய பிரக்ஞை, அறிவு, தெளிவு என்பன அனைவருக்கும் அவசியமாய் உள்ளன. <br />
<br />
சமூக அரசியல் மாற்றம் பற்றிய மிகத் தெளிவான கொள்கை ஓன்றின் அடிப்படையிலேயே முன்னோக்கிய சமுக அரசியல் மாற்றத்தை அறுவடை செய்து கொள்ளலாம். இச்சிந்தனையின் அடுத்த கட்ட நகர்வாகவே சமூக அரசியல் செயற்பாடு அமைகிறது.<br />
<br />
அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தைச் சரியான திசையில் வழிப்படுத்த இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடியாக உருவான இமாம்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் தொடர்ச்சியில் நவீன காலத்தைப் பொருத்திப் பார்க்கும் ஒரு பெறுமதியான நூலாக இது விளங்குகிறது.<br />
<br />
இதனை இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்காக உழைக்கும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும் - அதனைச் செயற்பாடுகளாக மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த அவா எமக்குள்ளது.</span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="font-family: TheneeUni;">இரத்தம் சிந்துவதே விதி என்றாகிப் போன இந்தக் காலத்தில், இந்த நூல் அதனைக் குறைப்பதற்குப் பங்களித்தால் எமக்கு ஆறுதலாக இருக்கும். சமூக மாற்றம் அர்த்தம் செறிந்ததாக காலப் பொருத்தமுடையதாக அமைய வேண்டும் என்பதே எமது அடிப்படை எதிர்பார்ப்பாகும்.<br />
<br />
முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்கள் அழிவின் முகவர்களாக அல்லாது, ஆக்கத்தின் தூதுவர்களாக இஸ்லாத்தின் செய்தியை முன் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் அயராது உழைப்போமாக. அந்த முயற்சியில் இந்த நூலும் இதன் சிந்தனைகளும் ஒரு சிறு பங்கையேனும் வழங்கினால் அது எமக்கு மிகுந்த திருப்தியைத் தரும்.<br />
<br />
இந்நூலை எழுதிய ஷெய்க் நாதிர் நூரி அவர்களுக்கு அல்லாஹ் தனது அருளைப் பொழிவானாக. இதனை மொழி பெயர்க்க அனுமதித்த அவருக்கும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து தந்த அன்புக்குரிய உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் அவர்களுக்கும் மீள்பார்வை ஊடக மையத்தின் பணியாளர்களுக்கும் எமது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.<br />
<br />
<b>பதிப்பாசியர்<br />
மீள்பார்வை ஊடக மையம்<br />
08.02.2008 </b> <span style="font-weight: bold;"> </span></span></div><b><span lang="TA" style="font-family: TheneeUni;"></span></b><b><span style="font-family: TheneeUni;"><o:p></o:p></span></b><br />
<br />
<div class="MsoNormal"><span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><span style="color: #000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></span></div><div class="MsoNormal"><br />
<a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html">நூலாசிரியர் பற்றி...</a> | <a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html">முன்னுரை</a></div>நஸீர் அஹமதுhttp://www.blogger.com/profile/13872615019748888619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-18840512808985710462010-10-16T15:10:00.000-07:002010-10-16T15:10:49.030-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -1<div class="MsoNormal" style="text-align: center;"><b><u><span style="font-family: TheneeUni;">முன்னுரை</span></u></b><span style="font-family: TheneeUni; font-size: 10pt;"> </span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">அல்லாஹ் இறக்கிய இறுதி இறைத் தூது ஓர் உன்னதமான சமூகத்தை அமைத்தது. தத்துவஞானிகளும், சிந்தனையாளர்களும் கனவு கண்ட அந்த இலட்சிய சமூகம் அறபுப் பாலைவெளியில் தோன்றியது. மிகக் குறுகிய காலத்தில் அது சாம்ராஜ்யமொன்றை அமைத்தது. வெறும் பெளதீக எல்லையை மட்டுமல்ல, வெற்றி கொண்ட பெருந்தொகை மக்களையும் தன் கொள்கையினுள் அது ஈர்த்தது. இப்படித்தான் நாடுகளும் சமூகங்களும் அதனுள் ஈர்க்கப்பட்டன.</span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">14 நூற்றாண்டுகளுக்குப் பின்னே நின்று அந்தச் சமூகத்தைப் பற்றிப் படிக்கும்போதே எமதுள்ளம் அதனால் ஆட்கொள்ளப்பபடுகிறது. மீண்டும் அப்படியொரு சமூகம் தோன்ற என்ன வழி? என ஏங்குகிறது. </span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">இந்நிலையில் மிக ஆரம்ப காலத்திலேயே அந்தச் சமூகம் தன் இலட்சிய நிலையிலிருந்து சற்று சரிந்தது. அதன் ஆட்சி நிலையின் ஒரு சரிவு இது. இலட்சிய சமூகத்தினுள் வாழ்ந்து அனுபவித்த அந்த மனிதர்கள் எப்படி இதனைச் சகித்துக் கொள்வார்கள்?</span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">இந்த மனோநிலையின் பின்னணியில்தான் இறைதூதர் [ஸல்] அவர்களின் செல்வப் பேரன் ஹுஸைன் [ரழி] அவர்கள் மிகச் சொற்ப தொகையினருடன் கர்பலாவில் மோதினார்கள். அந்தப் போரை யுத்த தந்திரோபாயங்கள் என்ற பின்னணியிலிருந்து நோக்குவது பொருத்தமற்றது. கருத்து, மன உணர்வுகளின் பாரத்திலிருந்தே அதை நோக்க வேண்டும்.</span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">சிந்தனைக்காகவும் இலட்சியத்திற்காகவும் போரிடுபவர்கள் யுத்த தந்திரோபாயங்களை விட இலட்சியத்திற்கான தியாகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இது அவர்களின் பலவீனமா அல்லது பலமா என்பது ஒரு புறம் இருக்க, தியாகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பாரியது என்பதில் சந்தேகமில்லை. </span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">இப்படி அந்த இலட்சிய சமுகத்தை நோக்கிய போராட்டங்களும் அதற்கான முயற்சிகளும் தொடர்பான இந்த ஆய்வு, அந்தப் போராட்டங்களையும் முயற்சிகளையும் பற்றிய ஆழ்ந்த விளக்கத்தைத் தருகிறது. குறிப்பாக நான்கு பெரும் இமாம்களின் அது பற்றிய முயற்சிகளையும் போராட்டங்களையும் ஆய்கிறது. பின்னர் நவீன கால சமூக மாற்றப் போராட்டங்களையும் அதனோடு தொடர்பு படுத்தி ஆய்கிறது. குறிப்பாக வன்முறை அடிப்படையிலான போராட்டத்தையும், வன்முறை தவிர்ந்த போராட்டத்தையும் அழுத்தி ஆராய்கிறது. . இந்த ஆய்வை வாசிக்கும் போது நாம் நான்கு இமாம்களின் இன்னொரு பக்கத்தைப் புரிந்து கொள்கிறோம். சட்ட அறிஞர்களாக மட்டுமல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்திலும் அவர்கள் அர்த்தம் பொதிந்த ஆழிய சிந்தனைகளை முன்வைத்துள்ளமையையும் புரிகிறோம். இலட்சியவாதப் போக்கில் மட்டுமல்ல யதார்த்தபூர்வமாக அவர்கள் எப்படி இப்பிரச்சினையை அணுகியுள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறோம். </span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">இந்நூலை எழுதிய கலாநிதி ஷெய்க் நாதிர் நூரி ஆழ்ந்த இஸ்லாமிய ஆய்வாளர். சமூக மாற்றத் தளத்தில் நிற்கும் ஒரு போராளியும் கூட. எனவே, அறிவும் ஆய்வும் கள அனுபவமும் இங்கே சந்தித்துக் கொள்கின்றன; பின்னணியாக அமைகின்றன. என்னால் முடிந்தளவு முழுமையாக மூல நூலை மொழிபெயர்த்துள்ளேன். கருத்துப்போக்கு சிதையாமல் பார்த்துக் கொண்டுள்ளேன்.</span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">நூல் எழுதப்பட்டுள்ள ஒழுங்கிலிருந்து பார்க்கும் போது தமிழ் உலகுக்கு இது ஒரு புதிய நூல். சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு நல்லதொரு சிந்தனை அடித்தளமொன்றை இந்த நூல் தரும். </span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">இனி இஸ்லாமிய உலகுக்கு வெளியே சிறுபான்மையாக நிற்கும் நாம் இப்பிரச்சினையை எப்படிப் பார்க்க வேண்டும்? இஸ்லாம் உருவாக்கிய அந்த இலட்சிய சமூகத்தை நோக்கிய எம் கனவுகள் எப்படி அமைய வேண்டும்? யதார்த்தபூர்வமாக அதனை நோக்கி எப்படி நாம் அடியெடுத்து வைக்க வேண்டும்? அதற்கான திட்டங்களும் தந்திரோபாயங்களும் என்ன? இவை பற்றி சிந்திக்க இந்நூல் எம்மைத் தூண்ட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.</span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;"></span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;"></span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">நூலாசிரியர் மதிப்புக்குரிய அறிஞர் ஷெய்க் நாதிர் நூரி அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. மென்மேலும் இத்தகைய ஆய்வுகளை அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.</span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">கீழைத்தேய சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை நன்கறிந்த அறிஞர் ஒருவரின் நூல் இது. அந்த வகையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் அவருக்கு நன்றி செலுத்துகிறது. இந்நூலை மொழிபெயர்க்க அனுமதித்த ஷெய்க் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;">நூல் வெளிவர உதவியாக இருந்த சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.</span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-family: TheneeUni; font-size: 10pt;"> </span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><b><span style="font-family: TheneeUni; font-size: 11pt;">இறையருளையாசிக்கும்</span></b></div><div class="MsoNormal" style="text-align: justify;"><b><span style="font-family: TheneeUni; font-size: 11pt;">எம்.ஏ.எம்.மன்ஸூர்</span></b></div><div class="MsoNormal" style="text-align: justify;"><b><span style="font-family: TheneeUni; font-size: 11pt;">08.02.2008</span></b></div><div class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><span style="color: #000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></span></div><div class="MsoNormal" style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><span style="color: #000099;"> </span></span></span></div><div style="text-align: justify;"><a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html">நூலாசிரியர் பற்றி...</a></div>இப்னு ஜமால்http://www.blogger.com/profile/17369794833892704219noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-8948031228819583152010-10-15T09:57:00.000-07:002010-10-15T09:57:58.737-07:00சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்!<div class="MsoNormal" style="text-align: center;"><b><u><span style="font-family: TheneeUni;">நூலாசிரியர் பற்றி...</span></u></b><b><u><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"><o:p></o:p></span></u></b></div><div class="MsoNormal" style="text-align: center;"><span class="Apple-style-span" style="font-family: TheneeUni;"><span class="Apple-style-span" style="text-decoration: underline;"><b><br />
</b></span></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: 13px;">நாதிர் அப்துல் அஸிஸ் முஹம்மது அல்-நூரீஎன்ற முழுப்பெயர் கொண்ட இவர் 1954-ம் ஆண்டு குவைத் நாட்டில் பிறந்தார்.1977-இல் குவைத் பல்கலைக்கழகத்தில் சமூக நலத் துறையில் கலைமாமணிப் பட்டத்தையும்,இஸ்லாமியக் கற்கைகள் துறையில் முதுமாமணி மற்றும் கலாநிதிப் பட்டங்களையும் பெற்றார்.</span></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">இஸ்லாமிய உலகில் பிரபலமான சமூக செயற்பாட்டாளராகவும் புத்திஜீவியாகவும் மதிக்கபடும் இவர், சமூக நல செயற்பாட்டில் மிக நீண்ட அனுபவங்கள் கொண்டவர் என்பது மட்டுமன்றி, பல சமூக செயற்பாட்டு நிறுவனங்களின் பிதாமகனாகவும் உள்ளார்.<o:p></o:p></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இவர் ஆற்றிவந்துள்ள பணிகளுள் சில:<o:p></o:p></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><b><span style="font-family: TheneeUni; font-size: 11.0pt;">*</span></b><b><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">குவைத் வணிகக் கல்லூரி மற்றும் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி என்பவற்றில் ஆசிரியர் [1977-1979]<o:p></o:p></span></b></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><b><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">* குவைத் அரசின் வக்ஃபு மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் இஸ்லாமிய சட்டக் கலைக் களஞ்சிய ஆய்வாளர் [1981-1982].</span></b></div><div class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 12px;"><b><br />
</b></span></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><b><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">* வக்ஃபு மற்றும் இஸ்லாமிய நலன்புரி அமைப்பின் ஸ்தாபகராக இருந்ததுடன் அதில் பல்வேறு பதவிகளையும் வகித்தமை [1992-1995].</span></b></div><div class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 12px;"><b><br />
</b></span></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><b><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">* பலஸ்தீன நலன்புரி அமைப்பின் தலைவர் [1988முதல் இன்றுவரை].</span></b></div><div class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 12px;"><b><br />
</b></span></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><b><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">* "லஜ்னது அல் தஃரீஃப் பி அல் இஸ்லாம்" எனும் மாற்று மதத்தவர்களுக்கான இஸ்லாமிய பிரச்சார நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், செயலாளர் நாயகமாகவும், நிர்வாக சபைத்<span style="mso-spacerun: yes;"> </span>தலைவராகவும் பல்வேறு பதவிகளை இன்று வரை வகித்து வருகின்றமை.<o:p></o:p></span></b></div><div class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 12px;"><b><br />
</b></span></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><b><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">* "ஜம் இய்யது அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்-நூரீ அல் கைரிய்யா" என்ற சமூக நலன்புரி அமைப்பின் செயலாளர் நாயகம்[1981முதல் இன்றுவரை].<o:p></o:p></span></b></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><b><span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;">* "ஜம் இய்யது அல்-இஸ்லாஹ் அல்-இஜ்திமாஇ' என்ற குவைத்திலுள்ள மிகப் பிரபலமான சமூக சீர்திருத்த நிறுவனத்தின் அங்கத்தவராக இருப்பதுடன்,அதன்<span style="mso-spacerun: yes;"> </span>'லஜ்னது அல்-தஃவா அல்-இஸ்லாமிய' முதலிய பிரிவுகளை உருவாக்குவதிலும் பங்காற்றியவர்.<o:p></o:p></span></b></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">இவை தவிர, ஆசிய முஸ்லிம்களுக்கான அமைப்பு, ஆப்பிரிக்க முஸ்லிம்களுக்கான அமைப்பு, குவைத் பொது நிவாரண அமைப்பு, இஸ்லாமிய முதுசங்களைப் பாதுகாப்பதற்கான நிறுவனம், குவைத் பத்திரிக்கையாளர் சங்கம், பிரான்ஸிலுள்ள ஐரோப்பிய இஸ்லாமிய கலாபீடம், பிரித்தானியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும், நிர்வாகிகளில் ஒருவராகவும் பல பதவிகளை இன்றுவரை இவர் வகித்து வருகிறார்.<o:p></o:p></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">வளைகுடாப் பிராந்தியத்திலும் இஸ்லாமிய உலகிலும் சிலமுக்கியமான நலன்புரிச் சங்கங்களை உருவாக்குவதிலும் இவர் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார். உலகிலுள்ள முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் பற்றிய ஆழ்ந்த பரிச்சயமும் இவருக்குண்டு.<o:p></o:p></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"><span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;">இவையனைத்துக்கும் அப்பால் மிகச்சிறந்த இஸ்லாமிய அழைப்பாளராக விளங்கும் இவர், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இஸ்லாமியப் பிரச்சார முயற்சிகளோடு நீண்டகாலத்தொடர்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.<o:p></o:p></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><br />
</span></span></div><div class="MsoNormal" style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"><span style="color: #000099;">இறைவன் நாடினால் வளரும்....</span></span></span></div>நஸீர் அஹமதுhttp://www.blogger.com/profile/13872615019748888619noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-36640793736759176662009-03-18T04:19:00.000-07:002009-03-18T04:39:03.769-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 11.<p align="left"><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html">பாகம் 4</a> <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html">பாகம் 5</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html">பாகம் 6</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/7.html">பாகம் 7</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/12/8.html">பாகம் 8</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2008/06/9.html">பாகம் 9</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2008/09/10.html">பாகம் 10</a> </p><p><strong>பணமா?</strong></p><p><span style="color:#cc0000;">ஆசிரியர்:</span> அடுத்து ஒரு கேள்வி. நான் கேட்கிறேன் என்பதற்காக யாரும் சொல்ல வேண்டாம். விஞ்ஞானபூர்வமான உண்மையை மக்களுக்குக் காட்டணும்கிறதற்காக கேக்கறேன். எப்படி ஆப்பரேஷன் தியேட்டரில் போய் நிர்வாணமாக சிகிச்சை செய்யறமோ அதுமாதிரி உண்மையை தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். மதம் மாறுவதற்கு இங்கே யாராவது ஒருத்தராவது பணம் வாங்கியிருக்கிறாங்களா?</p><p><strong>ஒவ்வொருவர் சம்மதத்தோடும்....</strong></p><p>(உமரும் கூட இருப்பவர்களும் ஒட்டு மொத்தமாக இல்லை என்று சொல்கிறார்கள்)</p><p><span style="color:#cc0000;">உமர்:</span> நாங்க யாரும் பணம் வாங்கவும் இல்லை. கொடுக்கவும் இல்லை. மதம் மாறணும்கிற எண்ணம் வந்த பிறகு நாங்க ஒவ்வொரு வீடா போயி கேட்டோம் - கேட்ட பிறகு ஒட்டு மொத்தமா மதம் மாறணும்கிற முடிவுக்கு வந்து ஒரு பேப்பர்ல எழுதினோம். நாங்க யாருடைய தூண்டுதலும் இல்லாம நாங்களா மனமுவந்து இந்து மதத்திலிருந்தும் இந்து மதத்திலிருக்கிற 'பள்ளர்' என்ற பிரிவிலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறோம் என்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கித் தான் செய்தோம். இந்தப் புரளியெல்லாம் கிளப்பி விட்டது, இங்கே ஆர்.எஸ்.எஸ். ஒரு அய்யன் முளைச்சிருகிறான்.</p><p><strong>ஆர்.எஸ்.எஸ்.காரர்</strong></p><p></p><p><span style="color:#cc0000;">ஆசிரியர்:</span></span> அவரு பேரு என்னங்க?</p><p><span style="color:#cc0000;">உமர்: <span style="color:#000000;">அனந்தராமசேஷன்னு ஒரு அய்யன். அவரு தான் எல்லா புரளியும் கிளப்பி விடுகிறார். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தைப் போட்டு ஒருத்தரோடொருத்தர் சண்டையைக் கூட்டறதே அந்த ஆள்தாங்க. ஊரை அடிச்சு போட்டுருவோம்னு மிரட்டறதும் அந்த ஆள்தாங்க.</span></span></p><p><span style="color:#cc0000;"><span style="color:#000000;"></span>ஆசிரியர்: <span style="color:#000000;">அவங்க வேலையே அது தானே. பிரிட்டிஷ் காலத்திலருந்து நாம பார்த்துக்கிட்டு தானே வர்றோம்.</span></span></p><p><span style="color:#cc0000;"><span style="color:#000000;"></span>உமர்: <span style="color:#000000;">அவங்க பாலிசியே 'பிரிட்டிஷ் பாலிசிதானே.</span><br /></span><br /><span style="COLOR: rgb(0,0,153)">இறைவன் நாடினால் வளரும்....</span> </p>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-84183512367540621892008-09-03T22:26:00.000-07:002008-09-03T22:36:48.191-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 10.<p style="TEXT-ALIGN: right" align="left"><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html">பாகம் 4</a> <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html">பாகம் 5</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html">பாகம் 6</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/7.html">பாகம் 7</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/12/8.html">பாகம் 8</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2008/06/9.html">பாகம் 9</a> </p><strong>இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?</strong><br /><br /><span style="color:#cc0000;">ஆசிரியர்:</span> சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?<br /><br /><span style="color:#cc0000;">உமர்:</span> இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.<br /><br /><strong>கிறிஸ்தவ மதம் மாறினால்....</strong><br /><br /><span style="color:#cc0000;">ஆசிரியர்:</span> எத்தனை வருஷத்திற்கு முன்பு?<br /><br /><span style="color:#cc0000;">உமர்:</span> சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.<br /><br /><span style="COLOR: rgb(0,0,153)">இறைவன் நாடினால் வளரும்....</span>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-37749731987687907552008-06-22T05:48:00.000-07:002008-06-22T06:03:14.543-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 9.<p style="TEXT-ALIGN: right" align="left"><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html">பாகம் 4</a> <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html">பாகம் 5</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html">பாகம் 6</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/7.html">பாகம் 7</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/12/8.html">பாகம் 8</a> </p><span style="color:#cc0000;">உமர்:</span> அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.<br /><br />'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!<br /><br />'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'<br /><br />அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.<br /><br /><span style="color:#cc0000;">ஆசிரியர்:</span> மற்றவங்க யாரும் சந்திக்கலயா?<br /><br /><span style="color:#cc0000;">உமர்:</span> வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.<br /><br /><span style="color:#cc0000;">ஆசிரியர்:</span> அதுக்கு என்ன சொன்னாரு?<br /><br /><span style="color:#cc0000;">உமர்:</span> அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.<br /><br /><strong>இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?</strong><br /><br /><span style="COLOR: rgb(0,0,153)">இறைவன் நாடினால் வளரும்....</span>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-87554126225202488632007-12-25T00:26:00.000-08:002008-06-22T06:05:34.036-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 8.<p style="TEXT-ALIGN: right"><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html">பாகம் 4</a> <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html">பாகம் 5</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html">பாகம் 6</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/7.html">பாகம் 7</a> </p><br /><span style="COLOR: rgb(204,0,0)">உமர்:</span> நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.<?xml:namespace prefix = o /><o:p></o:p></span> <p></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்:</span> இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">உமர்:</span> மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்:</span> ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">உமர்:</span> சராசரி 5 பேரு.<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்:</span> அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">உமர்:</span> ஆமாம்!<o:p></o:p></span></p><p><b><span lang="TA" style="font-family:Latha;">முக்கியமானவரை மறப்பதா?<o:p></o:p></span></b></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்: </span>இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை </span><span style="font-family:'Courier New';">–</span><span lang="TA" style="font-family:Latha;"> இது மாதிரி தொந்தரவு இருக்குது.<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;">இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும்<span style="font-size:+0;"> </span>- நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">உமர்:</span> இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;">ஏன்னா, அவங்க </span><span style="font-family:'Courier New';">‘</span><span lang="TA" style="font-family:Latha;">சாதி இந்து</span><span style="font-family:'Courier New';">’</span><span lang="TA" style="font-family:Latha;">ன்னு வைச்சுக்கிறாங்களே தவிர </span><span style="font-family:'Courier New';">‘</span><span lang="TA" style="font-family:Latha;">அரிஜன்</span><span style="font-family:'Courier New';">’</span><span lang="TA" style="font-family:Latha;"> என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;">அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு </span><span style="font-family:'Courier New';">‘</span><span lang="TA" style="font-family:Latha;">அரிஜனை</span><span style="font-family:'Courier New';">’</span><span lang="TA" style="font-family:Latha;"> இந்துவா ஏத்துகிறதில்ல.<o:p></o:p></span></p><p><b><span lang="TA" style="font-family:Latha;">ஆக முடியாது<o:p></o:p></span></b></p><p><span lang="TA" style="font-family:Latha;">இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி </span><span style="font-family:'Courier New';">‘</span><span lang="TA" style="font-family:Latha;">இந்து</span><span style="font-family:'Courier New';">’</span><span lang="TA" style="font-family:Latha;">க்களுக்கும் </span><span style="font-family:'Courier New';">‘</span><span lang="TA" style="font-family:Latha;">அரிஜனனு</span><span style="font-family:'Courier New';">’</span><span lang="TA" style="font-family:Latha;">க்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி </span><span style="font-family:'Courier New';">‘</span><span lang="TA" style="font-family:Latha;">அரிஜன்</span><span style="font-family:'Courier New';">’</span><span lang="TA" style="font-family:Latha;"> இந்து ஆக முடியும்?<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்:</span> சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;">இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?<o:p></o:p></span></p><p><span lang="TA" style="font-family:Latha;"><span style="COLOR: rgb(204,0,0)"><span style="COLOR: rgb(204,0,0)">உமர்:</span> </span>சந்திக்கலிங்க.<o:p></o:p></span></p><span lang="TA" style="font-family:Latha;font-size:12;"><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்:</span> வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?</span> <p><span style="COLOR: rgb(0,0,153)">இறைவன் நாடினால் வளரும்.</span><br /><span style="font-family:TheneeUni;"><span lang="TA"><o:p></o:p></span></span></p>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-82772217521002468772007-06-09T01:19:00.000-07:002008-06-22T06:05:51.102-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 7.<div style="TEXT-ALIGN: right"><span style="TEXT-DECORATION: underline"></span><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html">பாகம் 4</a> <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html">பாகம் 5</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html">பாகம் 6</a></div><br /><span style="FONT-WEIGHT: bold">இப்போது ஏன் இந்த முடிவு?</span><br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> <blockquote>நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.</blockquote><span style="FONT-WEIGHT: bold">ஏது மரியாதை?</span><br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> எங்கே காட்டுறங்க? இல்லையே!<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> <blockquote>எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.</blockquote><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்: </span>இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்: </span>நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.<br /><br /><span style="FONT-WEIGHT: bold">துவேஷமே காரணம்</span><br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> <blockquote>மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?</blockquote><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> <blockquote>துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.</blockquote><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்:</span> ஆமா!<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> <blockquote>இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?<br /></blockquote><span style="COLOR: rgb(0,0,153)">இறைவன் நாடினால் வளரும்.</span>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-84372509250999910402007-06-07T01:01:00.000-07:002008-06-22T06:07:38.790-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 6.<div style="TEXT-ALIGN: right"><span style="TEXT-DECORATION: underline"></span><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html">பாகம் 4</a> <a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html">பாகம் 5</a></div><br /><div style="TEXT-ALIGN: center"><span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(51,102,255); FONT-STYLE: italic">மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?</span><br /><span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(51,102,255); FONT-STYLE: italic">(ஒலிநாடா பதிவிலிருந்து தரப்படுகிறது)</span><br /></div><br /><span style="FONT-WEIGHT: bold">இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-</span><br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்செரீப்: </span><blockquote>இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க" என்று சொன்னேன்! </blockquote><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்: </span>அதுக்கு மணியன் என்ன சொன்னார்?<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">உமர்செரீப்: </span>அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.<br /><br /><span style="COLOR: rgb(153,0,0)">ஆசிரியர்:</span> உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?<br /><br /><span style="FONT-WEIGHT: bold">20 வருடம் முன்பே</span><br /><br /><span style="COLOR: rgb(204,0,0)">உமர்செரீப்:</span> <blockquote>20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.<br />இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.<br />ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?<br />உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.<br /></blockquote><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்:</span> எந்தக் காலேஜில்?<br /><br /><span style="COLOR: rgb(204,0,0)">உமர்செரீப்:</span> ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.<br /><br /><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்:</span> சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!<br /><br /><span style="COLOR: rgb(204,0,0)">உமர்செரீப்: </span>ஆமா கிடைச்சது.<br /><br /><span style="COLOR: rgb(204,0,0)">ஆசிரியர்:</span> உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?<br /><br /><span style="COLOR: rgb(204,0,0)">உமர்செரீப்:</span> ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-9149908240948876752007-06-06T09:17:00.000-07:002008-06-22T06:07:53.539-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 5.<div style="TEXT-ALIGN: right"><span style="TEXT-DECORATION: underline"></span><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html">பாகம் 4</a></div><br />தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.<br /><br /><span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(255,0,0)">பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக 'திரிசூலம்' வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.</span><br /><br />மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.<br /><br />அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />'விசுவ இந்து பரிஷத்' ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).<br /><br /><span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(255,0,0)">பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் 'பக்தி போதை'யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.</span><br /><br />மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.<br /><br />நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!.<br /><br /><div style="TEXT-ALIGN: right">-<span style="FONT-WEIGHT: bold"> கி. வீரமணி<br /></span><div style="TEXT-ALIGN: left"><span style="COLOR: rgb(51,51,255)"><br />இறைவன் நாடினால் வளரும்.</span></div></div>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-65041171337360200982007-02-03T08:52:00.000-08:002008-06-22T06:08:08.003-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 4.<div style="TEXT-ALIGN: right"><span style="TEXT-DECORATION: underline"></span><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html">பாகம் 3</a><br /></div><br />இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.<br /><br />இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)<br /><br />வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)<br /><br />இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.<br /><br /><br /><span style="COLOR: rgb(51,51,255)">இறைவன் நாடினால் வளரும்.</span>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-24568475153740173412007-01-30T23:27:00.000-08:002008-06-22T06:08:22.954-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 3.<div style="TEXT-ALIGN: right"><span style="TEXT-DECORATION: underline"></span><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html">பாகம் 2</a><br /></div><br />விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் அ,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.<br /><br />சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.<br /><br />மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.<br /><br /><span style="COLOR: rgb(51,51,255)">இறைவன் நாடினால் வளரும்.</span>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-55457709069745799172007-01-27T02:18:00.000-08:002008-06-22T06:08:36.699-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 2.<div style="TEXT-ALIGN: right"><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a>, <a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html">பாகம் 1</a><br /></div>It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.<br /><br />The incident was communally interpreted by the RSS and VHP as 'an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.' It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite,, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP's socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.<br /><br />It is this break that a conservative upper-caste HINDU seemed unable to bear and accept-primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People's Awakening) to "warn" the HINDUS about "the international conspiracy to devour Hinduism". During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue.<br /><br />The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for "national integration". The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.<br /><br />இதன் தமிழாக்கம்:<br /><br />தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.<br /><br /><span style="COLOR: rgb(51,51,255)">இறைவன் நாடினால் வளரும்.</span>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-19355143.post-71824819498722429052007-01-09T23:46:00.000-08:002008-06-22T06:08:49.765-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 1.<strong>முன்னுரை - கி.வீரமணி.</strong><br /><div style="TEXT-ALIGN: right"><a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html">முன்னுரை</a><br /></div>1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர்.<br /><br />அவர்களை நான் அந்தப்பகுதிக்கு கழகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, இந்தச் சமூகப்பிரச்சினையில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று, அங்கே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், மதம் மாறாத அதே சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் - பல வயதுக்காரர்களையும் சந்தித்து, கேள்வி கேட்டு ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து அதையே ஒரு சிறு நூலாக அப்படியே அவர்கள் கூறியதை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாக்காது வெளியிட்டேன்.<br /><br />இந்த சந்திப்பு நிகழ்ந்த நாள் 25-07-1981 ஆகும்!<br /><br />அங்கே மொத்தம் உள்ள 300 குடும்பங்களில் 210 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியுள்ளனர். இவர்கள் 19-02-1981 அன்று மதம் மாறினார்கள்.<br /><br />இந்த ஆண்டில்(2002) ஒரியண்டல் லாங்குமென்ஸ் லிமிடெட் புத்தக கம்பெனியினரால் வெளியிடப்பட்டுள்ள "Vishwa Hindu Parishad and Indian Politics" என்ற ஓர் ஆங்கில நூல் - இதன் ஆசிரியர் "மஞ்சேரி காட்ஜு" என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார். இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African Studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி பட்ட ஆய்வினை இந்த தலைப்பில் மேற்கொண்டு செய்தார். அது தான் மேலே காட்டிய நூலாக வெளிவந்துள்ளது.<br /><br />அந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில், "Translation to Mass Activism" தீவிரதன்மை கொண்ட மக்கள் இயக்கமாக(வி.இ.ப) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.<br /><br />In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1,300 almost all of whom were "Untouchables", became a centre of controversy when large-scale conversions to Islam were reported. For the VHP and its associate organizations, the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but "a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan," financed by petrodollars.<br /><br /><span style="COLOR: rgb(51,51,255)">இறைவன் நாடினால் வளரும்.</span>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-19355143.post-41069670519563604022007-01-06T08:45:00.000-08:002008-06-22T06:09:16.042-07:00மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?<p dir="ltr" style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic" align="left">"விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்த்த் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்துமதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் என அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1000 -த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் அன அறிவிக்கப்பட்டது".</p><p dir="ltr" align="left">19/02/1981 இந்திய வரலாற்றில் பொன்னால் குறிக்கப்பட்ட நாள். தாழ்த்தப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட தலித், அரிஜன மக்களின் வரலாற்றில் ஓர் புதிய திருப்பதையும் எழுச்சியையும் கொடுத்த நாள். காலம்காலமாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த இந்த சமூகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருவதை உறுதிப்படுத்த, தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற குக்கிராமத்தில் வாழ்ந்த ஒரு கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களால் திட்டமிட்டு உருவாக்கிய வரலாற்றின் சிறப்புமிகு நாள்.</p><p dir="ltr" align="left">ஆம். இந்திய நாட்டின் சொந்தம் குடிகள் என உரிமை கொண்டாடுவதற்கு தகுதியுள்ள ஒரே இனமான தாழ்த்தப்பட்ட, அரிஜன தலித் மக்கள் தங்கள் வாழ்வின் விடுதலை தேடி பலநூறு ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் சூழலில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடும்ப சகிதம் சமத்துவம், சகோதரத்துவத்தை வேண்டி தாங்கள் ஒரு இந்து என பெயருக்கு முத்திரைக் குத்தப்பட்டு காலம்காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்ததிலிருந்து விடுதலை தேடி இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நாள் தான் இந்த 19/02/1981.</p><p dir="ltr" align="left">உலகமே தங்களை உற்று நோக்க வைத்த அந்த மக்கள் திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தனர்? அவர்களின் இந்த திடீர் முடிவுக்கு தூண்டுகோலாக இருந்தது எது? இம்முடிவு திடீரென எடுக்கப்பட்டதா? அல்லது திட்டமிட்டே நிகழ்ந்ததா? பல்வேறு கேள்விகளுடன் இந்தியாவின் அனைத்து பாகங்களிலிருந்தும் அரசியல்வாதிகளிலிருந்து மதத் தலைவர்கள் வரை அனைவரும் மீனாட்சிபுரத்தை நோக்கி படையெடுத்தனர்.</p><p dir="ltr" align="left">காலம்காலமாக இந்தியாவில் இஸ்லாம் வாளைக் கொண்டு பரப்பப்பட்டது என சங்க்பரிவார இயக்கங்களினால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், இந்தியாவில் எந்த முகலாயர்களின் ஆட்சியோ, முஸ்லிம் நிஜாம்களின் ஆட்சியோ அல்லது இந்திய ஜனநாயக சுதந்திர அரசில் முஸ்லிம்களின் எவ்வித பிடியுமோ இல்லாத சூழலில் திடீரென ஒரு கிராமத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் இஸ்லாத்திற்கு மாறிய இந்த சம்பவம், மததீயை வளர்த்து அந்த வெப்பத்தில் தங்கள் வளர்ச்சியை வார்த்தெடுத்து வரும் சங்க்பரிவார அமைப்புகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது என்றால் அது மிகையல்ல.</p><p dir="ltr" align="left">அதன் பின் அந்த அமைப்புக்களால் முடுக்கி விடப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் துவக்கத்தில் காணப்படும் பத்தியிலுள்ள முதல் வாசகத்தின் ஊற்றுக்கண். உண்மையில் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்ன என்பது வெளிவராத நிலையில், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பெரியவர் கி.வீரமணி அவர்கள் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று மதம்மாறிய தலித் மக்களுடனும் அவ்வூரில் வாழும் ஏனைய மக்களோடும் கலந்துரையாடி வந்தார். அப்பொழுது அவர் எடுத்த ஒலிவடிவில் இருந்த பேட்டியை "உண்மை விளக்கம் பதிப்பகம்" பதிப்பகத்தார் சிறுநூல் வடிவில் அதனை வெளியிட்டனர். </p><p dir="ltr" style="COLOR: rgb(0,0,0)" align="left">வரும் பதிவுகளில் மீனாட்சிபுரம் மக்களோடு பெரியவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடிய அந்த சம்பவத்தை காணலாம்.</p><p dir="ltr" style="COLOR: rgb(51,51,255)" align="left">இறைவன் நாடினால் வளரும்.<br /></p>அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.com1