Friday, October 15, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்!

நூலாசிரியர் பற்றி...

நாதிர் அப்துல் அஸிஸ் முஹம்மது அல்-நூரீஎன்ற முழுப்பெயர் கொண்ட இவர் 1954-ம் ஆண்டு குவைத் நாட்டில் பிறந்தார்.1977-இல் குவைத் பல்கலைக்கழகத்தில் சமூக நலத் துறையில் கலைமாமணிப் பட்டத்தையும்,இஸ்லாமியக் கற்கைகள் துறையில் முதுமாமணி மற்றும் கலாநிதிப் பட்டங்களையும் பெற்றார்.

இஸ்லாமிய உலகில் பிரபலமான சமூக செயற்பாட்டாளராகவும் புத்திஜீவியாகவும் மதிக்கபடும் இவர், சமூக நல செயற்பாட்டில் மிக நீண்ட அனுபவங்கள் கொண்டவர் என்பது மட்டுமன்றி, பல சமூக செயற்பாட்டு நிறுவனங்களின் பிதாமகனாகவும் உள்ளார்.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இவர் ஆற்றிவந்துள்ள பணிகளுள் சில:

*குவைத் வணிகக் கல்லூரி மற்றும் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி என்பவற்றில் ஆசிரியர் [1977-1979]

* குவைத் அரசின் வக்ஃபு மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் இஸ்லாமிய சட்டக் கலைக் களஞ்சிய ஆய்வாளர் [1981-1982].

* வக்ஃபு மற்றும் இஸ்லாமிய நலன்புரி அமைப்பின் ஸ்தாபகராக இருந்ததுடன் அதில் பல்வேறு பதவிகளையும் வகித்தமை [1992-1995].

* பலஸ்தீன நலன்புரி அமைப்பின் தலைவர் [1988முதல் இன்றுவரை].

* "லஜ்னது அல் தஃரீஃப் பி அல் இஸ்லாம்" எனும் மாற்று மதத்தவர்களுக்கான இஸ்லாமிய பிரச்சார நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், செயலாளர் நாயகமாகவும், நிர்வாக சபைத் தலைவராகவும் பல்வேறு பதவிகளை இன்று வரை வகித்து வருகின்றமை.

* "ஜம் இய்யது அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்-நூரீ அல் கைரிய்யா" என்ற சமூக நலன்புரி அமைப்பின் செயலாளர் நாயகம்[1981முதல் இன்றுவரை].

* "ஜம் இய்யது அல்-இஸ்லாஹ் அல்-இஜ்திமாஇ' என்ற குவைத்திலுள்ள மிகப் பிரபலமான சமூக சீர்திருத்த நிறுவனத்தின் அங்கத்தவராக இருப்பதுடன்,அதன்  'லஜ்னது அல்-தஃவா அல்-இஸ்லாமிய' முதலிய பிரிவுகளை உருவாக்குவதிலும் பங்காற்றியவர்.

இவை தவிர, ஆசிய முஸ்லிம்களுக்கான அமைப்பு, ஆப்பிரிக்க முஸ்லிம்களுக்கான அமைப்பு, குவைத் பொது நிவாரண அமைப்பு, இஸ்லாமிய முதுசங்களைப் பாதுகாப்பதற்கான நிறுவனம், குவைத் பத்திரிக்கையாளர் சங்கம், பிரான்ஸிலுள்ள ஐரோப்பிய இஸ்லாமிய கலாபீடம், பிரித்தானியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும், நிர்வாகிகளில் ஒருவராகவும் பல பதவிகளை இன்றுவரை இவர் வகித்து வருகிறார்.

வளைகுடாப் பிராந்தியத்திலும் இஸ்லாமிய உலகிலும் சிலமுக்கியமான நலன்புரிச் சங்கங்களை உருவாக்குவதிலும் இவர் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார். உலகிலுள்ள முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் பற்றிய ஆழ்ந்த பரிச்சயமும் இவருக்குண்டு.

இவையனைத்துக்கும் அப்பால் மிகச்சிறந்த இஸ்லாமிய அழைப்பாளராக விளங்கும் இவர், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இஸ்லாமியப் பிரச்சார முயற்சிகளோடு நீண்டகாலத்தொடர்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறைவன் நாடினால் வளரும்....

No comments: