திப்பு போர் செய்யும் போது நமது மதத்தின் ஆண்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு நம் சகோதரிகளான இந்துப் பெண்களைச் சிறை வைத்து ஆசை தீர கற்பழிப்பான். ஆலுவாமணிப்புரத்தைச் சேர்ந்த சிவனின் அனுக்கிரகத்தால் நமக்கு அப்போது அதிக நஷ்டம் ஏற்படவில்லை. என்றெல்லாம் வெறுப்பூட்டும் பொய்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்கள்.
இதையெல்லாம் இதயத்தில் சுமந்த என்னைப் போன்றவர்கள் முஸ்லிம்களை கடுமையாக வெறுத்தோம்; எதிர்த்தோம்; அழிக்க ஆசை கொண்டோம்.
முஸ்லிம்களின் தாடியைக் கண்டால் வெறுப்பு; அவர்களின் தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை முழு உருவத்தில் காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம். அதிலிருந்து முஸ்லிம்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.
அப்போது ஒப்பந்த ஊழியர்களின் சங்கம்[contract workers sangh] என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் உருவானது.
இந்த ஒப்பந்த ஊழியர்களின் சங்கத்தின் செயலராக நான் வேலை பார்த்து வந்தேன். மேடைப் பேச்சுக்கு தகுதியானவன் என்றதால்தான் எனக்கு அந்தப் பதவி கிடைத்தது. அந்த சமயத்தில் எங்களது எதிரியாக CITU இருந்தது. அதற்கெதிராகப் போராடிட நாங்கள் தீர்மானித்தோம். குடிலில் பாஸ்கர மேனோன் என்பவர் CITU என்ற தொழிற் சங்கத்தின் தலைவர்.
இந்த இரண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள். சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர் [அதாவது ஆர்.எஸ்.எஸ். காரர்கள்] இந்தச் சண்டைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். எங்களைத் தூண்டிவிட்டு விட்டு இவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
சொகுசாக வாழவேண்டும் என்ற சுயநலவாதிகளாக இருந்தார்கள் அந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களான சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர்கள். இவற்றையெல்லாம் அறியாமல் ஏதோ இந்து விடுதலைப் போராட்டம் என்ற நினைப்பில் மூடத்தனமாக நான் இயக்கத்துக்காக என்னை முழுமையாகத் தந்து கொண்டிருந்தேன்.
ஒரு நாள்,…………
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 8
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை
இறைவன் நாடினால் வளரும்.
Wednesday, December 06, 2006
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 7.
இதர
ஆர்.எஸ்.எஸ்,
நூல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment