Wednesday, March 18, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 11.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9, பாகம் 10

பணமா?

ஆசிரியர்: அடுத்து ஒரு கேள்வி. நான் கேட்கிறேன் என்பதற்காக யாரும் சொல்ல வேண்டாம். விஞ்ஞானபூர்வமான உண்மையை மக்களுக்குக் காட்டணும்கிறதற்காக கேக்கறேன். எப்படி ஆப்பரேஷன் தியேட்டரில் போய் நிர்வாணமாக சிகிச்சை செய்யறமோ அதுமாதிரி உண்மையை தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். மதம் மாறுவதற்கு இங்கே யாராவது ஒருத்தராவது பணம் வாங்கியிருக்கிறாங்களா?

ஒவ்வொருவர் சம்மதத்தோடும்....

(உமரும் கூட இருப்பவர்களும் ஒட்டு மொத்தமாக இல்லை என்று சொல்கிறார்கள்)

உமர்: நாங்க யாரும் பணம் வாங்கவும் இல்லை. கொடுக்கவும் இல்லை. மதம் மாறணும்கிற எண்ணம் வந்த பிறகு நாங்க ஒவ்வொரு வீடா போயி கேட்டோம் - கேட்ட பிறகு ஒட்டு மொத்தமா மதம் மாறணும்கிற முடிவுக்கு வந்து ஒரு பேப்பர்ல எழுதினோம். நாங்க யாருடைய தூண்டுதலும் இல்லாம நாங்களா மனமுவந்து இந்து மதத்திலிருந்தும் இந்து மதத்திலிருக்கிற 'பள்ளர்' என்ற பிரிவிலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறோம் என்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கித் தான் செய்தோம். இந்தப் புரளியெல்லாம் கிளப்பி விட்டது, இங்கே ஆர்.எஸ்.எஸ். ஒரு அய்யன் முளைச்சிருகிறான்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்

ஆசிரியர்: அவரு பேரு என்னங்க?

உமர்: அனந்தராமசேஷன்னு ஒரு அய்யன். அவரு தான் எல்லா புரளியும் கிளப்பி விடுகிறார். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தைப் போட்டு ஒருத்தரோடொருத்தர் சண்டையைக் கூட்டறதே அந்த ஆள்தாங்க. ஊரை அடிச்சு போட்டுருவோம்னு மிரட்டறதும் அந்த ஆள்தாங்க.

ஆசிரியர்: அவங்க வேலையே அது தானே. பிரிட்டிஷ் காலத்திலருந்து நாம பார்த்துக்கிட்டு தானே வர்றோம்.

உமர்: அவங்க பாலிசியே 'பிரிட்டிஷ் பாலிசிதானே.

இறைவன் நாடினால் வளரும்....

No comments: