<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-19355143</id><updated>2011-10-17T10:55:57.591-07:00</updated><category term='வரலாறு'/><category term='இஸ்லாம்'/><category term='முஸ்லிம்'/><category term='ஆர்.எஸ்.எஸ்'/><category term='மீனாட்சிபுரம்'/><category term='மதம் மாற்றம்'/><category term='சமூகம்'/><category term='அரசியல்'/><category term='நூல்'/><title type='text'>களஞ்சியம்</title><subtitle type='html'>படித்ததில் பிடித்த நூல்களின் தொகுப்பு.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>79</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-4556271381146552832</id><published>2011-09-20T21:42:00.000-07:00</published><updated>2011-09-20T22:24:34.379-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -12</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;04. இமாம் அஹ்மதும் சமூக மாற்றமும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அரசியல் பற்றிய இமாம் அஹ்மதின் சிந்தனைகள், அவரது பொதுவான சிந்தனைப் போக்கான பாரம்பரிய சிந்தனை முறைமையைக் கொண்டதாக அமைந்திருந்தன.&lt;br /&gt;&lt;span class="fullpost"&gt;&lt;br /&gt;பெரும்பாலான ஸஹாபாக்களும் தாபியீன்களும் கொண்டிருக்கும் கருத்தை இங்கு இமாம் அஹ்மத் முதன்மைப்படுத்தினார். கிலாபத், பைஅத் போன்ற அம்சங்கள் மட்டுமன்றி பொதுவாக சட்ட சிந்தனையிலும் இமாமின் போக்கு இவ்வாறு அமைந்திருந்தது. அத்தோடு இமாம் யதார்த்தபூர்வமான பார்வைக் கொண்டிருந்தார். குழப்ப நிலைகளைத் தவிர்த்து அமைதியும் சமாதான நிலையும் நிலவ வேண்டும் என்ற கருத்தை இவர் கொண்டிருந்தார். அத்தோடு முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பேணுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற போக்கும் இவரிடம் இருந்தது.&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;blockquote&gt;இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் இது ஒருவகையாகும். அல்குர்-ஆன், ஸுன்னா, ஸஹாபாக்கள், தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்தும் போக்கே இதுவாகும். அல்குர்-ஆனினதும் ஸுன்னாவினதும் வசனங்களுக்குக் காரணங் காணுவதில் இவர்கள் ஆழ்ந்து போக மாட்டார்கள். அல்குர்-ஆன் ஸுன்னாவுக்கு அடுத்தபடியாக ஸஹாபாக்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்துவார்கள். தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்கு அல்லது அவர்களில் பெரும்பாலோரது கருத்துக்கு இவர்கள் ஒரு பெறுமானத்தைக் கொடுப்பர்.(மொழிபெயர்ப்பாளன்).&lt;/blockquote&gt;---------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;அநியாயக்காரனாக இருந்தாலும் தன் பலத்தால் ஆட்சிக்கு வந்த இமாமுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை விட அவருக்குக் கட்டுப்படுவதே கடமையானது எனவும் அவர் கூறினார். ஒரு சர்வாதிகார ஆட்சியாளன் பல வருடங்கள் திட்டமிட்டுச் செய்யும் அநியாயங்களை விட கூடுதலான அநியாயங்களை அவனுக்கெதிரான ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தும். இது பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தி விடும் என இமாம் இக்கருத்திற்கு நியாயம் கூறினார். இக்கருத்து இமாம் மாலிக்கின் கருத்தை ஒத்திருக்கிறது எனக் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் இமாம் மாலிக்குக்கும், அஹ்மதுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கு அவதானிக்க வேண்டும். இமாம் மாலிக் அரசுக்கெதிரான் ஆயுதப் போராட்டத்தின் குழப்ப நிலைகளையும் கண்டார். ஆட்சியொன்று கவிழ்வதையும் அதன் பாரிய குழப்ப நிலைகளையும் கண்டார். ஏனெனில், இமாம் மாலிக் இருவேறு கிலாபத்துக்களைக் கண்டவர். இரு காலப்பிரிவுகளிலும் வாழ்ந்தவர். இவ்விரு காலப்பிரிவுகளிலும் போராட்டங்களும் குழப்ப நிலைகளும் வலுத்திருந்தன. அவற்றை இமாம் மாலிக் கண்டதோடு அக்காலப் பிரிவுகளிலேயே வாழ்ந்தார். எனவே, அவற்றால் அவர் பாதிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும், இமாம் அஹ்மத் குழப்பநிலைகளை அதிகமாக அவதானிக்கவில்லை. அவரது காலப்பிரிவு குழப்ப காலப்பிரிவை அண்மித்ததாக இருக்கவும் இல்லை. அமீனுக்கும், மஃமூனுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தையும் அதனால் விளைந்த குழப்பநிலையையுமே இமாம் அஹ்மத் அவதானித்தார். அக்குழப்ப நிலையின் விளைவு இறுதியில் மோசமாக அமைந்ததையும் இமாம் கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பாரசீக ஆதிக்கம் ஆட்சியில் வேரூன்றியது. பித்அத்கள் பரவின. இஸ்லாத்துக்குப் புறம்பான சிந்தனைகள் அதிகாரபீடத்தில் ஆதிக்கம் செலுத்தின. பித்அத் போக்காளர்கள் ஆட்சியாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தினர். அவர்களால் இமாம் சிறைவாசத்திற்கு உட்பட்டார்; துன்புறுத்தவும் பட்டார். மஃமூன், முஃதஸிம், வாஸிக் என தொடராக வந்த மூன்று ஆட்சியாளர்களால் அவர் துன்புறுத்தப்பட்டர். எனினும், இவை எதுவும் இமாம் அவர்களது உள்ளத்தில் பழிவாங்கும் உணர்வையோ ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சிந்தனையையோ விதைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையும் அங்கு கிடைத்த சித்திரவதைகளும் சட்டங்களை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவில்லை. அப்படி நடந்திருப்பின் அது மனோஇச்சையின் விளைவாகப் போயிருக்கும் அல்லது தமது காலப்பிரிவு ஆட்சியாளர்கள் கொடுத்த துன்பங்களின் விளைவாகப் போயிருக்கும். ஆதாரபூர்வமான ஸுன்னா, இஸ்லாத்தின் ஆரம்ப சந்ததியினரின் நடைமுறை, அவர்களது அனுபவங்கள் என்பவற்றிலிருந்தே கிலாபத் பற்றியும், அதற்கு எதிராக ஆயுதம் தூக்குவது பற்றியுமான சட்டங்களை இமாம் வகுத்தார். அத்தோடு இமாம், சமூக நலன்களையும் கவனத்தில் கொண்டார். சாதாரண எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இமாம் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை மறுத்தார். ஆட்சியாளர் நிலை எவ்வாறு இருப்பினும் அவருக்கெதிராக ஆயுதம் தூக்குவது அத்துமீறிய நடவடிக்கை என்றே இமாம் கணித்தார். தன்னைச் சித்திரவதை செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதைக் கூட இவ்வாறே இமாம் கருதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2011/09/11.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முந்தைய பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-4556271381146552832?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/4556271381146552832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=4556271381146552832' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/4556271381146552832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/4556271381146552832'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2011/09/12.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -12'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-5755317130725257135</id><published>2011-09-08T00:26:00.000-07:00</published><updated>2011-09-20T22:36:20.915-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -11</title><content type='html'>&lt;div align="justify"&gt;இமாம் அவர்களது காலத்து அரசியல் சூழல் பற்றி இங்கு விளக்குவது அவசியம். உமையாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள் இப்போது பலவீனமுற்றிருந்தன. ஷீயா, கவாரிஜ்கள் என்ற இரு முக்கிய பிரிவினரே ஆயுத முனையில் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடியவர்கள். &lt;span class="fullpost"&gt;இக்காலப்பிரிவில் இவர்கள் பலவீனமுற்றுப் போனதனால் குழப்ப நிலைகள் நீங்கி ஓரளவு அமைதி நிலவியது. இவர்கள் இரு சாராரும் ஆயுதங்களை வைத்து விட்டு பேனா என்ற ஆயுதத்தைத் தூக்க இப்போது ஆரம்பித்திருந்தார்கள். ஏனெனில் அரசு, ஆயுத மோதலுக்குப் பதிலாக கருத்துப் பரிமாறலொன்றை ஏற்படுத்தும் வகையில் பல அமர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் பல சிந்தனைகளைச் சீர்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. எனவே, ஒவ்வொரு பிரிவினரும் ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக தங்கள் சிந்தனைகளை ஆதாரங்களோடு பதிய முனைந்தனர். கருத்து ரீதியாக தம் சிந்தனைகளைப் பாதுகாக்க முனைந்தனர். இப்பின்னணியில் மக்கள் பல்வேறு கலைகளிலும், அறிவுத் துறைகளிலும் ஈடுபாடு காட்டலானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி அறிஞர்கள் இலக்கண விதிகளை வகுக்க ஆரம்பித்தார்கள். கலீல் இப்னு அஹ்மத் போன்ற இலக்கிய அறிஞர்கள் யாப்பிலக்கணத்தை வகுக்கலானார்கள். இஸ்லாமிய சட்டம், ஹதீஸ், தப்ஸீர் போன்ற துறைகள் இவ்வகையில் வகுக்கப்படலாயின. அப்போதைய இஸ்லாமிய அரசும் மேற்கே ஸ்பெயினிலிருந்து கிழக்கே சீனா வரையில் பரந்து விரிந்திருந்தது. எனவே, வளர்ச்சியடைந்த நகரங்கள் பல உருவாயின.ஒ வ்வொரு நகரும் பிரசித்தி பெற்ற அறிஞர்கள் பலரால் பிரபல்யம் ஆகியது. விளைவாக அறிவு தேடுவதற்கான பயணங்களும் அதிகரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸிய கலீபாக்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும், வீண் விளையாட்டுக்களில் சற்று அளவு மீறி ஈடுபாடு கொண்டவர்களாகவும், தடுக்கப்பட்ட, ஹராமான சில செயல்களை நெருங்கிச் சென்றவர்களாகவும் இருந்தார்கள். இத்தகைய சில பலவீனங்கள் அவர்களில் பலரிடம் காணப்பட்டபோதிலும் அவர்கள் மார்க்க உணர்வு கொண்டவர்களாக இருந்தார்கள். அறிஞர்களை நெருக்கமாக்கிக் கொண்டார்கள். அவர்களை உயர்த்தி மதித்தார்கள். அவர்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். அத்தோடு அறிவுக்கான வழிகளையும்,படி ப்பதற்கான வசதிகளையும் நன்கு ஏற்படுத்தினார்கள். மார்க்கத்திற்குப் புறம்பான சிந்தனைகளோடும், முஃதஸிலாக்களோடும் போராட அறிஞர்களின் உதவியையும் பெற்றார்கள். மஃமூன், வாஸித், முஃதஸிம் போன்ற சிலர் முஃதஸிலாக்களுக்கு ஆதரவாக நின்று அறிஞர்களை ஒதுக்கி அவர்களைத் துன்புறுத்தினார்கள் என்பது உண்மையாயினும் அப்பாஸிய கலீபாக்களில் ஏனையோர் அவ்வாறு இருக்கவில்லை. குறிப்பாக ஹாரூன் ரஸீத் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள், ஹதீஸ் துறை அறிஞர்கள், உபதேசகர்கள் போன்றோரைத் தனக்கு நெருக்கமாக வைத்து கொண்டார். முஃதஸிலாக்களை அவர் சிறை வைத்ததாக வரலாற்றில் பதிவுள்ளது. கலீபா முதவக்கிலும் முஃதஸிலாக்களை ஒதுக்கி இஸ்லாமிய அறிஞர்களை மீண்டும் பலம் பெற்றவர்களாக மாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் பொதுவாக அப்பாஸிய கலீபாக்கள் சிலபோது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு இருந்தாலும் அறிஞர்களின் உபதேசங்களைச் செவிமடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர்களுக்குக் கிடைத்த இந்த அந்தஸ்தின் காரணமாக அறிவு தேடும் போக்கு சமூகத்தில் வளர்ந்தது. குறிப்பாக அறிவுமன்றங்கள் கலீபாக்கள், கவர்னர்களின் மாளிகைகளில் தொடர்ந்தமையும் அங்கு கவிஞர்களும், சட்ட அறிஞர்களும், பல் தரப்பட்ட அறிவுத்துறைகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களும் போட்டி போட்டுக் கொண்டு சென்றமையும் அறிவு தேடுவோருக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2011/08/10.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முந்தைய பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-5755317130725257135?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/5755317130725257135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=5755317130725257135' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/5755317130725257135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/5755317130725257135'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2011/09/11.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -11'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-7846358871476058266</id><published>2011-08-08T16:53:00.000-07:00</published><updated>2011-09-20T22:37:30.498-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -10</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;03.இமாம் ஷாபிஈயும் சமூக மாற்றமும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் ஷாபிஈ அப்பாஸிய காலப் பிரிவில் ஹிஜ்ரி 150-ல் பிறந்தார். இவ்வாண்டிலேயே இமாம் அபூஹனீபாவும் மரணித்தார். இமாம் ஷாபிஈ இமாம் மாலிக்கிடம் கற்றார். குறிப்பிட்டதொரு காலப்பிரிவில்  இமாம் மாலிக்கிடம் கல்வி கற்பதிலேயே ஈடுபட்டிருந்தார்.&lt;span class="fullpost"&gt; பின்னர் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ள நஜ்ரானில் அரச தொழிலொன்றையும் செய்தார். அத்தொழில் மூலம் நீதியை நிலைநாட்டினார் என்பதோடு தனக்கு இழைக்கப்படும் அநீதிகள், தீங்குகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டார். குறைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்தவராகவும் இறைதூதர் (ஸல்) அவர்களின் வம்சாவழியைக் கொண்டவராகவும் இருந்தமையால் 'அலவி' பிரிவினரைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்டார். அப்போது அப்பாஸியர் அலவி தலைவர்களையும், அவர்களது செயற்பாடுகளையும் தேடித் திரிந்து வந்தமையே இதன் பின்னணியாகும். இந்த வகையில் சூழ்ச்சியாலும் பொய் முறையீடுகளாலும் இமாம் ஷாபிஈ கைது செய்யப்பட்டு பக்தாதுக்கு அனுப்பப்பட்டார். இது ஹிஜ்ரி 184-ல் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் அவர்களுக்கு ஏற்பட்ட இந்தத் துன்பம் அருளாக அமைந்தது எனக் கூறக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இமாம் பாக்தாதில் இமாம் அபூஹனீபாவின் மாணவர் முஹம்மத் இப்னு ஹஸனைச் சந்தித்தார். ஏற்கனவே ஹிஜாஸ் பிரதேச சட்ட அறிவு இவரிடம் இருந்தது. இப்போது ஈராக்கிய சட்ட அறிவையும் முஹம்மத் இப்னு ஹஸனிடமிருந்து கற்றுக் கண்டார். இந்த வகையில் அறிவுசார் சட்ட அறிவும், பாரம்பரிய சட்ட அறிவும் இமாமிடம் ஒன்றிணைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மீண்டும் மக்கா திரும்பினார். ஹஜ்ஜின்போது பெரும் அறிஞர்களைச் சந்தித்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களில் ஒருவர். இந்த வகையில் பல அறிஞர்களது சிந்தனைப் போக்கையும் இமாம் படித்துத் தேர்ந்தார். அதன் விளைவாக இமாம் அவர்களால் தனியானதொரு சிந்தனைப் போக்கை உருவாக்க முடிந்தது. வித்தியாசமான இருவகை சட்ட சிந்தனைப் போக்கையும் ஆழ்ந்து படித்ததன் பின்னர் மக்காவில் ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் இமாம் ஷாபிஈ தங்கி இருந்தார். அங்கு பலருடனும் கருத்துப் பரிமாறல்களையும், வாதப் பிரதிவாதங்களையும் நடாத்தினார். வித்தியாசமான பல கருத்துக்களையும், வேறுப்பட்ட சிந்தனைப் போக்குகளையும் அவற்றினூடே அவதானித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வாறு இமாம் ஷாபிஈ நன்கு கற்றுத் தேர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்றதன் பின்னர் சட்ட ஆக்கத்திற்கான விதிகளையும், கொள்கைகளையும் வகுக்கத் துவங்கினார். பின்னர் பக்தாதுக்கு இரண்டாம் முறையாக ஹிஜ்ரி 915-ல் வந்தார். அப்போது இமாமிடம் இதுவரை காணாத தனியான சட்ட ஆய்வு முறைமை இருந்தது. பக்தாத் வந்த இமாம் கலீபா மஃமூனின் சபையில் பாரசீக செல்வாக்கு இருந்ததை அவதானித்தார். இது இஸ்லாமிய சிந்தனையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதிகளாக அக்காலத்தில் கணிக்கப்பட்ட முஃதஸிலாக்கள் கலீபாவிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். கலீபாவின் எழுத்தாளர்களாகவும், நெருங்கிய அந்தரங்கமானவர்களாகவும் இவர்களே காணப்பட்டனர். தமது கொள்கைப் போக்குடன் ஒத்து வராத அறிஞர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்களாகவும் இவர்கள் காணப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அவமானப்படத்தக்க நாட்டில் நிலைக்க இமாம் ஷாபிஈ விரும்பவில்லை. தனது நம்பிக்கை குறித்து பல வாதங்களை நடத்திய பிறகே இமாம் இம்முடிவுக்கு வந்தார். இமாம் ஷாபிஈயின் கீழ்வரும் கவிதை இந்த உண்மையை விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;      &lt;span style="font-weight:bold;"&gt;அவமானம் தரும் நாட்டில் மரியாதைக்குரியோர் இருப்பது&lt;br /&gt;      அதனை விட்டு புறப்பட முடியுமானால் &lt;br /&gt;      சாத்தியமற்ற ஒன்றே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்தான் "அல்குர்ஆன் படைக்கப்பட்டதா?" என்ற இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்ற பிரச்சினை தோன்றியது. சட்ட, ஹதீஸ்துறை அறிஞர்களுக்கு இது பெரும் சோதனையாக அமைந்தது. இந்நிலையில் கலீபா மஃமூன் இமாம் ஷாபிஈ அவர்களுக்கு நீதிபதிப் பதவியை அளித்தார். எனினும், இமாம் அதனை ஏற்கவில்லை. இமாமின் சிந்தனைப் போக்குக்கு இதுவே பொருத்தமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையில் பக்தாதில் தங்கியிருப்பதும் இமாம் ஷாபிஈக்குப் பொருத்தமாக இருக்கவில்லை. அங்கிருந்து பயணப்பட வேண்டிய நிலையே உருவாகியது. பயணப்பட்டுப் போய் வாழ வசதியானதும், பொருத்தமானதுமான இடமாக இமாம் எகிப்தைக் கண்டார். அங்கு பயணப்படும் போது கீழ்வருமாறு பாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எனதுள்ளம் எகிப்து செல்ல ஆசை கொள்கிறது&lt;br /&gt;அதற்கு பாலை நிலங்களையும்&lt;br /&gt;பல பூமிகளையும் கடக்க வேண்டும்&lt;br /&gt;அல்லாஹ்வின் மீது சத்தியமாக &lt;br /&gt;வெற்றிக்கும் செல்வத்திற்கும்&lt;br /&gt;நான் அழைக்கப்படுகிறேனா?!&lt;br /&gt;அல்லது மரணக் குழியை நோக்கித்தான்&lt;br /&gt;அழைக்கப்படுகிறேனா?&lt;br /&gt;எனக்குத் தெரியவில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களது மனப்போக்குகளை இமாம் ஷாபிஈ ஆழமாகப் புரிந்திருந்தார். புரிந்து கொள்ளும் நுண்ணிய பார்வைத் திறன் அவருக்கிருந்தது. பயணங்கள் செல்வதில் மிகுந்த விருப்பமுடையவர்களாவும் இமாம் இருந்தார். எனவே, மக்களது கொடுக்கல் வாங்கல்கள், பழக்க வழக்கங்கள் அவர்களது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றியெல்லாம் இமாம் நன்கு அறிந்திருந்தார். கீழ்வரும் இமாமின் கவிதை இக்கருத்தை விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கிழக்காகவும் மேற்காகவும்&lt;br /&gt;நாடுகளெல்லாம் சுற்றித்திரிவேன்&lt;br /&gt;என் தேவையைப் பெறுவேன்.&lt;br /&gt;அல்லது ஊருக்குப் புதியவனாக இறப்பேன் நான் அழிந்தால்&lt;br /&gt;அல்லாஹ்வே அதனைக் காப்பான் தப்பினால்&lt;br /&gt;அண்மையில் நான் மீண்டு வரலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பயணங்கள் ஒரு சட்ட அறிஞனுக்கு நிறைய அறிவைக் கொடுக்கக் கூடியன என்பதோடு பயணம் இயல்பாகவே பல அனுபவங்களையும் தரக் கூடியது.&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;span style="color:#000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2011/08/9.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முந்தைய பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-7846358871476058266?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/7846358871476058266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=7846358871476058266' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/7846358871476058266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/7846358871476058266'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2011/08/10.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -10'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-4953188121935813895</id><published>2011-08-08T16:44:00.000-07:00</published><updated>2011-09-20T22:38:44.991-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -9</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இந்த வகையில் குழப்ப நிலையின் போது புரட்சியாளனின் பக்கமோ ஆட்சியாளனின் பக்கமோ இமாம் மாலிக் நிற்கவில்லை. இருபிரிவிலும் யாருக்கும் உதவ முடியாது என அவர் கருதினார். ஏனெனில், இரு பிரிவினரும் பாவத்தில் வீழ்ந்துள்ளனர் என அவர் கருதினார்.&lt;span class="fullpost"&gt; "கலீபாவுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு எதிராகப் போராடுவது ஆகுமா?" என இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "உமர் பின் அப்துல் அஸீஸ் போன்ற ஒருவருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்களாயின் ஆகும்" என்றார். "உமர் இப்னு அப்துல் அஸீஸைப் போல் ஆட்சியாளன் இல்லாவிட்டால்" என மீண்டும் இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "அப்படியாயின் அல்லாஹ் ஓர் அநியாயக்காரன் மூலம் இன்னோர் அநியாயககாரனை பழிவாங்குகிறான். பின்னர் இருவரையுமே பழிவாங்குவான். விட்டு விடு" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் மாலிக் இலட்சியவாதத் தோற்றங்களோடு மட்டும் நின்றுவிடாது யதார்த்த நிலையையும் அவதானிக்கும் போக்குக் கொண்டவர். இந்த வகையில் இப்போக்கை அவர் கடைபிடித்தார். ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர்கள் செய்ய முயலும் சில தீய செயல்களை அழித்துவிடலாம். அதேவேளை முழுமையாக அவர்கள் சீர்திருந்தி உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஒருவர் அவர்களில் தோன்றவும் கூடும். எனவே, கவர்னர்கள் ஆட்சியாளர்களிடம் இமாம் மாலிக் சென்றார்; அவர்களுக்கு உபதேசித்தார்; வழிகாட்டினார்; நற்செயல்களின் பக்கம் அழைத்தார். அவர் செய்த ஆழ்ந்த உபதேசங்கள் பல இன்றும் காணக் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கலீபா அபூ ஜஃபர் மன்சூர், மஹ்தி, ஹாரூன் ரஷீத் போன்றோர் விடயத்தில் பல சந்தர்ப்பங்களில் இமாம் மாலிக் எடுத்த நிலைப்பாடுகள் மிகுந்த பாராட்டுக்குரியன; மிகுந்த கண்ணியத்திற்குரியன. இமாம் மாலிக் கலீபாக்களைச் சந்திக்கும் போது தம்மை மிகுந்த கண்ணியத்தோடு வைத்து கொள்வார். அது தனது உபதேசத்திற்கு நல்ல பாதிப்பைத் தரும் என்று அவர் கருதினார். ஆட்சியாளர்களைச் சூழ இருப்போர் அவர்களைப் பொய்யாகப் புகழ்வது அவர்களது பிழையான செயல்களையும் சிறந்ததாகக் காட்டும்போக்கு பற்றியே மாலிக் பெரிதும் பயந்தார். ஏனெனில், இந்த நிலையில் எவரின் உபதேசமும் வழிகாட்டலும் அவர்களிடம் பயன்கொடுக்காது போகும் என அவர் உணர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் மாலிக்கின் இத்தகைய சிந்தனைப்போக்கிற்கும் நடத்தைக்கும் அவரது இயல்பான அமைதியான போக்குக் கொண்ட ஆளுமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த வகையில் சமூக ஸ்திர நிலை சிறந்த மாற்றத்திற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்கும் என இவர் கண்டார். இந்நிலையில் மோசமான நிலையிலிருந்து நல்ல நிலைக்கும், நல்ல நிலையிலிருந்து மிகச் சிறந்த நிலைக்கும் படிபடியாகச் செல்ல முடியும் என அவர் கண்டார்.  &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;span style="color:#000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2011/08/8.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முந்தைய பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-4953188121935813895?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/4953188121935813895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=4953188121935813895' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/4953188121935813895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/4953188121935813895'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2011/08/9.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -9'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-8819864493582981391</id><published>2011-08-06T17:15:00.000-07:00</published><updated>2011-09-20T22:39:15.563-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -8</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;02.இமாம் மாலிக்கும் சமூக மாற்றமும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் மாலிக் ஹிஜ்ரி 92 இல் பிறந்து 179 இல் இறந்தார். 90 ஆண்டுகளைக் கொண்ட தனது இந்நீண்ட வளமிகுந்த ஆயுளில் இரு பெரும் அரசுகளைக் கண்டார். இக்காலப் பிரிவில் இஸ்லாமிய ஆட்சி விரிந்து பரந்திருந்தது. அவர் இக்காலப் பிரிவில் நிகழ்ந்த குழப்ப நிலைகளையும் பாரியளவு மனித உயிர்களைப் பலிகொண்ட புரட்சிகளையும்  கண்டார். கவாரிஜ்களும் அலவிகளும் ஆயுதம்  ஏந்திய புரட்சிகளையும் அவதானித்தார்.&lt;span class="fullpost"&gt; இவற்றின் விளைவால் சத்தியம் நிலைநாட்டப் படவோ அசத்தியம் அழிக்கப்படவோ செய்யாது என்பதை உணர்ந்தார். சமூகத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை அவர் அவதானித்தார். தனக்கு முன் வாழ்ந்த தனது ஆசிரியர்களிடம் அப்போது நிகழ்ந்த, அவர்கள் வாழ்ந்து அவதானித்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இமாம் மாலிக் பெற்றார்.                                                                           &lt;br /&gt;                                                                                 &lt;br /&gt;'ஹர்ரா' யுத்தம் என்றழைக்கப்படும் யுத்த நிகழ்ச்சி பற்றியும் அவ்வேளை இறைதூதர் [ஸல்] அவர்களின் புனிதஸ்தலமான மதீனா எவ்வளவு தூரம் மோசமாக சீரழிக்கப்பட்டது என்பதையும் அதனைக் கண்ட தமது ஆசிரியர்களிடம் இமாம் கேட்டறிந்தார். அப்துல்லாஹ் இப்னுஸுபைருக்கும் அப்துல் மலிக் பின் மர்வானுக்கும் இடையிலான யுத்த நிகழ்வையும் இமாம் அறிந்தார். அப்போது அல்லாஹ்வின் புனிதஸ்தலமான கஃபாவும் கூட பாதிக்கப்பட்டதை அறிந்திருந்தார். மன் ஜனீக் என்ற கோபுர வடிவ ஆயுதத் தக்குதலுக்கு அது உட்பட்டது. முழு ஹிஜாஸ் பிரதேசமும் படைத் தரப்பினரின் வெறித்தனமான மிக மோசமான செயற்பாடுகளூக்கு உட்பட்டுச் சீரழிந்தது. உண்மையில் அப்பிரதேசம் மக்கள் அமைதி தேடிச் செல்லும் பூமி, புனித வணக்கக் கிரியைகளின் பூமி. ஆனால் கண்மூடித்தனமான குழப்பநிலைகள் இப்படித்தான் எதனையும் விட்டு வைப்பதில்லை; புனிதமும் புனிதமல்லாததும் அதற்கு ஒன்றுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையதொரு நம்பிக்கையிழந்த சூழலில் வாழ்ந்தவர், மிகச் சரியான ஷுறா அடிப்படையிலான ஆட்சி தோன்றுவதில் நம்பிக்கை இழப்பது இயல்பே. அபூபக்கர், உமர், உஸ்மான் [ரழி]  போன்றோர் கால உன்னத ஆட்சியை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடு இக்காலப் பிரிவில் மிகக் குறைவு என இச்சூழ்நிலையினைக் கருதுவது மிக யதார்த்தமானது என்பதில் சந்தேகமில்லை. எனவே,இருக்கும் நிலையை அங்கீகரிப்பது தவிர வேறு வழியில்லை. இஸ்லாம் வேண்டுகின்ற அந்த ஆட்சிமுறை என்பதலல்ல-யதார்த்தத்தை உணர்ந்து கொண்டதால் வந்த முடிவே இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும் சமுக நிலையை மாற்ற முற்பட்டால் பெரும் தீமைகளுக்கு அது இட்டுச் செல்லும்; பாரிய சீர்கேடுகளைத் தோற்றுவிக்கும்; நல்ல விளைவுகளை எதிர் பார்ப்பது மிகக் கடினம் என்ற யதார்த்த உண்மைகளே இம்முடிவுக்கு வர அவரை நிர்பந்தித்தன. அத்தோடு அதுவரையிலும் நிகழ்ந்த போராட்டங்களும் ஆட்சிக்கெதிரான அனைத்து முயற்சிகளும் இருந்த நிலையை இன்னும் மிக மோசமான நிலைக்கே இட்டுச் சென்றுள்ளன என்ற வகையில் இரு விடயங்களில் ஒன்றைத் தெரிவு செய்ய முற்படும்போது குறைந்த பாதகம் கொண்டதைத் தெரிவு செய்தலே புத்திசாலித்தனமான செயல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். எனவே இமாம் மாலிக் அமைதி நிலையைச் சமாதானத்தைத் தெரிவு செய்தார் என்றால் இருந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டார் என்பது அதன் பொருளன்று. அது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்; மாற்ற முடியாத ஒரு நிலை என்பதே காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் ஆட்சிக்கெதிரான புரட்சி பெரும் குழப்பநிலைக்கும் இரத்தம் சிந்தலுக்கும் இட்டுச் செல்லும் என அனுபவங்களின் அடியாக இமாம் மாலிக் உறுதியாக நம்பினார். எனவே, ஆட்சிக்கெதிரான புரட்சி சரியான நிலைப்பாடு என அவர் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சிக்கெதிரான புரட்சி குழப்பநிலையை உருவாக்கும்; சமூக ஒழுங்குகளில் சீர்குலைவை ஏற்படுத்தும்; மக்கள் நிலைமைகளைக் குழப்பிவிடும்; உயிருக்கும் மானத்திற்கும் செல்வத்திற்கும் அழிவையும் பாதகத்தையும் ஏற்படுத்தும் என இமாம் கண்டார். திட்டமிட்டு பல வருடங்களில் சாதிக்க முடியாத அநியாயத்தைச் சில மணித்தியாலக் குழப்பம் ஏற்படுத்தி விடும் என அவர் கருதினார். இந்த வகையில், இமாம் மாலிக் ஆட்சிக்குக் கட்டுபடாது புரட்சி செய்யும் கருத்தை ஏற்கவில்லை. அப்படியான புரட்சியின் பிரச்சாரகராகவும் இருக்கவில்லை. அத்தகைய புரட்சிக்கு ஒத்துழைக்கவும் இல்லை. அதேவேளை, அவரது காலத்தில் வாழ்ந்த கவர்னர்களுக்கோ கலீபாக்களுக்கோ சார்பான பிரச்சாரகராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ அவர் இருக்கவில்லை. யாருடைய பிரச்சாரகராகவும் நிற்காது நடுநிலையைக் கடைபிடித்தலே சரியான நிலைப்பாடு என அவர் கண்டார். குழப்பநிலைகளை வெறுத்த இமாம் மாலிக்கின் இந்த நிலைப்பாடு, மதீனாவில் அவர்களது காலப்பிரிவில் ஒரு வித்தியாசமான நிலைப்பாடாக இருக்கவில்லை. மதீனாவின் அறிஞர்களும் இதே போக்கையே கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினைக்கு வழிவகுக்காது சமூகத்திலிருந்த ஆட்சிக்கு இமாம் மாலிக் கட்டுப்பட்டார்கள். ஆயினும், தனது காலத்து ஆட்சியாளர்களின் ஆட்சி இஸ்லாத்தின் சட்டதிட்டங்களுக்கும் அல்குர்-ஆனின் வழிகாட்டலுக்கும் முழுமையாக உட்பட்டிருந்தது என அவர் காணவில்லை. ஓரளவான சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கலாம் என்ற வகையிலேயே ஆட்சிக்குக் கட்டுப்படுதலை இமாம் மாலிக் ஏற்றார். குழப்பநிலைகள், பிரச்சினைகள் நீங்கிய அமைதியான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் ஏற்படுத்தும் பாதிப்பு பாரியதாக அமையலாம் என அவர் கருதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நல்லுபதேசத்தினூடாகவும் உரிய இடத்தில் சத்தியத்தைப் பேசுவதனூடாகவும் சீர்திருத்த முயற்சியில் அவர் ஈடுபட்டார். வழிகாட்டும் பொறுப்புகளையும் அவர் ஏற்றார். ஆட்சியாளனைச் சீர்திருத்துவதிலும் கூடிய கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆட்சியாளனின் சீரிய நிலை ஆளப்படுவோரின் சீரான நிலைக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.    &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;span style="color:#000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2011/08/7.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முந்தைய பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-8819864493582981391?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/8819864493582981391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=8819864493582981391' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8819864493582981391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8819864493582981391'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2011/08/8.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -8'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-7535930184137885562</id><published>2011-08-05T08:03:00.000-07:00</published><updated>2011-09-20T22:47:24.815-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -7</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஹுஸைன் இப்னு அலி [ரழி] அவர்கள் யஸிதுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தபோது அதிகமான நபித்தோழர்கள் உயிர் வாழ்ந்தனர். தாபிஈ சட்ட அறிஞர்கள் எல்லோருமே அப்போது உயிர் வாழ்ந்தார்கள். ஆயினும் எந்த ஸஹாபியும் தாபிஈயும் ஹுஸைன் [ரழி] அவர்களின் செயற்பாட்டை ஹராம் என்று சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் ஹுஸைன் [ரழி] அவர்கள் போராடச் செல்வதை தடுத்தார்கள்.&lt;span class="fullpost"&gt; காரணம் 'ஈராக்வாசிகள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல; போராட்டம் பல அபாயங்களைக் கொண்டது. அது வெற்றியடையும் சாத்தியம் மிகக் குறைவு' என்றுதான் தடுத்தார்கள். அநியாயக்காரர்களுக்கு எதிராக, வழிபிறழ்வோருக்கெதிராக போராடல் சட்டரீதியானது. எனினும் போராடும் முன்னர், வெற்றிசாத்தியமானதுதானா? குறித்த இலக்கை அடைந்து கொள்ள முடியுமா? வழிபிறழ்ந்த ஆட்சியை அகற்றியதன் பின்னர் சிறந்த ஆட்சியொன்றை அமைப்பது சாத்தியம்தானா? என்பவற்றை உறுதிப்படுத்தலும் திட்டமிட்டுக் கொள்ளலும் மிக அவசியமாகும். இந்த வகையில் ஸஹாபாக்கள் சிலர் ஹுஸைன் [ரழி] அவர்களோடு கருத்து வேறுபட்டிருப்பின் அது திட்டமிடல், விளைவு சாத்தியப்பாடு என்பன குறித்ததாக அமைந்ததே தவிர போராட்டம் ஆகுமானதா இல்லையா என்பது குறித்தல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ஜாஜின் அத்துமீறிய ஆட்சியின்போது அப்துர் ரஹ்மான் அல் அஸ் அத்தின் தலைமையில் நடந்த புரட்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். இப்புரட்சியின்போது ஸளீத் இப்னு ஸுபைர், ஷஃபி இப்னு அபி லைலா அபுல் புக்திரி போன்ற பல பெரும் சட்ட அறிஞர்களைக் கொண்ட ஓர் இராணுவப் பிரிவு இப்னு அஸ் அதுக்குச் சார்பாக நின்றதாக இப்னு கஸிர் குறிப்பிடுகின்றர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போராட்டத்தில் கலந்து கொள்ளாது ஓதுங்கிக் கொண்ட எந்த அறிஞரும் இப்புரட்சியை ஆகுமானதல்ல எனக் கூறவில்லை. போரில் கலந்து கொண்ட சட்ட நிபுணர்கள் அஸ் அதின் படைமுன் நிகழ்த்திய உரைகள் இது அனுமதிக்கப்பட்டசெயல் என்பதைக் காட்டுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ஜாஜின் காலப்பிரிரிவில் மக்காவில் புரட்சி செய்த இப்னு ஸுபைரின் செயர்பாடும் இதற்கு இன்னொரு உதாரணமாகும். இவ்வாறு ஆரம்பகால அறிஞர்கள் அநியாயக்கார ஆட்சிக்கெதிராக ஆயுதப் புரட்சி செய்தல் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். எனினும் இப்னு அஸ் அதின் புரட்சியின்போது சிறைபிடிக்கப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் பசியலும் தாகத்திலும் விடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இப்னு ஸுபைரின் புரட்சியின் போது 'மன் ஜனீக்' என்ற போர்க் கருவி மூலம் கஃபா தாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இமாம் அபூ ஹனீபா ஆயுதப் போராட்டத்தின்போது இத்தகைய மோசமான விளைவுகள் உருவாகலாம் என எதிர்பார்க்கவில்லை. ஆயினும் இப்புரட்சிகளின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் சக்தியை வீணாக அழிப்பதும் பெருந்தொகையானோர் கொல்லப்படலும் மட்டுமே நிகழ்ந்தது. எனவே மாற்றத்திற்கு வழி ஆயுதப் போராட்டமே என்ற முதலாம் நூற்றாண்டு அறிஞர்கள் கொண்டிருந்த கருத்து மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் நூற்றாண்டில் பிறந்த அபூ ஹனீபாவும் அக்கருத்தையே கொண்டிருந்தார்களெனினும் இமாம் அபூ ஹனீபாவின் சிந்தனைப் பாதிப்புக்குட்பட்ட அபூ யூசூப் போன்ற அவரது மாணவர்கள் அபூ ஹனீபாவின் இக்கருத்துப் போக்கினைக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். புரட்சிகளின் விளைவுகள் தந்த பாடத்தினால் முஸ்லிம் சமூகத்தில் இன்னொரு கருத்து தோன்றலாயிற்று. இக்கருத்தே அஹ்லுஸ் ஸுன்னாவின் பொதுக் கருத்து என அழைக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றமான இக்கருத்து தோன்றுவதற்கு முதலாம் நூற்றாண்டின் சட்ட அறிஞர்களுக்குப் புரியாமல் போன சில திட்டவட்டமான அல் குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களே காரணமாயின என்று ஒரு போதும் கூற முடியாது. ஆட்சி மாற்றத்திற்குப் பிரயோகிக்கப்பட்ட வன்முறை வழிமுறை அடைந்த தொடர் தோல்விகளும் அதன் விளைவாக உருவான பாரிய உயிர் அழிவும் பல்வேறு குழப்ப நிலைகளுமே இவ்விரண்டாம் கருத்து தோன்றக் காரணமாயின. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தவகையில் புதிய மாற்றங்களுக்கும் புரட்சிகளால் நிகழ்ந்த சமூக விளைவுகளுக்கும் ஏற்ப புதியதொரு கருத்தை முன்வைக்கும் வகையில் இமாம் மாலிக் அடுத்து தோன்றுகின்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;span style="color:#000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2011/08/6.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முந்தைய பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-7535930184137885562?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/7535930184137885562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=7535930184137885562' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/7535930184137885562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/7535930184137885562'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2011/08/7.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -7'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-8258072210633844815</id><published>2011-08-05T07:56:00.000-07:00</published><updated>2011-09-20T22:48:04.133-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -6</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இமாம் அபூ ஹனீபா நப்ஸ் ஜகிய்யாவின் சகோதரர் இப்றாஹீமுக்கு பைஅத் செய்யுமாறு தூண்டி வந்தார். அவரோடு போராட இணைந்து கொள்வது ஸுன்னத்தான ஹஜ்ஜுக்குச் செல்வதைவிட உயர்ந்தது என பத்வா வழங்கினார்.&lt;span class="fullpost"&gt; ஹனபி மத்ஹபின் உயர்ந்த சட்ட அறிஞர்களான இமாம் ஜஸ்ஸாஸ், மக்கீ," பத்வா பஜாஜிய்யா" என்ற நூலின் ஆசிரியர் ஆகியோர் இமாம் அபூ ஹனீபாவின் கீழ்வரும் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். "முஸ்லிம் சமூகத்திற்கு வெளியே நிராகரிப்பாளர்களோடு போராடுவதைவிட, முஸ்லிம் சமூகத்தை அதனுள்ளே காணப்படும் நெறிபிறழ்வுகளிலிருந்து விடுதலை செய்யப் போராடுவது சிறந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;ஆபுபக்கர் அல் ஜஸ்ஸாஸ் தமது அஹ்காமுல் குர்ஆன் என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்; அநியாயங்களோடும் அநியாய ஆட்சியாளர்களோடும் போராடுவது குறித்த அவரது கருத்து பிரபல்யமானது. எனவேதான் இமாம் அவ்ஸாஇ 'அபூ ஹனீபாவின் எல்லா விடயங்களையும் நாம் ஏற்றோம்; சகித்துக் கொண்டோம். கடைசியில் அவர் வாள் தூக்குவது பற்றிய கருத்தைக் கொண்டு வந்தார். அந்நிலையில் அவரை எம்மால் எற்க, சகிக்க, முடியாமல் போய்விட்டது' என்கிறார் [அஹ்காமுல் குர் ஆன் வா- 1, பக்.81]&lt;br /&gt;              &lt;br /&gt;நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதை வாயால் செய்வது கடமையாகும். அது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் வாளால் தீமையைத் தடுக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. [அஹ்காமுல் குர் ஆன், வா- 1, பக்.81]. அதாவது உபதேசமும் நற்போதனைகளும் பயன்படாதபோது பரிகாரம் என்ற கருத்தை அபூ ஹனீபா கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இமாம் அபூ ஹனீபா மட்டும் கொண்டிருந்த கருத்தல்ல. இப்னு ஹஜர் பத்ஹுல் பாரியில் குறிப்பது போன்று இது ஆரம்பகால அறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது. ஹிஜ்ரி முதாலம் நூற்றாண்டில் வாழ்ந்த அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்த பேரறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அபூபக்கர் [ரழி] அவர்கள்  கலீபாவாக பை அத் செய்யப்பட்ட பின்னர் நிகழ்த்திய முதலாவது உரையில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்; 'அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நான் வழிப்பட்டு நடக்கும் வரை எனக்குக் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தால் எனக்குக்கட்டுப்பட்டு நடப்பது உங்களுக்கு கடமையன்று' [ஸுரா;இப்னு ஹிஷாம் வா௪, பக்- 211]   &lt;br /&gt;&lt;br /&gt;உமர்[ரழி] அவர்கள்கீழ்வாருமாறு கூறுகின்றார்; 'யார் முஸ்லிம்களின் ஆலோசனையின்றி ஒரு தலைவருக்கு பைஅத் செய்கின்றாரோ அந்த பைஅத் செய்யப்பட்டவருக்கு பைஅத் செல்லுபடியாகாது. அத்தோடு பைஅத் செய்தவர்களின் பைஅத்தும் நிறைவேறாது' (முஸ்னத் அஹ்மத் வா- 1, பக்- 391).&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:13px;"&gt;&lt;span style="color:#000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/5.html"&gt;&lt;span style="color:#336699;"&gt;முந்தைய பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-8258072210633844815?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/8258072210633844815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=8258072210633844815' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8258072210633844815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8258072210633844815'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2011/08/6.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -6'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-5714792133921416566</id><published>2010-10-27T01:05:00.000-07:00</published><updated>2011-09-20T22:54:07.498-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -5</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;எனினும், இமாம் ஸைதின் புரட்சி 123இல் அவர் கொலை செய்யப்பட்டதோடு முடிவுற்றது. அவருக்குப் பின்னர் அவரது மகன் யஹ்யா ஹிஜ்ரி125இல் குராசானில் புரட்சியை ஆரம்பித்து அவரும் தந்தையைப் போல் கொலையுண்டார். பின்னர் அப்துல்லாஹ் இப்னு யஹ்யா தன் பெற்றோர்களின் உரிமையைக் கோரி போராட்டத்தை ஆரம்பித்தார்.&lt;span class="fullpost"&gt; உமையா ஆட்சியின் இறுதிக் கலீபா மர்வான் இப்னு முஹம்மத் அனுப்பிய படைகளோடு இவர் யெமனில் மோதினார். எனினும், ஹிஜிரி 130இல் தனது பெற்றோர் போன்றே இவரும் ஷஹீதானார். அத்தோடு வேதனை மிக்க இந்த வரலாற்றுப் பக்கம் உண்மையாகவே மூடுண்டு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸைத் இப்னு அலி [ரழி] இமாம் அபூ ஹனீபாவின் உள்ளத்தில் பெற்றிருந்த உயர்ந்த அந்தஸ்தை மேலே விளக்கியவற்றிலிருந்து புரிந்து கொள்ளமுடியும். இமாம் ஸைதின் போராட்டத்தை இறைத்தூதர் [ஸல்] அவர்களின் பத்ர் போருடன் ஒப்பிடும் அளவுக்கு இமாம் அபூ ஹனீபா சொன்னார்கள் என ஏற்கனவே கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸைத் இப்னு அலியின் அறிவு, ஒழுக்க, மார்க்க உணர்வு என்பவற்றை இமாம் அவர்கள் உணர்ந்து மதித்தார். ஸைதை தலைமைக்குத் தகுதிமிக்க சத்திய இமாமாகவே அபூ ஹனீபா கருதினார். போரில் பங்குகொள்ளாதவன் என்ற பெயர் தனக்கு வரக்கூடாது என்பதற்காக செல்வத்தின் மூலம் போராட்டத்திற்கு உதவவும் செய்தார். எனினும், அவரும் அவருக்குப் பின்னால் அவரது மகனும் அவருக்குப் பின்னால் அவரது பேரனும் கொல்லப்பட்டமையை இமாம் பார்க்க வேண்டியதாயிற்று. இது அவர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தைக் கொடுத்தது. எனவே நடந்த இவ்வநியாயங்கள் குறித்து அவரது நாவு பேசியது. கோபங்கொண்ட அறிஞர்களது நாவுகள் கொடுவாள் செய்யாதவற்றையும் செய்யும். அரசனின் வாளைவிட நாவின் தாக்குதல் மிகப்பலம் வாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் அபூ ஹனீபாவின் நடத்தை அவர் கொள்கை ரீதியாக இப்பிரச்சினையில் கொண்டிருந்த கருத்துக்கு உடன்பாடாக உள்ளது. இமாம் ஸைத் கூபாவில் இருந்து புரட்சியை ஆரம்பித்தார். கூபா மக்களின் மனோநிலையையும் அவர்கள் அலி [ரழி] அவர்களோடு நடந்து கொண்ட முறையையும் இடைநடுவே ஹுஸைன் [ரழி] அவர்களைக் கைவிட்டமையையும் இமாம் அபூஹனீபா நன்கறிந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் ஸைத் ஆரம்பித்திருந்த இயக்கம் கூபாவில் மட்டுமே பரவியிருந்தது. நன்கு பலம் பெறும் அளவு வேறு பகுதிகளுக்கு அது பரவியிருக்கவில்லை. இயக்கத்தைத் துவங்கி ஆறு மாதங்கள் மட்டுமே சென்றிருந்தது. இக்காலப் பிரிவு பரவலுக்கோ இயக்க முதிர்ச்சிக்கோ போதுமானதல்ல. இக்காரணங்களால்தான் பல அறிஞர்களும் இமாம் ஸைதை எச்சரித்தார்கள். போராட்டத்தை துவங்குவதையும் தடுக்க முயன்றார்கள். இவற்றையெல்லாம் கண்ட இமாம் அபூ ஹனீபா இப்புரட்சியின் வெற்றி குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தபோராட்ட முயற்சியை "நப்ஸ் ஜகிய்யா" என அழைக்கப்பட்ட முஹம்மத் இப்னு அப்துல்லாஹ்வும் அவரது சகோதரர் இப்றாஹீமும் ஆரம்பித்தனர். இவர்கள் ஹுஸைன் [ரழி] அவர்களின் பிள்ளைகளாவர். இப்போராட்டம் ஹிஜ்ரி 145இல் நடைபெற்றது. அப்போது இமாம் அபூ ஹனீபா சமூகத்தில் பெரும் செல்வாக்கும் உயர்ந்த அந்தஸ்தும் பெற்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை இமாம் அபூ ஹனீபாவின் நிலைப்பாடு முன்பை விட முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருந்தது. அபூஹனீபா இம்முறை இந்த இயக்கத்திற்குப் பகிரங்கமாகவே உதவினார். தமது வகுப்புகளில் தாம் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகவே பேசினார். கலீபா மன்சூரின் தளபதிகள் சிலரை நப்ஸ் ஜகிய்யாவோடு போராடச் செல்வதை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இமாமின் செல்வாக்கு சென்றது. அப்போது கலீபா மன்சூர் கூபாவில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இமாம் அபூ ஹனீபாவின் மாணவர்கள் தாம் அனைவருமே கைது செய்யப்பட்டு விடுவோமோ என்று கூடப் பயந்தார்கள்.&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span style="color: #000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/4.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;முந்தைய பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-5714792133921416566?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/5714792133921416566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=5714792133921416566' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/5714792133921416566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/5714792133921416566'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2010/10/5.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -5'/><author><name>நஸீர் அஹமது</name><uri>http://www.blogger.com/profile/13872615019748888619</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-2424778458389380969</id><published>2010-10-19T02:40:00.000-07:00</published><updated>2010-10-19T02:40:27.279-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -4</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இமாம் அபூ ஹனீபாவைப் பொறுத்தவரையில் அவர் இரு ஆட்சிகளைக் கண்டார். உமையா ஆட்சியின் ஆரம்ப பலமிக்க காலப்பிரிவிலும் அது பலவீனமுற்று வீழ்ச்சியடைந்த காலப்பிரிவிலும் அவர் வாழ்ந்தார். அப்பாஸீய அரசை அதன் தோற்ற காலப்பிரிவிலும் சிறு சிறு இராச்சியப் பிரிவுகளாகப்&amp;nbsp; பரவி வருகின்ற போதும் கண்டார். பின்னர் உமையாக்களுடன் போராடி அவர்களிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் மீது அதிகாரம் செலுத்தியும், ஆசையூட்டியும், பயமுறுத்தியும் அவர்களைப் பணியவைக்கும் போதும் கண்டார். இவை அனைத்தையும் கண்ட இமாம் அபூ ஹனீபா அதனால் பாதிப்புறவும் செய்தார். எனினும், உமையாக்களுக்கு எதிரான புரட்சியாளர்களோடு அவரும் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஸைத் இப்னு அலி ஜைனுல் ஆபிதீன் [ரழி], உமையா கலீபா ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்கிற்கு எதிராக ஹிஜ்ரி 121இல் ஆயுதப்புரட்சி ஒன்றை மேற்கொண்டபோது இமாம் அபூ ஹனீபா, "இறை தூதர் [ஸல்] அவர்கள் பத்ர் யுத்தத்திற்குப்ப் புறப்பட்டது போன்றே இவருடைய புறப்பாடும் உள்ளது" என்று கூறியதாக வரலாற்றுப் பதிவு இருக்கின்றது. அப்போது அபு ஹனீபாவிடம், "அவ்வாறாயின் நீங்கள் ஏன் போரில் கலந்து கொள்ளாது பின் தங்குகிறீர்கள்?" என வினவப்பட்டது. இதற்கு இமாம், "என்னிடம் மக்கள் அமானிதமாகத் தந்த பொருட்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறு இப்னு அபீ லைலாவிடம் கேட்டேன். அவர் ஏற்கவில்லை. அந்நிலையில் நான் யுத்தத்தில் இறந்தால் அநியாயம் இழைத்தவனாக மரணிக்க வருமோ எனப் பயப்படுகின்றேன்" என்றார். அத்தோடு இமாம் அபூ ஹனீபா தான் போராட வராமைக்குக் கீழ்வருமாறு நியாயம் கூறியதாகவும் வரலாற்றுப் பதிவு உண்டு:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"மக்கள் அவரது தந்தையை இடைநடுவே கைவிட்டது போல் இவரையும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருப்பின் அவரோடு நான் போராடச் சென்றிருப்பேன். ஏனெனில், அவர் சத்தியத்தின் அடிப்படையில் எழுந்த இமாம். நான் நேரடிப் போரில் கலந்து கொள்ளாவிட்டாலும் செல்வத்தால் அவருக்கு உதவுகிறேன்." இந்தவகையில் பத்தாயிரம் திர்ஹம்களையும் இமாம் அபூ ஹனீபா அனுப்பிவைத்தார். தான் அனுப்பிய நபரைப் பார்த்து இமாம் ஜைனுல் ஆபிதீனிடம் தான் வராமைக்கான நியாயங்களை விளக்கிச் சொல்லுமாறும் கூறினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தவகையில் இமாம் அபூ ஹனீபா உமையா ஆட்சிக்கெதிராக புரட்சி செய்வதை ஷரீஅத் ரீதியாக ஆகுமானது எனக் கண்டார் என்பது தெளிவாகின்றது. அவர் முஜாஹித்களோடு வாள்தூக்கிப் போராடவும் விரும்பியுள்ளார் என்பதும் தெளிவு. எனினும், விளைவு வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜைனுல்ஆபிதீனின் ஆயுதப் போராட்டத்திற்குப் போதுமான ஆதரவும் நல்ல விளைவைத் தரக் கூடிய பலமும், அவரது சிந்தனையை ஏற்றுப் பாதுகாக்கும் உள்ளங்களும் இல்லாவிட்டாலும், அது சத்தியத்தின் செயற்பாடே என்ற கருத்தை இமாம் கொண்டிருந்தார் என்பதும் இங்கு தெளிவாகின்றது. இந்த வகையில் போராட்டத்தின் பலவீனமான இந்நிலையிலும் அதனைத் தடுக்கும் ஒருவராக அவர் இருக்க விரும்பவில்லை. எனவேதான் தமது ஆதரவைக் காட்ட பெரும் தொகைப் பணத்தைக் கொடுத்துதவினார். செல்வம் ஒரு முக்கிய சக்தி என்பதில் சந்தேகமில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span style="color: #000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href ="http://islamiccollections.blogspot.com/2010/10/3.html"&gt;முந்தைய பகுதி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-2424778458389380969?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/2424778458389380969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=2424778458389380969' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/2424778458389380969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/2424778458389380969'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2010/10/4.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -4'/><author><name>இப்னு ஜமால்</name><uri>http://www.blogger.com/profile/17369794833892704219</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-1431980623675121249</id><published>2010-10-18T02:37:00.000-07:00</published><updated>2010-10-18T02:38:57.793-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -3</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;01.இமாம் அபூஹனீபாவும் சமூக மாற்றமும்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிலாபத்தோடு முஸ்லிம்கள் கொண்டிருந்த பற்று ஓர் இலட்சியவாத மாதிரியோடு தொடர்புபட்டிருந்தது. நேர்வழி சென்ற கிலாபத் அமைப்பையே[கிலாபா ராஷிதா] இங்கு குறிப்பிடுகிறோம். குறிப்பாக அவ்வுன்னத கிலாபத்தில் வாழ்ந்தவர்கள் மற்றும் அதனை தம் கண் முன்னே கண்டவர்களைப் பொறுத்தவரையில் இது தெளிவான உண்மையாக இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னால் வந்த அதிகாரப் பற்று நிறைந்த முடியாட்சி முறைகளையோ அல்லது சர்வாதிகாரப் போக்குக் கொண்ட ஆட்சி அமைப்புக்களையோ கண்டபோது இவர்களுக்கு கிலாபத் மீது கொண்ட பற்று அதிகரித்தது. கடும் கசப்புணர்வும் அவர்களைப் பீடித்தது. முன்பிருந்த உன்னத நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்று அவர்கள் மிகுந்த அவாவுற்றனர். இந்த நிலைப்பாட்டிற்குள் தான் தங்கள் அவாவை சாதிக்க ஒன்றன் பின் ஒன்றாக பல இயக்கங்கள் தோன்றின. ஆனால், அவை அனைத்தும் தோல்வி கண்டன. ஏனெனில், அவ்வியக்கங்களை வழிநடத்தியோர் கருதியதைவிட அன்றைய நிலைமை மிக கடுமையாக இருந்தது. சமூக மாற்றங்கள் குறித்த அல்லாஹ்வின் நியதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவையும் காணப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: blue;"&gt;"ஒரு சமூகத்திலுள்ள மனிதர்கள் தம் உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றாத வரையில் அல்லாஹ் அச்சமூகத்தில் உள்ள நிலைகளை மாற்றுவதில்லை" [அர்ரஃத்:11].&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உமையா, அப்பாஸிய காலப் பிரிவின்போது தோன்றிய சில ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை சீராகவும் அருள் நிறைந்ததாகவும் இருந்தது உண்மையே. எனினும், முஸ்லிம்கள் இலகுவாக கிலாபா ராஷிதாவுக்கு மீண்டுவிட முடியும் என நினைத்து விட்டார்கள். இலட்சிய மாதிரியைக் காட்டாத-ஆயினும் ஆழ வேருன்றிப் பதித்துவிட்ட பலமிக்க அந்த ஆட்சிகளை அகற்ற மிகப் பாரிய உழைப்பும் பெரும் தியாகங்களும் தேவைப்படும் என்பதை அவர்கள் உணரவில்லை. பாதுகாப்புக்குப் பெரும் படைப் பிரிவுகளையும் பாரிய செல்வங்களையும் கொண்டியங்கி வரும் அவ்வாட்சிகளை வெற்று ஆசைகளாலும் இலட்சியக் கனவுகளாலும் சிதறுண்ட சில சிறிய முயற்சிகளாலும் அகற்றிவிடல் சாத்தியமானதல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த நிலைகளிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவர பாரியளவு உயிரழிவும் சீர்கேடுகளும் தவிர்க்க முடியாதது என இஸ்லாமிய சட்ட நிபுணர்களும், அறிஞர்களும் கண்டனர். எனவே, அதனைத் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம் என்ற வகையில் வெறுப்புடனும் ஏற்க வேண்டியதாயிற்று. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாரியளவு இரத்தம் சிந்தாமலும் பெரும் குழப்ப நிலைகளுக்கு வழி வகுக்காமலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க பாரிய கூட்டமைப்பு இல்லா நிலையில் புரட்சி செய்வதால் வரும் தீமைகள் நன்மைகளை விட பாரியவையாக இருக்கும் என அந்த சட்ட நிபுணர்களும் அறிஞர்களும் கண்டனர். எனவே, அவர்கள் உள்ளிருந்தே சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட முயன்றனர். இந்த வகையில் அவ்வறிஞர்களில் சிலருக்கு ஆட்சியாளர்களோடு நெருங்கிய தொடர்பிருந்தது. அவர்கள் அத்தொடர்பை ஆட்சியாளர்களுக்கு உபதேசிக்கப் பயன்படுத்தினர். ஏனெனில், அவ்வாட்சியாளர்கள் மூலம் சில அநியாயங்களும் சில வரம்பு மீறல்களும் நிகழ்ந்தபோதிலும் இஸ்லாமிய சட்டங்கள் மூலம் ஆட்சி புரியும் முஸ்லிம்களாகவே அவர்கள் இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, இமாம் ஸுஹ்ரி உமையாக்களுடன் சத்தியத்தில் நெகிழ்ந்து கொடுக்காத வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்தார். எனினும், இமாம் ஸயித் இப்னு அல் முஸய்யப், இப்னு அபீதிஃப் போன்றவர்களது ஆட்சியாளர்களைப் பொருத்தவரையிலான நிலைப்பாடு சத்தியத்தைப் பொறுத்தவரையில் பலமாகவும் மிகுந்த உறுதி கொண்டதாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span style="color: #000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/a&gt; | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/2.html"&gt;&lt;span style="color: #336699;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-1431980623675121249?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/1431980623675121249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=1431980623675121249' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/1431980623675121249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/1431980623675121249'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2010/10/3.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -3'/><author><name>இப்னு ஜமால்</name><uri>http://www.blogger.com/profile/17369794833892704219</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-8052781156350013560</id><published>2010-10-17T09:40:00.000-07:00</published><updated>2010-10-17T09:40:12.110-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -2</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family: TheneeUni;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: TheneeUni;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni;"&gt;மாற்றம் ஒரு மாறாத சமூக விதி என்பர். இயங்கிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு சமூகத்தினதும் உயிர்த் துடிப்பு மாற்றத்தின் போக்குகளிலேயே தங்கியிருக்கிறது. சமூக அரசியல் போக்குகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தனி மனிதனையும் ஆழமாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்புகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைய முடியும். இந்த வகையில் சமூக - அரசியல் மாற்றம் பற்றிய பிரக்ஞை, அறிவு, தெளிவு என்பன அனைவருக்கும் அவசியமாய் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;சமூக அரசியல் மாற்றம் பற்றிய மிகத் தெளிவான கொள்கை ஓன்றின் அடிப்படையிலேயே முன்னோக்கிய சமுக அரசியல் மாற்றத்தை அறுவடை செய்து கொள்ளலாம். இச்சிந்தனையின் அடுத்த கட்ட நகர்வாகவே சமூக அரசியல் செயற்பாடு அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தைச் சரியான திசையில் வழிப்படுத்த இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடியாக உருவான இமாம்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் தொடர்ச்சியில்&amp;nbsp; நவீன காலத்தைப் பொருத்திப் பார்க்கும் ஒரு பெறுமதியான நூலாக இது விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்காக உழைக்கும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும் - அதனைச் செயற்பாடுகளாக மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த அவா எமக்குள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni;"&gt;இரத்தம் சிந்துவதே விதி என்றாகிப் போன இந்தக் காலத்தில், இந்த நூல் அதனைக் குறைப்பதற்குப் பங்களித்தால் எமக்கு ஆறுதலாக இருக்கும். சமூக மாற்றம் அர்த்தம் செறிந்ததாக காலப் பொருத்தமுடையதாக அமைய வேண்டும் என்பதே எமது அடிப்படை எதிர்பார்ப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்கள் அழிவின் முகவர்களாக அல்லாது, ஆக்கத்தின் தூதுவர்களாக இஸ்லாத்தின் செய்தியை முன் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் அயராது உழைப்போமாக. அந்த முயற்சியில் இந்த நூலும் இதன் சிந்தனைகளும் ஒரு சிறு பங்கையேனும் வழங்கினால் அது எமக்கு மிகுந்த திருப்தியைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலை எழுதிய ஷெய்க் நாதிர் நூரி அவர்களுக்கு அல்லாஹ் தனது அருளைப் பொழிவானாக. இதனை மொழி பெயர்க்க அனுமதித்த அவருக்கும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து தந்த அன்புக்குரிய உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் அவர்களுக்கும் மீள்பார்வை ஊடக மையத்தின் பணியாளர்களுக்கும் எமது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதிப்பாசியர்&lt;br /&gt;மீள்பார்வை ஊடக மையம்&lt;br /&gt;08.02.2008&amp;nbsp;&lt;/b&gt;&amp;nbsp;&lt;span style="font-weight: bold;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: TheneeUni;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span style="color: #000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/a&gt;  | &lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/1.html"&gt;முன்னுரை&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-8052781156350013560?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/8052781156350013560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=8052781156350013560' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8052781156350013560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8052781156350013560'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2010/10/2.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -2'/><author><name>நஸீர் அஹமது</name><uri>http://www.blogger.com/profile/13872615019748888619</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-1884051280898571046</id><published>2010-10-16T15:10:00.000-07:00</published><updated>2010-10-16T15:10:49.030-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -1</title><content type='html'>&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family: TheneeUni;"&gt;முன்னுரை&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;அல்லாஹ் இறக்கிய இறுதி இறைத் தூது ஓர் உன்னதமான சமூகத்தை அமைத்தது. தத்துவஞானிகளும், சிந்தனையாளர்களும் கனவு கண்ட அந்த இலட்சிய சமூகம் அறபுப் பாலைவெளியில் தோன்றியது. மிகக் குறுகிய காலத்தில் அது சாம்ராஜ்யமொன்றை அமைத்தது. வெறும் பெளதீக எல்லையை மட்டுமல்ல, வெற்றி கொண்ட பெருந்தொகை மக்களையும் தன் கொள்கையினுள் அது ஈர்த்தது. இப்படித்தான் நாடுகளும் சமூகங்களும் அதனுள் ஈர்க்கப்பட்டன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;14 நூற்றாண்டுகளுக்குப் பின்னே நின்று அந்தச் சமூகத்தைப் பற்றிப் படிக்கும்போதே எமதுள்ளம் அதனால் ஆட்கொள்ளப்பபடுகிறது. மீண்டும் அப்படியொரு சமூகம் தோன்ற என்ன வழி? என ஏங்குகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;இந்நிலையில் மிக ஆரம்ப காலத்திலேயே அந்தச் சமூகம் தன் இலட்சிய நிலையிலிருந்து சற்று சரிந்தது. அதன் ஆட்சி நிலையின் ஒரு சரிவு இது. இலட்சிய சமூகத்தினுள் வாழ்ந்து அனுபவித்த அந்த மனிதர்கள் எப்படி இதனைச் சகித்துக் கொள்வார்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;இந்த மனோநிலையின் பின்னணியில்தான் இறைதூதர் [ஸல்] அவர்களின் செல்வப் பேரன் ஹுஸைன் [ரழி] அவர்கள் மிகச் சொற்ப தொகையினருடன் கர்பலாவில் மோதினார்கள். அந்தப் போரை யுத்த தந்திரோபாயங்கள் என்ற பின்னணியிலிருந்து நோக்குவது பொருத்தமற்றது. கருத்து, மன உணர்வுகளின் பாரத்திலிருந்தே அதை நோக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;சிந்தனைக்காகவும் இலட்சியத்திற்காகவும் போரிடுபவர்கள் யுத்த தந்திரோபாயங்களை விட இலட்சியத்திற்கான தியாகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இது அவர்களின் பலவீனமா அல்லது பலமா என்பது ஒரு புறம் இருக்க, தியாகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பாரியது என்பதில் சந்தேகமில்லை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;இப்படி அந்த இலட்சிய சமுகத்தை நோக்கிய போராட்டங்களும் அதற்கான முயற்சிகளும் தொடர்பான இந்த ஆய்வு, அந்தப் போராட்டங்களையும் முயற்சிகளையும் பற்றிய ஆழ்ந்த விளக்கத்தைத் தருகிறது. குறிப்பாக நான்கு பெரும் இமாம்களின் அது பற்றிய முயற்சிகளையும் போராட்டங்களையும் ஆய்கிறது. பின்னர் நவீன கால சமூக மாற்றப் போராட்டங்களையும் அதனோடு தொடர்பு படுத்தி ஆய்கிறது. குறிப்பாக வன்முறை அடிப்படையிலான போராட்டத்தையும், வன்முறை தவிர்ந்த போராட்டத்தையும் அழுத்தி ஆராய்கிறது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த ஆய்வை வாசிக்கும் போது நாம் நான்கு இமாம்களின் இன்னொரு பக்கத்தைப் புரிந்து கொள்கிறோம். சட்ட அறிஞர்களாக மட்டுமல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்திலும் அவர்கள் அர்த்தம் பொதிந்த ஆழிய சிந்தனைகளை முன்வைத்துள்ளமையையும் புரிகிறோம். இலட்சியவாதப் போக்கில் மட்டுமல்ல யதார்த்தபூர்வமாக அவர்கள் எப்படி இப்பிரச்சினையை அணுகியுள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;இந்நூலை எழுதிய கலாநிதி ஷெய்க் நாதிர் நூரி ஆழ்ந்த இஸ்லாமிய ஆய்வாளர். சமூக மாற்றத் தளத்தில் நிற்கும் ஒரு போராளியும் கூட. எனவே, அறிவும் ஆய்வும் கள அனுபவமும் இங்கே சந்தித்துக் கொள்கின்றன; பின்னணியாக அமைகின்றன. என்னால் முடிந்தளவு முழுமையாக மூல நூலை மொழிபெயர்த்துள்ளேன். கருத்துப்போக்கு சிதையாமல் பார்த்துக் கொண்டுள்ளேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;நூல் எழுதப்பட்டுள்ள ஒழுங்கிலிருந்து பார்க்கும் போது தமிழ் உலகுக்கு இது ஒரு புதிய நூல். சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு நல்லதொரு சிந்தனை அடித்தளமொன்றை இந்த நூல் தரும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;இனி இஸ்லாமிய உலகுக்கு வெளியே சிறுபான்மையாக நிற்கும் நாம் இப்பிரச்சினையை எப்படிப் பார்க்க வேண்டும்? இஸ்லாம் உருவாக்கிய அந்த இலட்சிய சமூகத்தை நோக்கிய எம் கனவுகள் எப்படி அமைய வேண்டும்? யதார்த்தபூர்வமாக அதனை நோக்கி எப்படி நாம் அடியெடுத்து வைக்க வேண்டும்? அதற்கான திட்டங்களும் தந்திரோபாயங்களும் என்ன? இவை பற்றி சிந்திக்க இந்நூல் எம்மைத் தூண்ட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;நூலாசிரியர் மதிப்புக்குரிய அறிஞர் ஷெய்க் நாதிர் நூரி அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. மென்மேலும் இத்தகைய ஆய்வுகளை அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;கீழைத்தேய சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை நன்கறிந்த அறிஞர் ஒருவரின் நூல் இது. அந்த வகையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் அவருக்கு நன்றி செலுத்துகிறது. இந்நூலை மொழிபெயர்க்க அனுமதித்த ஷெய்க் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;நூல் வெளிவர உதவியாக இருந்த சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 11pt;"&gt;இறையருளையாசிக்கும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 11pt;"&gt;எம்.ஏ.எம்.மன்ஸூர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 11pt;"&gt;08.02.2008&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span style="color: #000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span style="color: #000099;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-1884051280898571046?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/1884051280898571046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=1884051280898571046' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/1884051280898571046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/1884051280898571046'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2010/10/1.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -1'/><author><name>இப்னு ஜமால்</name><uri>http://www.blogger.com/profile/17369794833892704219</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-894803122881958315</id><published>2010-10-15T09:57:00.000-07:00</published><updated>2010-10-15T09:57:58.737-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்!</title><content type='html'>&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family: TheneeUni;"&gt;நூலாசிரியர் பற்றி...&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TheneeUni;"&gt;&lt;span class="Apple-style-span" style="text-decoration: underline;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: 13px;"&gt;நாதிர் அப்துல் அஸிஸ் முஹம்மது அல்-நூரீஎன்ற முழுப்பெயர் கொண்ட இவர் 1954-ம் ஆண்டு குவைத் நாட்டில் பிறந்தார்.1977-இல் குவைத் பல்கலைக்கழகத்தில் சமூக நலத் துறையில் கலைமாமணிப் பட்டத்தையும்,இஸ்லாமியக் கற்கைகள் துறையில் முதுமாமணி மற்றும் கலாநிதிப் பட்டங்களையும் பெற்றார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"&gt;இஸ்லாமிய உலகில் பிரபலமான சமூக செயற்பாட்டாளராகவும் புத்திஜீவியாகவும் மதிக்கபடும் இவர், சமூக நல செயற்பாட்டில் மிக நீண்ட அனுபவங்கள் கொண்டவர் என்பது மட்டுமன்றி, பல சமூக செயற்பாட்டு நிறுவனங்களின் பிதாமகனாகவும் உள்ளார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"&gt;கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இவர் ஆற்றிவந்துள்ள பணிகளுள் சில:&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 11.0pt;"&gt;*&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"&gt;குவைத் வணிகக் கல்லூரி மற்றும் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி என்பவற்றில் ஆசிரியர் [1977-1979]&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"&gt;* குவைத் அரசின் வக்ஃபு மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் இஸ்லாமிய சட்டக் கலைக் களஞ்சிய ஆய்வாளர் [1981-1982].&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"&gt;* வக்ஃபு மற்றும் இஸ்லாமிய நலன்புரி அமைப்பின் ஸ்தாபகராக இருந்ததுடன் அதில் பல்வேறு பதவிகளையும் வகித்தமை [1992-1995].&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"&gt;* பலஸ்தீன நலன்புரி அமைப்பின் தலைவர் [1988முதல் இன்றுவரை].&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"&gt;* "லஜ்னது அல் தஃரீஃப் பி அல் இஸ்லாம்" எனும் மாற்று மதத்தவர்களுக்கான இஸ்லாமிய பிரச்சார நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், செயலாளர் நாயகமாகவும், நிர்வாக சபைத்&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;தலைவராகவும் பல்வேறு பதவிகளை இன்று வரை வகித்து வருகின்றமை.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"&gt;* "ஜம் இய்யது அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்-நூரீ அல் கைரிய்யா" என்ற சமூக நலன்புரி அமைப்பின் செயலாளர் நாயகம்[1981முதல் இன்றுவரை].&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 9.0pt;"&gt;* "ஜம் இய்யது அல்-இஸ்லாஹ் அல்-இஜ்திமாஇ' என்ற குவைத்திலுள்ள மிகப் பிரபலமான சமூக சீர்திருத்த நிறுவனத்தின் அங்கத்தவராக இருப்பதுடன்,அதன்&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;'லஜ்னது அல்-தஃவா அல்-இஸ்லாமிய' முதலிய பிரிவுகளை உருவாக்குவதிலும் பங்காற்றியவர்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"&gt;இவை தவிர, ஆசிய முஸ்லிம்களுக்கான அமைப்பு, ஆப்பிரிக்க முஸ்லிம்களுக்கான அமைப்பு, குவைத் பொது நிவாரண அமைப்பு, இஸ்லாமிய முதுசங்களைப் பாதுகாப்பதற்கான நிறுவனம், குவைத் பத்திரிக்கையாளர் சங்கம், பிரான்ஸிலுள்ள ஐரோப்பிய இஸ்லாமிய கலாபீடம், பிரித்தானியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும், நிர்வாகிகளில் ஒருவராகவும் பல பதவிகளை இன்றுவரை இவர் வகித்து வருகிறார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"&gt;வளைகுடாப் பிராந்தியத்திலும் இஸ்லாமிய உலகிலும் சிலமுக்கியமான நலன்புரிச் சங்கங்களை உருவாக்குவதிலும் இவர் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார். உலகிலுள்ள முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் பற்றிய ஆழ்ந்த பரிச்சயமும் இவருக்குண்டு.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span style="font-family: TheneeUni; font-size: 10.0pt;"&gt;இவையனைத்துக்கும் அப்பால் மிகச்சிறந்த இஸ்லாமிய அழைப்பாளராக விளங்கும் இவர், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இஸ்லாமியப் பிரச்சார முயற்சிகளோடு நீண்டகாலத்தொடர்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: TheneeUni; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span style="color: #000099;"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-894803122881958315?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/894803122881958315/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=894803122881958315' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/894803122881958315'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/894803122881958315'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2010/10/blog-post.html' title='சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்!'/><author><name>நஸீர் அஹமது</name><uri>http://www.blogger.com/profile/13872615019748888619</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-3664079373675917666</id><published>2009-03-18T04:19:00.000-07:00</published><updated>2009-03-18T04:39:03.769-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 11.</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html"&gt;பாகம் 3&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html"&gt;பாகம் 4&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html"&gt;பாகம் 5&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html"&gt;பாகம் 6&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/7.html"&gt;பாகம் 7&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/12/8.html"&gt;பாகம் 8&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2008/06/9.html"&gt;பாகம் 9&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2008/09/10.html"&gt;பாகம் 10&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பணமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; அடுத்து ஒரு கேள்வி. நான் கேட்கிறேன் என்பதற்காக யாரும் சொல்ல வேண்டாம். விஞ்ஞானபூர்வமான உண்மையை மக்களுக்குக் காட்டணும்கிறதற்காக கேக்கறேன். எப்படி ஆப்பரேஷன் தியேட்டரில் போய் நிர்வாணமாக சிகிச்சை செய்யறமோ அதுமாதிரி உண்மையை தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். மதம் மாறுவதற்கு இங்கே யாராவது ஒருத்தராவது பணம் வாங்கியிருக்கிறாங்களா?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒவ்வொருவர் சம்மதத்தோடும்....&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;(உமரும் கூட இருப்பவர்களும் ஒட்டு மொத்தமாக இல்லை என்று சொல்கிறார்கள்)&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உமர்:&lt;/span&gt; நாங்க யாரும் பணம் வாங்கவும் இல்லை. கொடுக்கவும் இல்லை. மதம் மாறணும்கிற எண்ணம் வந்த பிறகு நாங்க ஒவ்வொரு வீடா போயி கேட்டோம் - கேட்ட பிறகு ஒட்டு மொத்தமா மதம் மாறணும்கிற முடிவுக்கு வந்து ஒரு பேப்பர்ல எழுதினோம். நாங்க யாருடைய தூண்டுதலும் இல்லாம நாங்களா மனமுவந்து இந்து மதத்திலிருந்தும் இந்து மதத்திலிருக்கிற 'பள்ளர்' என்ற பிரிவிலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறோம் என்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கித் தான் செய்தோம். இந்தப் புரளியெல்லாம் கிளப்பி விட்டது, இங்கே ஆர்.எஸ்.எஸ். ஒரு அய்யன் முளைச்சிருகிறான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆர்.எஸ்.எஸ்.காரர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆசிரியர்:&lt;/span&gt;&lt;/span&gt; அவரு பேரு என்னங்க?&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உமர்: &lt;span style="color:#000000;"&gt;அனந்தராமசேஷன்னு ஒரு அய்யன். அவரு தான் எல்லா புரளியும் கிளப்பி விடுகிறார். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தைப் போட்டு ஒருத்தரோடொருத்தர் சண்டையைக் கூட்டறதே அந்த ஆள்தாங்க. ஊரை அடிச்சு போட்டுருவோம்னு மிரட்டறதும் அந்த ஆள்தாங்க.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;ஆசிரியர்: &lt;span style="color:#000000;"&gt;அவங்க வேலையே அது தானே. பிரிட்டிஷ் காலத்திலருந்து நாம பார்த்துக்கிட்டு தானே வர்றோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;உமர்: &lt;span style="color:#000000;"&gt;அவங்க பாலிசியே 'பிரிட்டிஷ் பாலிசிதானே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,153)"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-3664079373675917666?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/3664079373675917666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=3664079373675917666' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/3664079373675917666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/3664079373675917666'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2009/03/11.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 11.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-8418351236754062189</id><published>2008-09-03T22:26:00.000-07:00</published><updated>2008-09-03T22:36:48.191-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 10.</title><content type='html'>&lt;p style="TEXT-ALIGN: right" align="left"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html"&gt;பாகம் 3&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html"&gt;பாகம் 4&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html"&gt;பாகம் 5&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html"&gt;பாகம் 6&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/7.html"&gt;பாகம் 7&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/12/8.html"&gt;பாகம் 8&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2008/06/9.html"&gt;பாகம் 9&lt;/a&gt; &lt;/p&gt;&lt;strong&gt;இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உமர்:&lt;/span&gt; இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிறிஸ்தவ மதம் மாறினால்....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; எத்தனை வருஷத்திற்கு முன்பு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உமர்:&lt;/span&gt; சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,153)"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-8418351236754062189?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/8418351236754062189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=8418351236754062189' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8418351236754062189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8418351236754062189'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2008/09/10.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 10.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-3774973198768790755</id><published>2008-06-22T05:48:00.000-07:00</published><updated>2008-06-22T06:03:14.543-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 9.</title><content type='html'>&lt;p style="TEXT-ALIGN: right" align="left"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html"&gt;பாகம் 3&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html"&gt;பாகம் 4&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html"&gt;பாகம் 5&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html"&gt;பாகம் 6&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/7.html"&gt;பாகம் 7&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/12/8.html"&gt;பாகம் 8&lt;/a&gt; &lt;/p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உமர்:&lt;/span&gt; அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!&lt;br /&gt;&lt;br /&gt;'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'&lt;br /&gt;&lt;br /&gt;அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; மற்றவங்க யாரும் சந்திக்கலயா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உமர்:&lt;/span&gt; வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; அதுக்கு என்ன சொன்னாரு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உமர்:&lt;/span&gt; அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,153)"&gt;இறைவன் நாடினால் வளரும்....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-3774973198768790755?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/3774973198768790755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=3774973198768790755' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/3774973198768790755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/3774973198768790755'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2008/06/9.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 9.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-8755412622520248863</id><published>2007-12-25T00:26:00.000-08:00</published><updated>2008-06-22T06:05:34.036-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 8.</title><content type='html'>&lt;p style="TEXT-ALIGN: right"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html"&gt;பாகம் 3&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html"&gt;பாகம் 4&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html"&gt;பாகம் 5&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html"&gt;பாகம் 6&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/7.html"&gt;பாகம் 7&lt;/a&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.&lt;?xml:namespace prefix = o /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt; &lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; சராசரி 5 பேரு.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; ஆமாம்!&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;முக்கியமானவரை மறப்பதா?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்: &lt;/span&gt;இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை &lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;–&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt; இது மாதிரி தொந்தரவு இருக்குது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும்&lt;span style="font-size:+0;"&gt; &lt;/span&gt;- நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஏன்னா, அவங்க &lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;சாதி இந்து&lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ன்னு வைச்சுக்கிறாங்களே தவிர &lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அரிஜன்&lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt; என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு &lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அரிஜனை&lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt; இந்துவா ஏத்துகிறதில்ல.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;ஆக முடியாது&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி &lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இந்து&lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;க்களுக்கும் &lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அரிஜனனு&lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;க்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி &lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;‘&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;அரிஜன்&lt;/span&gt;&lt;span style="font-family:'Courier New';"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt; இந்து ஆக முடியும்?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span lang="TA"  style="font-family:Latha;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; &lt;/span&gt;சந்திக்கலிங்க.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:12;"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?&lt;/span&gt; &lt;p&gt;&lt;span style="COLOR: rgb(0,0,153)"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUni;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-8755412622520248863?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/8755412622520248863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=8755412622520248863' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8755412622520248863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8755412622520248863'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/12/8.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 8.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-8277221752100246877</id><published>2007-06-09T01:19:00.000-07:00</published><updated>2008-06-22T06:05:51.102-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 7.</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;span style="TEXT-DECORATION: underline"&gt;&lt;/span&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html"&gt;பாகம் 3&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html"&gt;பாகம் 4&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html"&gt;பாகம் 5&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/6.html"&gt;பாகம் 6&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;இப்போது ஏன் இந்த முடிவு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; &lt;blockquote&gt;நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.&lt;/blockquote&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஏது மரியாதை?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; எங்கே காட்டுறங்க? இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; &lt;blockquote&gt;எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.&lt;/blockquote&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்: &lt;/span&gt;இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்: &lt;/span&gt;நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;துவேஷமே காரணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; &lt;blockquote&gt;மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?&lt;/blockquote&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; &lt;blockquote&gt;துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.&lt;/blockquote&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்:&lt;/span&gt; ஆமா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; &lt;blockquote&gt;இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;span style="COLOR: rgb(0,0,153)"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-8277221752100246877?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/8277221752100246877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=8277221752100246877' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8277221752100246877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8277221752100246877'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/06/7.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 7.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-8437250925099991040</id><published>2007-06-07T01:01:00.000-07:00</published><updated>2008-06-22T06:07:38.790-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 6.</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;span style="TEXT-DECORATION: underline"&gt;&lt;/span&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html"&gt;பாகம் 3&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html"&gt;பாகம் 4&lt;/a&gt; &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/06/5.html"&gt;பாகம் 5&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: center"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(51,102,255); FONT-STYLE: italic"&gt;மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(51,102,255); FONT-STYLE: italic"&gt;(ஒலிநாடா பதிவிலிருந்து தரப்படுகிறது)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்செரீப்: &lt;/span&gt;&lt;blockquote&gt;இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க" என்று சொன்னேன்! &lt;/blockquote&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்: &lt;/span&gt;அதுக்கு மணியன் என்ன சொன்னார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;உமர்செரீப்: &lt;/span&gt;அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(153,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;20 வருடம் முன்பே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்செரீப்:&lt;/span&gt; &lt;blockquote&gt;20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.&lt;br /&gt;இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.&lt;br /&gt;ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?&lt;br /&gt;உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; எந்தக் காலேஜில்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்செரீப்:&lt;/span&gt; ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்செரீப்: &lt;/span&gt;ஆமா கிடைச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;ஆசிரியர்:&lt;/span&gt; உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;உமர்செரீப்:&lt;/span&gt; ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-8437250925099991040?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/8437250925099991040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=8437250925099991040' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8437250925099991040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/8437250925099991040'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/06/6.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 6.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-914990824094887675</id><published>2007-06-06T09:17:00.000-07:00</published><updated>2008-06-22T06:07:53.539-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 5.</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;span style="TEXT-DECORATION: underline"&gt;&lt;/span&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html"&gt;பாகம் 3&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/02/4.html"&gt;பாகம் 4&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(255,0,0)"&gt;பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக 'திரிசூலம்' வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;'விசுவ இந்து பரிஷத்' ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(255,0,0)"&gt;பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் 'பக்தி போதை'யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.&lt;br /&gt;&lt;br /&gt;நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: right"&gt;-&lt;span style="FONT-WEIGHT: bold"&gt; கி. வீரமணி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="TEXT-ALIGN: left"&gt;&lt;span style="COLOR: rgb(51,51,255)"&gt;&lt;br /&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-914990824094887675?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/914990824094887675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=914990824094887675' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/914990824094887675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/914990824094887675'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/06/5.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 5.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-6504117133736020098</id><published>2007-02-03T08:52:00.000-08:00</published><updated>2008-06-22T06:08:08.003-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 4.</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;span style="TEXT-DECORATION: underline"&gt;&lt;/span&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/3.html"&gt;பாகம் 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)&lt;br /&gt;&lt;br /&gt;வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(51,51,255)"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-6504117133736020098?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/6504117133736020098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=6504117133736020098' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/6504117133736020098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/6504117133736020098'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/02/4.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 4.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-2456847515374017341</id><published>2007-01-30T23:27:00.000-08:00</published><updated>2008-06-22T06:08:22.954-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 3.</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;span style="TEXT-DECORATION: underline"&gt;&lt;/span&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/2.html"&gt;பாகம் 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் அ,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(51,51,255)"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-2456847515374017341?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/2456847515374017341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=2456847515374017341' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/2456847515374017341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/2456847515374017341'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/01/3.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 3.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-5545770906974579917</id><published>2007-01-27T02:18:00.000-08:00</published><updated>2008-06-22T06:08:36.699-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 2.</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;, &lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/1.html"&gt;பாகம் 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.&lt;br /&gt;&lt;br /&gt;The incident was communally interpreted by the RSS and VHP as 'an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.' It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite,, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP's socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.&lt;br /&gt;&lt;br /&gt;It is this break that a conservative upper-caste HINDU seemed unable to bear and accept-primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People's Awakening) to "warn" the HINDUS about "the international conspiracy to devour Hinduism". During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue.&lt;br /&gt;&lt;br /&gt;The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for "national integration". The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தமிழாக்கம்:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(51,51,255)"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-5545770906974579917?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/5545770906974579917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=5545770906974579917' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/5545770906974579917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/5545770906974579917'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/01/2.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 2.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-7182481949872242905</id><published>2007-01-09T23:46:00.000-08:00</published><updated>2008-06-22T06:08:49.765-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம் மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனாட்சிபுரம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 1.</title><content type='html'>&lt;strong&gt;முன்னுரை - கி.வீரமணி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html"&gt;முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை நான் அந்தப்பகுதிக்கு கழகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, இந்தச் சமூகப்பிரச்சினையில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று, அங்கே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், மதம் மாறாத அதே சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் - பல வயதுக்காரர்களையும் சந்தித்து, கேள்வி கேட்டு ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து அதையே ஒரு சிறு நூலாக அப்படியே அவர்கள் கூறியதை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாக்காது வெளியிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்திப்பு நிகழ்ந்த நாள் 25-07-1981 ஆகும்!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே மொத்தம் உள்ள 300 குடும்பங்களில் 210 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியுள்ளனர். இவர்கள் 19-02-1981 அன்று மதம் மாறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில்(2002) ஒரியண்டல் லாங்குமென்ஸ் லிமிடெட் புத்தக கம்பெனியினரால் வெளியிடப்பட்டுள்ள "Vishwa Hindu Parishad and Indian Politics" என்ற ஓர் ஆங்கில நூல் - இதன் ஆசிரியர் "மஞ்சேரி காட்ஜு" என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார். இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African Studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி பட்ட ஆய்வினை இந்த தலைப்பில் மேற்கொண்டு செய்தார். அது தான் மேலே காட்டிய நூலாக வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில், "Translation to Mass Activism" தீவிரதன்மை கொண்ட மக்கள் இயக்கமாக(வி.இ.ப) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1,300 almost all of whom were "Untouchables", became a centre of controversy when large-scale conversions to Islam were reported. For the VHP and its associate organizations, the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but "a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan," financed by petrodollars.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(51,51,255)"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-7182481949872242905?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/7182481949872242905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=7182481949872242905' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/7182481949872242905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/7182481949872242905'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/01/1.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 1.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-4106967051956360402</id><published>2007-01-06T08:45:00.000-08:00</published><updated>2008-06-22T06:09:16.042-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><title type='text'>மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?</title><content type='html'>&lt;p dir="ltr" style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic" align="left"&gt;"விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்த்த் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்துமதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் என அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1000 -த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் அன அறிவிக்கப்பட்டது".&lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;19/02/1981 இந்திய வரலாற்றில் பொன்னால் குறிக்கப்பட்ட நாள். தாழ்த்தப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட தலித், அரிஜன மக்களின் வரலாற்றில் ஓர் புதிய திருப்பதையும் எழுச்சியையும் கொடுத்த நாள். காலம்காலமாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த இந்த சமூகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருவதை உறுதிப்படுத்த, தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற குக்கிராமத்தில் வாழ்ந்த ஒரு கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களால் திட்டமிட்டு உருவாக்கிய வரலாற்றின் சிறப்புமிகு நாள்.&lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;ஆம். இந்திய நாட்டின் சொந்தம் குடிகள் என உரிமை கொண்டாடுவதற்கு தகுதியுள்ள ஒரே இனமான தாழ்த்தப்பட்ட, அரிஜன தலித் மக்கள் தங்கள் வாழ்வின் விடுதலை தேடி பலநூறு ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் சூழலில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுமார் 1000 க்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடும்ப சகிதம் சமத்துவம், சகோதரத்துவத்தை வேண்டி தாங்கள் ஒரு இந்து என பெயருக்கு முத்திரைக் குத்தப்பட்டு காலம்காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்ததிலிருந்து விடுதலை தேடி இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நாள் தான் இந்த 19/02/1981.&lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;உலகமே தங்களை உற்று நோக்க வைத்த அந்த மக்கள் திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தனர்? அவர்களின் இந்த திடீர் முடிவுக்கு தூண்டுகோலாக இருந்தது எது? இம்முடிவு திடீரென எடுக்கப்பட்டதா? அல்லது திட்டமிட்டே நிகழ்ந்ததா? பல்வேறு கேள்விகளுடன் இந்தியாவின் அனைத்து பாகங்களிலிருந்தும் அரசியல்வாதிகளிலிருந்து மதத் தலைவர்கள் வரை அனைவரும் மீனாட்சிபுரத்தை நோக்கி படையெடுத்தனர்.&lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;காலம்காலமாக இந்தியாவில் இஸ்லாம் வாளைக் கொண்டு பரப்பப்பட்டது என சங்க்பரிவார இயக்கங்களினால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், இந்தியாவில் எந்த முகலாயர்களின் ஆட்சியோ, முஸ்லிம் நிஜாம்களின் ஆட்சியோ அல்லது இந்திய ஜனநாயக சுதந்திர அரசில் முஸ்லிம்களின் எவ்வித பிடியுமோ இல்லாத சூழலில் திடீரென ஒரு கிராமத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் இஸ்லாத்திற்கு மாறிய இந்த சம்பவம், மததீயை வளர்த்து அந்த வெப்பத்தில் தங்கள் வளர்ச்சியை வார்த்தெடுத்து வரும் சங்க்பரிவார அமைப்புகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது என்றால் அது மிகையல்ல.&lt;/p&gt;&lt;p dir="ltr" align="left"&gt;அதன் பின் அந்த அமைப்புக்களால் முடுக்கி விடப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் துவக்கத்தில் காணப்படும் பத்தியிலுள்ள முதல் வாசகத்தின் ஊற்றுக்கண். உண்மையில் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்ன என்பது வெளிவராத நிலையில், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பெரியவர் கி.வீரமணி அவர்கள் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று மதம்மாறிய தலித் மக்களுடனும் அவ்வூரில் வாழும் ஏனைய மக்களோடும் கலந்துரையாடி வந்தார். அப்பொழுது அவர் எடுத்த ஒலிவடிவில் இருந்த பேட்டியை "உண்மை விளக்கம் பதிப்பகம்" பதிப்பகத்தார் சிறுநூல் வடிவில் அதனை வெளியிட்டனர். &lt;/p&gt;&lt;p dir="ltr" style="COLOR: rgb(0,0,0)" align="left"&gt;வரும் பதிவுகளில் மீனாட்சிபுரம் மக்களோடு பெரியவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடிய அந்த சம்பவத்தை காணலாம்.&lt;/p&gt;&lt;p dir="ltr" style="COLOR: rgb(51,51,255)" align="left"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-4106967051956360402?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/4106967051956360402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=4106967051956360402' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/4106967051956360402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/4106967051956360402'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2007/01/blog-post.html' title='மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-6463153460391559489</id><published>2006-12-27T07:24:00.000-08:00</published><updated>2011-08-25T06:32:23.519-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 4.</title><content type='html'>முஸ்லிகள் – இஸ்லாம்தான் இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க வல்ல மார்க்கம் என்பதை எடுத்துச் சொல்லிடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் "இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்" எத்துணை பொருள் செறிந்த, காலத்திற்கேற்ற முழக்கம் என்பதை உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கர் "மதமாற்றம் தான் தீண்டாமைக்குத் தீர்வு" எனக் குறிப்பிட்டார். அம்பேத்கர் இஸ்லாத்திற்கு வந்திருக்கவேண்டும். அப்போது இருந்தவர்கள் இஸ்லாத்தைச் சரிவர அவரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்றே எனக்குப் படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்: "இல்லை" (நான் குறுக்கிட்டேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;"அம்பேத்கருக்கு அழைப்பே விடுக்கப்பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி ஹைதராபாத் நிஜாம் அவர்கள் அம்பேத்கர் அவர்களுக்கும் அவர்களோடு இஸ்லாத்திற்கு வருபவர்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்திட முன் வருவதாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கல்வி கூடத்தை ஆரம்பிக்க முன் வந்த போது, அதற்கான இடத்தை அவர் பெறுவதில் முஸ்லிம்கள் பெருமளவில் உதவி செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் மக்களை மட்டுமே கொண்ட அந்தக் கல்விக் கூடத்தில் பாடங்கள் பயிற்றுவிக்க உயர்ஜாதி ஆசிரியர்கள் முன்வாராத போது முஸ்லிம்கள் முன் வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல்தான் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்திற்கு முன்னால் நடை்பெற்ற வட்டமேஜை மாநாட்டில் ஜின்னா அத்தனை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், முஸ்லிம்களுக்குக்  கிடைக்கவிருந்த சலுகைகளை விட்டுக்கொடுத்திடவும் தயாராக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அம்பேத்கர் அவர்களும் நன்றி சொல்லியுள்ளார்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று அவரிடம் விளக்கிவிட்டு, "நீங்கள் அடுத்து என்ன செய்வதாகத் திட்டம்?" என்று கேட்டோம். அவர் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிலால் சாஹிப்: அடுத்து என் மக்களை விடுவிக்க என்னால் இயன்ற அளவு எல்லாவற்றையும் செய்திடத் தயாராக இருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திண்ணையில் தூங்குகின்றேனா, உண்கின்றேனா என்பவையெல்லாம் எனக்குப் பொருட்டல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;என் மக்களின் விடுதலைக்குப் பாடுபட்டிட சித்தமாக இருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்: உங்கள் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாற்றைக் கொண்டது. முஸ்லிகளையும் இஸ்லாத்தையும் வெறுக்கக் கற்றுக் கொண்டு, முஸ்லிகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றிட முன் வந்து இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்னால் தமிழகத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவு பாசறைகள் என்று பறைசாற்றப்பட்டவற்றிலிருந்து வந்ததால் அவர் இஸ்லாத்தை ஏற்றுகொண்டது ஒரு புது வரலாற்றையும், அனுபவத்தையும், அணுகுமுறையையும் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் வழி இஸ்லாத்தை அறிந்து அதனை ஏற்றுக்கொண்ட கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள், கம்யூனிசத்திலிருந்து வந்தார். அஃது ஒரு புதிய வரலாற்றையும் அனுபவத்தையும் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஹிந்துத்வாவிலிருந்து வந்திருப்பது பிறிதோர் புது அனுபவத்தைத் தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வாழ்க்கையை எழுதி மக்களுக்குச் சொன்னாலே அஃதோர் விடுதலை வேட்கையை ஏற்படுத்துமே?&lt;br /&gt;&lt;br /&gt;பிலால் சாஹிப்: ஆமாம். ஆனால் என்னால் அமர்ந்து எழுதுவது இயலாது. நான் களத்தில் உழைத்துப் பழக்கப்பட்டவன். நீங்கள் யாரையாவது அமர்த்தினால் நான் சொல்கின்றேன். அவர் எழுதித் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பணிக்காக தேஜஸ் மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரை நியமித்து விட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை முதலில் அழைத்துப்போய் பிலால் அவர்களின் வீட்டைக் காட்டிய இரண்டு சகோதரர்களும் பிலால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே இருந்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்தோம் பின்னால்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிகள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் நாம் இஸ்லாத்தை அவர்களிடமிருந்து மறைத்து விட்டதாகவே கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களாக இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளும்போது நம்மீது வேகப்படுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக நாம்தான் உண்மையான தேசியவாதிகள் என  வாதிடும் போது, நாம் தான் மதச் சார்பின்மையின் திரு உருவங்கள் எனக் காட்டிக் கொள்ளும் போதும், எங்களுக்கும் உங்கள் அரசாங்கத்தில் ஏதேனும் கொடுங்கள் என யாசிக்கும்போதும் அவர்களுக்கு இஸ்லாம் தெரியாமலேயே போய்விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கெல்லாம் மேலாக நாம் இஸ்லாத்தின் போதனைகளின்படி வாழ்ந்து காட்டுபவர்களாக இருந்திட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்திற்கு வருவது என்பது ஒளியை நோக்கி வருவதாகும். அப்படியானால் முஸ்லிம்கள் ஒளிக்கு - வெளிச்சத்திற்கு சொந்தக்காரர்கள் என்று பெயர் பெற்றவர்கள். நாம் இருட்டிலிருப்பவர்களிடம் யாசகம் கேட்டால் நாமும் ஒளியை  மறைத்தக் குற்றத்திற்கு ஆளாவோம்....!&lt;br /&gt;&lt;br /&gt;அல்ஹம்துலில்லாஹ்!(அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்)&lt;br /&gt;&lt;br /&gt;                              நிறைவு பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-6463153460391559489?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/6463153460391559489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=6463153460391559489' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/6463153460391559489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/6463153460391559489'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-3_9511.html' title='RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 4.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-4033456071865632910</id><published>2006-12-27T06:26:00.000-08:00</published><updated>2011-08-25T06:33:14.355-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 3.</title><content type='html'>அமுக்கப்பட்ட மக்களின் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல் நாசர் மஹ்தனியிடமும், அவருடைய இயக்கத்திலும் எதிரொலிக்கக் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நான் நாசர் மஹ்தனியின் கூட்டங்களைத் தொடர்ந்து கவனிக்கலானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய உத்வேகம் முஸ்லிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இப்படிப் பலரும் அங்கம் வகிக்கும் ஓர் பெரும் இயக்கமாக பி.டி.பி. வளர்ந்து வருவதைக் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னையும் அந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு பணியாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் இயல்பான, எதார்த்தமான ஈடுபாடு எல்லோரையும் கவர்ந்தது. பி.டி.பி.யிலும், நான் மெல்ல மெல்ல உயர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.டி.பி.யின் தொண்டர்கள் என்னிடம் பாரபட்சமின்றி காட்டிய பாசம் என்னுள் உண்மையான அன்பைப் பிரவாகம் எடுத்து ஓடச்செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.டி.பி.யிலுன், நான் கொட்டிய உழைப்பால் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவனானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நான் முஸ்லிகளோடு நித்திய வாழ்க்கை தொடங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது நான் ஆரம்பத்தில் எந்த முஸ்லிகளை வெறுப்பதற்குக் கற்றுத் தரப்பட்டேனோ அந்த முஸ்லிகளை நான் இப்போது நேரில்&lt;br /&gt;சந்திக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த முஸ்லிம்களை இங்கே இந்த நாட்டில் வாழவிட்டிருப்பது தன்மானக் குற்றம் என எண்ணினேனோ அந்த முஸ்லிகளோடு நான் வாழத் தொடங்கி இருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு வினாவைத் தொடுக்கின்றார்)&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் வாழ்க்கையைப் பற்றி மேற்கொண்டு சொல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி:&lt;br /&gt;&lt;br /&gt;நாசர் மஹ்தனியைப் பற்றி உங்கள் கருத்தென்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;நாசர் மஹ்தனி ஏனைய முஸ்லிம் அரசியல் இயக்கங்களை போல் ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர். விஷேஷமாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. மேற் கொண்டு சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாசர் மஹ்தனி எனக்கு இஸ்லாத்தைப் பற்றியத் தெளிவுகளைத் தந்தவர். அதனால் நான் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கின்றேன்.&lt;br /&gt;P.D.P.யின் தலைவர் நாசர் மஹ்தனியின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் முஹம்மத் பிலால் தன்னுடைய நன்றிப்&lt;br /&gt;பெருக்கைக் காட்டுகின்றார். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு அதாவது நேர்வழி பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் நாசர் மஹ்தனி என்பதால் அவர் அவரை நன்றியோடும், கண்ணியத்தோடும் பார்க்கின்றார். நான் இதை அவரிடம் கேட்டும் விட்டேன். அவர் அதை ஒப்புக் கொண்டார். தனக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாசர் மஹ்தனி தனக்கும், தனது சமுகத்திற்கும் நேர்வழி காட்டியிருக்கின்றார் என்பதுதான் அவரது நன்றிப் பெருக்கிற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;[மீண்டும் தொடர்ந்தார்]&lt;br /&gt;&lt;br /&gt;நான் பி.டி.பி.யில் சேர்ந்தபோது முஸ்லிம்களோடு வாழ ஆரம்பித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது நான் முஸ்லிம்களை ஊன்றிக் கவனித்தேன். அவர்களோடு வாழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.டி.பி யின் பணிகளுக்காக நான் வெளியூர் சென்றபோதெல்லாம் பி.டி.பி யின் பிரதிநிதிகள் என்னை வரவேற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் அதிலும் பஞ்சையர்கள் - அன்றாடம் காய்ச்சிகள் யாதார்த்தமாக என்னை வரவேற்றார்கள். அவர்கள் உழைத்து ஈட்டிய பொருளில் எனக்குத் திண்பண்டங்கள் வாங்கித் தருவார்கள். இவர்கள் காட்டிய யதார்த்தம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது வரை நான் எங்கேயும் சந்திக்காக ஒரு எதார்த்தத்தை இந்தத் தொண்டர்களிடம் சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் நாசர் மஹ்தனி கண்ணியப்படுத்தப்படும் போதும், அவர் கற்றவர்களாலும், செல்வந்தவர்களாலும் விருந்து வைத்து உபசரிக்கப்படும் போதும் நான் விலகி நிற்க வேண்டியதில்லை. நான் அவர்களோடு இயைந்து இணைந்து நிற்க முடிந்தது; உண்ண முடிந்தது; உறங்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் முஸ்லிம்களால் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் பிலால் (அல்லாஹ்வின் ஆசியும் அருளும் அவர்கள் மீது உண்டாக்கட்டும்) அவர்களின் வரலாற்றைக் கற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மது(ஸல்)அவர்கள் பிலால்(ரலி)அவர்களை வைத்திருந்த விதமும், அவர்கள்பால் கொண்டிருந்த அன்பும் என்னை மிகவும் நெகிழச் செய்தது. இன்றளவும் பிலால் (ரலி) அவர்கள் பால் முஸ்லிம்கள் காட்டும் நேசத்திற்கும், பாசத்திற்கும் அளவேயில்லை. இது என்னுள் பல நிரந்தர மாற்றங்களைக் கொண்டுவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையில் காட்டும் சமாதானம் அல்லாஹ்வின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை என்னுள் ஆழப்பதிய வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை ஏற்பது என முடிவு செய்தேன். சில நூல்களைக் கற்றேன். மனதால் மாறினேன். இறைவனின் அடியானாக, இது நடந்தது இரண்டு மாதங்களுக்கு முன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முஹம்மது பிலால் ஆனேன். என் மனைவி ஃபாத்திமா ஆனாள். என் முதல் குழந்தை ஷாகிதா ஆனாள். இரண்டாவது குழந்தை தஸ்லீம் ஆனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நான் குழிவேலிப் புலியில் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது. இந்த பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஒரு முஸ்லிம் இருக்கின்றார். அவருடைய வசதியையும், வளத்தையும் வைத்துப் பார்க்கும் போது நான் எந்த விதத்திலேயும் அவருக்கு ஈடாக மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பள்ளியில் தொழப்போகும்போது நான் முன்னே சென்றால் நான் முன் வரிசையில் தொழுவேன். அவர் எனக்குப் பின்னால் நின்று தொழுவார். அவர் அல்லாஹ்வை ஸஜ்தா செய்திடும் போது என் கால் அவர் தலையைத் தொடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அல்லாஹ்வைத் தொழுவதில் அணிவகுத்து நிற்பதில் பின்னே நிற்பவன், முன்னே நிற்பவன் என்ற எண்ணங்கள் யாரிடமுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக அந்தத் தனவந்தர் என்னைப் பார்த்திடும் போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். கட்டித் தழுவுகின்றார். உடன் பிறந்த ஓர் சகோதரனாகவே என்னை நடத்துகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னுள் நிரந்தர களிப்பை ஏற்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-3_9511.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 26(பேட்டி-4)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-4033456071865632910?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/4033456071865632910/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=4033456071865632910' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/4033456071865632910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/4033456071865632910'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-3_27.html' title='RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 3.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116721067129836466</id><published>2006-12-27T00:37:00.000-08:00</published><updated>2011-08-25T06:32:56.974-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 2.</title><content type='html'>அங்கும் பம்பரமாய் பணியாற்றினேன். இங்கெல்லாம் நான் ஹிந்து மதத்தின் வணக்கங்களில் ஆழ்ந்த பக்தியுடன் ஈடுபட்டிருந்தேன். பணம் வேண்டும் என்றால் அங்கே ஒரு கடவுளை நோக்கி ஓட வேண்டியதிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் சமுதாயம் லோன் என்று கடன்பட்டே வாழ்ந்து பழகிப்போன சமுதாயம். ஆனால் பணத்திற்காக இருக்கும் கடவுளின் பற்று இவர்களின் மேல் இன்றளவும் விழுந்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கடவுளைச் சந்தித்துக் கடன் கேட்கவே என் மக்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. அதேபோல் கல்விக்காக ஒரு கடவுளை வைத்திருகின்றார்கள். இந்தக் கடவுளையும் என் மக்கள் இன்றும் சந்திக்க உரிமை பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கும் கடனில் வரும் தொல்லைகளுக்கும் அதுபோல் வரும் இதரதொல்லைகளுக்கும் ஒரு கடவுளை நியமித்திருக்கின்றார்கள். என் மக்களுக்கு என்று வரும்போது இந்தக் கடவுளும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பிரச்சனைக்கொரு கடவுள் என வைத்துக் கொண்டு அலைவது சதாசர்வகாலமும் என்னை அழுத்தி வந்திருக்கின்றது.&lt;br /&gt;எனினும் நான் எல்லாம் சரியாகிவிடும் எதிர்வரும் நாட்களில் என்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எதுவும் உண்மையாகவில்லை. என் மக்களுக்கு விடுதலை என்பது ஹிந்துத்துவாவில் இல்லை என்பதை உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதிப்பிரச்னைக்கு ஹிந்துத்துவாவில் தீர்வு இல்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் நான் ஒருமுறை ஐய்யப்பன் கோயிலுக்குப் போக மாலை போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஐய்யப்பன் பால் கொண்ட பக்தியால் என்னை ஐய்யப்பன் என்றே எல்லோரும் அழைப்பார்கள். நான் அங்கிருக்கும் போது முதலமைச்சர் அந்தஸ்தில் கருணாகரன் அங்கே வந்தார். நான் அது போது பி.ஜே.பி.யின் முக்கியஸ்தர்களில் ஒருவன் எனக்கருதப்பட்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நான் ஆர்.எஸ்.எஸ்., பி.எம்.எஸ். மற்றும் பி.ஜே.பி. ஆகியவற்றிற்குத் தாரை வார்த்துத் தந்த உழைப்பால் ஏற்பட்ட ஏற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை அமைச்சர் அங்கே வந்தார் என்பதற்காகப் பாமரர்கள் அங்கே புறக்கணிக்கப்பட்டார்கள்; புறந்தள்ளப்பட்டார்கள்;&lt;br /&gt;எனக்கு எதுவுமே புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஆண்டவனின் சந்நிதானத்தில் இவ்வளவு பெரிய அநியாயம்?&lt;br /&gt;கடவிளின் முன்னால் கூட இங்கே சமத்துவமில்லையே என நான் அங்கலாய்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டவனின் சந்நிதானத்தில் மனிதர்களில் மேலானவர்கள் - மேல் ஜாதிக்கார்கள் வந்தால் சிறப்புப் பூஜை; தங்கத் தட்டில், வெள்ளித் தாம்பாளத்தில் ஆரத்திகள்;&lt;br /&gt;&lt;br /&gt;என்னவர்கள் என்ன கண்டார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் பி.ஜே.பி.யில் வேட்பாளனாகக் கூட நின்றேன். கண்ணியம் என்பது எப்படி வரும் என் மக்களுக்கு? சலிப்புற்ற நான் பி.ஜே.பி.யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பெயர் அம்பேத்கர் யுவசரணி. இந்த அமைப்பை பி.ஜே.பி.யால் சகித்துக்கொள்ள இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கரின் பெயரால் வரும் எதையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதாக இல்லை என்றே எனக்குப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்புகள் வலுத்தது பி.ஜே.பி.யிலிருந்து நான் வெளியேறினேன். இது நடந்தது 1991 -ல்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் இரண்டாண்டு காலம் நான் அம்பேத்கர் யுவசரணிக்காக என் மக்களின் ஈடேற்றத்திற்காகப் பணியாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநியாயங்களை ஆழ்ந்து கவணித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பிறக்கும் முன் தாயின் கருவிலேயே அடிமையாய் கிடக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமையாய் வாழ்கின்றான்………..&lt;br /&gt;அடிமையாய் மரிக்கின்றான்…………&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வாழும் சமயத்தில் அடிமையாய் அழிகின்றான்……&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு மதுவும், போதையுமே வாழ்க்கையாக அமைத்துத் தரப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் இறந்த பின்னரும் அவனது புதை குழியில் சாராயத்தை தெளிக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பெண்களை காலா காலத்திற்கும் அடிமைகளாகத் தங்கள் பாத்திரப் பண்டங்களைவிட கேவலமாக நடத்துகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(தனது பெண்களைப் பற்றி பேசிடும் போது உணர்ச்சி வசத்தால் பல சொற்களைச் சொல்கின்றார். அவற்றை இங்கே விட்டு விடுகின்றோம். தன் மக்களின் விடுதலையைப் பற்றிப் பேசிடும்போது நமது முஹம்மது பிலால் உருக்கமாகவும், உணர்ச்சி வயப்பட்டும் பேசுகின்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையில் அவர் காட்டும் ஆர்வம் அலாதியானது)&lt;br /&gt;&lt;br /&gt;என் சமுதாய இழிவுகளைப் பற்றியும், அதன் விடுதலையைப் பற்றியும் நான் சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் நாசர் மஹ்தனி எனக்கு அறிமுகமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-3_27.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 25(பேட்டி-3)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116721067129836466?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116721067129836466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116721067129836466' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116721067129836466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116721067129836466'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-2.html' title='RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 2.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116720752760314986</id><published>2006-12-27T00:18:00.000-08:00</published><updated>2011-08-25T06:30:21.421-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 1.</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைச் சந்திக்க வேண்டும், வருகின்றோம் என்றோம் காலை 10 மணிக்கு. பகல் 12 மணிக்கு நேரம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் சிலர் அவரைச் சந்திக்க வந்து கொண்டேயிருந்தார்கள். அதனால் தான் அவரால் கேட்டவுடன் நேரம் தந்திட இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்றோம் நானும் தேஜஸ் என்ற மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரும். நாங்கள் அவரது வீட்டைத் தேடிக் கொண்டிருந்த போது….,&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பின்னால் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் வந்தார்கள். எங்களைப் புரிந்து கொண்டவர்கள் போல் கேட்டார்கள்: "பிலால் சாஹிப் அவர்களைப் பார்க்கவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்" என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைத்துச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடராக இருந்த மூன்று சிறிய வீடுகளில் ஒன்றில் அவர் தன் இஸ்லாமிய வாழ்கையைத் தொடங்கியிருந்தார். அந்தச் சிறு வீட்டில் ஒரு சிறு பகுதி வரவேற்பறையாகச் செயல்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சின்னப் பகுதிக்கு "தாருஸ்ஸலாம"் எனப் பெயர் வைத்திருந்தார். பெயர் வைத்துக் கொள்ளத்தக்க அளவில் உள்ள வீடில்லை அது. ஆனாலும் இஸ்லாம் தனக்குத் தந்த மன அமைதியைப் பிரதிபலிக்க, "அமைதியின் வீடு" எனப் பெயர் வைத்திருந்தார். ஆமாம்.. பல ஆண்டுகள் அலைக்கழிந்த கடினமான வாழ்க்கைக்குப் பின் இஸ்லாம் தந்த அமைதி;&lt;br /&gt;&lt;br /&gt;"பிலால் சாஹிப்", எங்களுக்கு வழி சொன்னவர்கள் குரல் கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமான உயரம் கொண்ட சங்கையான தாடியுடன் சடுதியாக வந்தார் பிலால் சாஹிப். உடனே கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு ஒரு பரம்பரை முஸ்லிமை விஞ்சும் தோற்றமும், பார்வையும்; எங்களுக்கு வழிகாட்டிய சகோதரர்கள் புடை சூழ எங்களை அழைத்துக் கொண்டு போய் அந்தச் சின்னக் குடிலின் வரவேற்பு அறையில் அமரச்செய்தார். அமர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேஜஸ் ஆசிரியரை எளிதாகப் புரிந்து கொண்டார். நான் ஒரு வழியாக அறிமுகமாகி முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பிலால் சாஹிப்:&lt;/span&gt; உங்கள் ஊர்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நான்:&lt;/span&gt; நாகர்கோவில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பிலால் சாஹிப்:&lt;/span&gt; நாகர்கோவிலில் எந்தப் பக்கம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நான்:&lt;/span&gt; நான் சென்னையிலிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பிலால் சாஹிப்:&lt;/span&gt; நான் நாகர்கோவில், காயல்பட்டினம் ஆகிய இடங்களுக்கு வந்திருக்கின்றேன். மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்தேன். காயல்பட்டினம் நிகழ்ச்சியில் பி.டி.பி.யின் தலைவர் அப்துல் நாசர் மஹ்தனியால் கலந்து கொள்ள இயலவில்லை. நான் தான் தலைமைதாங்கி தலைமை உரையாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நான்:&lt;/span&gt; மிக்க மகழ்ச்சி… நீங்கள் இஸ்லாத்தை ஏற்றக்கொண்ட வரலாற்றைச் சொல்லிட இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பிலால் சாஹிப்:&lt;/span&gt; நான் ஹிந்துத்துவா அமைப்புகளில் மிகவும் தீவிரமாகப் பணியாற்றியவன். அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தந்த பாடங்களின் வழி முஸ்லிம்களை வெறுக்கக் கற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வெறுப்பு என்பது சாதாரணமாக இந்து தீவிர அமைப்புகளில் இருப்பவர்கள் கொள்ளும் வெறுப்பல்ல. நான் கொண்ட வெறுப்பு மிகவும் கடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களைக் கண்டால் நான் அளவுக்கு மீறி வெறுப்பைக் கொட்டுவேன். நீங்கள் ஆட்சேபிக்கவில்லையென்றால் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நான்:&lt;/span&gt; கொஞ்சமும் குறைக்காமல் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பிலால் சாஹிப்:&lt;/span&gt; எனக்கு சொல்லித் தந்த பாடங்களின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் வாழ்ந்திட எந்த உரிமையும் இல்லை என்றே நான் நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை இங்கே வாழவிட்டவர்கள் மிகப் பெரிய தவறையே செய்து விட்டார்கள் என்று கருதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து தந்த பயிற்சிகளால் என்னைப் போன்றவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் வெறுப்பு மட்டும்தான் கொண்டோம் என்றில்லை; கோபமும், ஆத்திரமும் கொண்டோம்; முஸ்லிகளைத் தாவி, அழித்திடும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹிந்து தீவிர இயக்கங்களில் நான் என்னை இணைத்துக் கொண்டிருந்த காலங்களில், தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலம் ஹிந்துத்துவாவில்தான் இருக்கின்றது என நம்பினேன்; அதற்காகக் கடுமையாக உழைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தாழ்த்தப்பட்ட குடுபத்தில் பிறந்தேன் என்பதோடு மட்டுமில்லாமல் நான் என் உழைப்பை நம்பியே வாழ்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் என்னுடைய உழைப்பையும், அந்த உழைப்பில் உதிரம் சிந்திக் கிடைக்கும் சிறுகூலியையும் நான் ஹிந்துத் தீவிரவாத அமைப்புகளிலிருந்த போது அவற்றிற்காகச் செலவிட்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நான் வீறுகொண்டு உழைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று நான் முஸ்லிம்கள் மேல் கொண்ட வெறுப்பு,கோபம்.&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்.ஸில் நான் காட்டிய ஈடுபாட்டால் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலப் பொறுப்பாளர், பிரதேச பொறுப்பாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் ஹிந்துத்வாவின் தொழிலாளர் அணியிலும் நான் பொறுப்பேற்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-2.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 24(பேட்டி-2)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116720752760314986?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116720752760314986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116720752760314986' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116720752760314986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116720752760314986'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-1_116720752760314986.html' title='RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 1.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116715263836606882</id><published>2006-12-26T08:59:00.000-08:00</published><updated>2011-08-25T06:29:38.798-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - பதிப்புரை.</title><content type='html'>தீவிர ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக இருந்த வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை புத்தகவடிவில் "இலக்கியச் சோலை" வெளியீட்டகத்தார் வெளியிட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் ஓர் சிறு நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. வேலாயுதன் என்ற பிலால் அவர்களை மு. குலாம் முஹம்மது அவர்கள் நேரடியாக கேரளம் சென்று சந்தித்து அந்த நேர்காணலையும் இந்த புத்தகத்தில் சிறு இணைப்பாக இடம் பெற செய்துள்ளார். இனி இப்புத்தகத்தின் பதிப்புரையாக மு. குலாம் முஹம்மது அவர்களின் ஒரு சில வரிகளும் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணலும்.&lt;br /&gt;&lt;br /&gt;            &lt;span style="font-weight: bold;"&gt;பதிப்புரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1996 ன் இறுதியில் வேலாயுதன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட&lt;br /&gt;செய்தியை அறிந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு நண்பர் E .M. அப்துற் றஹ்மான் அவர்களிடம் பிலால் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றேன். அவரும் இசைவு தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிலால் அவர்களைப் பேட்டி கண்டேன். விடியல் (விடியல்வெள்ளி மாத இதழ்)ஜனவரி 1997 -ல் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்தேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எனத் தலைப்பிட்டிருந்தேன். என்னுடைய சந்திப்பின் போது இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று நான் கேட்ட போது, என்னுடைய மக்களின் (தலித் பெருங்குடி மக்களின்) விடுதலைக்காகப் போராடப் போகிறேன் என பதில் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து மக்களிடையே புழங்கவிடுங்கள். அதைப் படித்து பலரும் பயன் பெறுவார்கள் என்றேன். அந்தப் பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2003 -ல் நான் கேரளா சென்றிருந்த போது பிலால் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேளிவிப்பட்டேன். நண்பர் E.M. அப்துற் றஹ்மான் அவர்களே ஒரு பிரதியைப் பெற்றுதந்தார்கள். அதையே தமிழில் தந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் மொழி பெயர்க்கும் பணியை விரைந்து செய்து முடித்தவர் தம்பி முஷம்மில். அவருடைய முதல் முயற்சி இது. இது போல் ஆக்கப்பூர்வமான பணிகள் பலவற்றை அவர் செய்ய இறைவனிடம்  இறைஞ்சுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல் இலக்கியச் சோலையின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் தொடர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;யா அல்லாஹ்; உன்னுடைய பாதையில் எடுத்து வைக்கும் இந்த முயற்சியை ஏற்றுக்கொள்வாயாக;&lt;br /&gt;&lt;br /&gt;நிறைகள் எல்லாம் நிறைந்த அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் எங்களைச் சாரும்;&lt;br /&gt;               &lt;br /&gt;                                         வஸ்ஸலாம்&lt;br /&gt;                      மு. குலாம் முஹம்மது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-1_116720752760314986.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 23(பேட்டி-1)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் அடுத்த பதிவில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணல்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116715263836606882?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116715263836606882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116715263836606882' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116715263836606882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116715263836606882'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - பதிப்புரை.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116712568113984451</id><published>2006-12-26T01:34:00.000-08:00</published><updated>2011-08-25T06:28:28.616-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 21.</title><content type='html'>இந்து மதம் காப்போம்; இந்து மதம் காப்போம்; என்று சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடி வருகிறார்களே? இவர்கள் எப்போது இந்து நடை முறைப்படி வாழ்ந்தார்கள்? டாக்டர் அம்பேத்கார், ஸ்ரீநாராயணன் குரு, அய்யங்காளி, ஐயப்பன், எம்.எல்.சி., வள்ளுவர் இவர்களது வாழ்க்கை முறையெல்லாம் (இவர்களுக்கு)தேவையில்லை. இவர்களெல்லாம் இந்து மதத்தில் இருந்து கொண்டு இப்படியா வாழ்ந்தார்கள்?. முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் எதிர்க்க வேண்டும் என்று இவர்கள் சொல்லிக்கொடுத்தார்களா? இவர்களுக்கெல்லாம் வராத இந்து பற்றுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;சாகாவில் இந்த தியாகிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி போதிக்காமல் இவர்கள் போதிப்பதெல்லாம் இந்து வெறிபிடித்த சுயநலம் கொண்ட பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஹெட்கேவர், வீர சாவர்கர், ராணாபிரதாப், அரவிந்தன் இவர்களது வாழ்க்கை முறையைத்தான் போதிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகி அம்பேத்கர் தலித் இனத்தை ஒருங்கிணைப்பதற்காக இந்து மதத்தில் தலித் இனத்தவர்களுக்கும் தனி உரிமை உண்டு என்று போதிப்பதற்காக 1956 ல் இந்து கோர்ட் பில் என்ற ஓர் நியமத்தை(சட்டத்தை) சட்டசபையில் சமர்ப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;நாம் இந்துவல்ல. ஒரு தலித் இனத்தவர்கள் ஒரு போதும் இந்துவாக முடியாது. இந்து மதத்திற்கே சொந்தக்காரர் அந்த பார்ப்பன வெறியர்கள்தான் என்று தான் அம்பேத்கர் மொழிந்தார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் சாகாவில் சொல்லிக் கொடுப்பதில்லை.&lt;br /&gt;அம்பேத்கர் ஒரு மகான் என்று கூறிகிறார்களே இவர்கள். ஏன் அம்பேத்கரின் கூற்றை இவர்கள் மறைக்கின்றார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எனது தலித் இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் சூழ்ச்சி தெரியாமல் நீங்கள் செயல்படுகிறீர்கள். உங்களை படிப்பற்றவர்களாக்கி, பிற மக்களை கொன்று குவிப்பதற்கு உங்களை ஓர் ஆயுதமாகத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பயன் படுத்துகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடை பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னைப்போன்று இஸ்லாம் என்ற கண்ணியத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றில்தான் உங்களுக்கு மோட்சம்(விடுதலை) இருக்கிறது. குர்ஆனின் நிழலில்தான் உங்களுக்கு விடுதலை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இந்து மதத்தை எதிர்த்த டாக்டர் அம்பேத்கருக்கு என்னைப்போன்று இஸ்லாமிய சிந்தனை ஏற்பட்டிருந்தால் முதல் கணமே அந்த தலித் மக்களை, அடிமை இன மக்களை இந்த சத்திய மார்க்கத்திற்கு செல்ல வழி வகுத்து தந்திருப்பார். அவர் அதற்கு வலியுறுத்தியும் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சத்திய மார்க்கத்தின் நிழல் தெரியாததால்தான் அன்று அந்த மக்களை புத்த மதத்திற்கு அனுப்பினார். புத்தனை கடவுளாக ஏற்றுக்கொண்டதைத் தவிர விடுதலை என்ற கோட்பாட்டிற்கு அவர்கள் தள்ளப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆரம்பத் தொண்டனாக இருந்த போது, கேரளாவைச் சார்ந்த இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்த மாநாட்டின் தலைப்பு: &lt;span style="font-style: italic; font-weight: bold;"&gt;"இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்."&lt;/span&gt; இந்தத் தலைப்பைக் கண்ட நான் பீறிட்டு எழுந்தேன். அடக்கவியலாத ஆத்திரம் என்னுள். நாங்கள் எதிர்ப்பை காட்டினோம். "அரசே! இபுறாஹீம் சுலைமான் சேட்டையும், இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் உடனேயே கைது செய்" என்று சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினோம். நான் வேகந்தாழாமல் இந்தச் சுவரொட்டிகளை காவல் நிலையங்களிலேயே ஒட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் என் வேகம் அடங்கவில்லை. காவல் நிலையங்களுக்கு  உள்ளே சென்று இன்ஸ்பெக்டர் அறையில் அவருடைய தலைக்கு மேலையே ஒட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் எனக்கு நன்றாகப் புரிகின்றது அது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தவர்கள் முன் வைத்த முழக்கம் எத்துனை அர்த்தம் நிறைந்துள்ளது என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உண்மையில் இஸ்லாம் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றிடும் வழி காட்டுதலை வழங்கிடும் மார்க்கம். அதைப் புறக்கணித்தால் அழிவும் அட்டூழியங்களுமே விஞ்சும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 22&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116712568113984451?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116712568113984451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116712568113984451' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116712568113984451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116712568113984451'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-21.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 21.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116706381073405894</id><published>2006-12-25T08:20:00.000-08:00</published><updated>2011-08-25T06:26:43.707-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 20.</title><content type='html'>அப்போது அவர் கூறினார், முதலில் இறந்த மய்யித்தின் தந்தை ஒரு பெயர் தாங்கிய முஸ்லிமாக மட்டும் இருக்கிறார். அவருக்கு இஸ்லாத்தின் கோட்பாடே தெரியாது. அதனால் தான் தனது மகளின் மய்யித் முன் நின்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பார்த்த அந்த நபரோ இஸ்லாத்தின் கோட்பாட்டை நன்றாக தெரிந்தவர். இஸ்லாம் மய்யித்திற்கு முன் நின்று கதறி அழுவதை போதிக்கவில்லை. தனது கவலைகளையெல்லாம் மனதில் மூடி மறைத்துக்கொண்டு தனது மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் மிக கண்ணியமாக மகனை அடக்கம் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகனை எனக்குத் தந்தவனும் இறைவன் தான்; அவனை எடுப்பதும் இறைவன் தான் என்ற நம்பிக்கையும், நாளை நானும் இறந்து விட்டால் மகனை நிச்சயம் அல்லாஹ் நாடினால் மறுமையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையும் தான் அந்த நபரின் உள்ளத்தில் இருந்த இஸ்லாமியக் கோட்பாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தின் இந்த கோட்பாடும் என்னை நன்றாக அதன் பக்கம் ஈர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் எனது அப்பாவும் தண்ணி அடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் எனது அப்பாவிற்காக என்னுடைய இறைவனிடம் நான் பிரார்த்திக்கவும், இஸ்லாம் தற்கொலையை போதிக்கவில்லை என்றும் அப்பாவிற்கு எடுத்துச் சொல்லியிருப்பேன். இப்போது நான் அதைப்பற்றி மிகவும் வருந்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் முஸ்லிம்களின் வியாபார விஷயத்திலும் நல்ல ஒரு கோட்பாட்டை கண்டேன். ஒரு முஸ்லிம் வியாபாரம் செய்தால் அவனுக்கு இலாபம் வந்து விட்டால் அல்லாஹ்வை துதிக்கின்றான். அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலோ கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு திருப்திபடுகிறான். ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இந்த வியாபாரத்தை தந்ததும் இறைவன் தான் என்று. எல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடக்கிறது என்று நினைத்து திருப்திப்படவும் செய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்னை போன்று தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த புலயன், குறவன், பறயன், வேலன் இவர்களையெல்லாம் தனது காரியத்தை சாதிப்பதற்காகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும் பயன் படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்கிறேன் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பார்த்து: எங்களது முன்னோர்களெல்லாம் எந்த ஒரு ஜாதி வேறுபாடுமில்லாமல், இந்து மதத்தை ஒன்றாக பகிர்ந்து தானே வாழ்ந்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருக்க அவர்களது மத்தியிலே ஒரு பிளவை ஏற்படுத்தி பள்ளன் என்றும், பறையனென்றும் ஏற்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என்ற பட்டத்தையும் பெற்று தந்ததெல்லாம் நீங்கள் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அதோ எதிரி என்று நீங்கள் சொல்கின்ற முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமா இந்த பாகுபாட்டிற்குச் சொந்தக்காரர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்து ஒற்றுமை; இந்து ஒற்றுமை; என்று சொல்லிக்கொண்டு எங்களது காதில் பூவை சுற்றுகிறீர்கள். இந்த கேடுகெட்ட இயக்கத்தில்தான் நான் பன்னிரண்டு வருடமாக பணியாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பறிவு இல்லாத ஒரே காரணம் தான் இந்த பாவப்பட்ட தலித் இனத்தை மிக மோசமான ஒரு கட்டத்திற்கு அன்றிலிருந்தே கொண்டு சென்றிருக்கிறது. இவர்கள் வரலாற்றை ஆராய்ந்திருந்தால் இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின், பார்ப்பன சுயநலத்தின் தெளிவான தோற்றம் இவர்களுக்கு அன்றே தெரிந்திருக்கும். அது தெரியாததால் இன்றும் இந்த பார்ப்பன வெறியர்களின் அடியாட்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-21.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 21&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116706381073405894?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116706381073405894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116706381073405894' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116706381073405894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116706381073405894'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-20.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 20.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116704780958816128</id><published>2006-12-25T03:47:00.000-08:00</published><updated>2011-08-25T06:26:18.611-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 19.</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;        இஸ்லாத்தில் இபாதத்துகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் தங்களுக்குள் கூறிக்கொள்ளும் சலாத்தைப் பற்றி ஒரு தப்பான வாதத்தை எனக்கு போதித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இவர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு மத்தியில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறிக்கொள்வார்கள். தன் இனத்தைச் சார்ந்த யாரை சந்தித்தாலும் சரியே. இது எதற்கென்றால் பிற மதங்களை தனிமைப்படுத்துவதற்கும் முஸ்லிம்களை ஒன்றுபட வைப்பதற்கும் ஆகும் என்ற இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் கூற்றினால் தப்பான எண்ணத்தில் இருந்துவந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது இந்த ஸலாத்தின் பொருள் எவ்வளவு மிகையானது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)(இறைவனின் சாந்தியும் சமாதானவும் என்றென்றும் உங்கள் மீது உரித்தாகுக;). ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது. அதைக் கேட்ட முஸ்லிமும் தனக்காக துஆ செய்த அந்த முஸ்லிமுக்கு "உன்மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உரித்தாகட்டும்"(வ  அலைக்குமுஸ்ஸலாம்) என திருப்பிக்கூறும் மிக அருமையான  முறையை எந்த மதம் இவ்வாறு நமக்குத் சொல்லித்தருகிறது?.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் வணக்கம்(நமஸ்தே) என்று கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பொருள் இதற்கு?. "உன்னை நான் வணங்குகின்றேன்" என்றல்லவா இதன் பொருள்?. என்ன கீழ்த்தரமான வார்த்தை இது? இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்காக வணக்கம் செலுத்துவது.&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இஸ்லாம் மிக அருமையாக நமக்கு போதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் நான் இஸ்லாத்தில் வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தனக்கு மத்தியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகின்ற இந்த அருமையான வாசகத்தை குறித்து இந்த ஃபாசிஸ்டுகள் எனக்கு தப்பாக போதித்தார்கள்.&lt;br /&gt;முஸ்லிம்கள் சம்பந்தமான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் பொருளை முழுமையாக விளங்காமல் தப்பான நச்சுக் கருத்துக்களால் போதிப்பது இந்த ஃபாசிஸ்டுகளின் தந்திரமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஃபாசிஸ்டுவாதிகளின் சமூகத்திலிருந்து என்னை மட்டும் தேர்ந்தெடுத்து புனித இஸ்லாத்தின் உண்மைகளை எனக்கு போதித்த வல்லான் அல்லாஹ்வுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல் சாப்பிடக்கூடிய விஷயமாக இருந்தாலும் சரியே; இஸ்லாம் மிக அருமையாக போதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடும்போதும் உட்காரும் நிலை, விரல்களைக் கொண்டு சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு விரலை நன்றாக உறிஞ்சுவது, சாப்பாட்டிற்கு நாம் கொடுக்கும் மரியாதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்ஸில் இந்த மரியாதை நிலையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை. அவர்களின் கோட்பாட்டில் இந்த தன்மையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போலத் தான் இறந்தாலும்; பறையன் இறந்தால் அவனை  அடக்கம் பண்ணுவதும் ஒரு முறை. புலயன் இறந்தால் அவனை அடக்கம் செய்வது இன்னொரு முறை. இரண்டு வழி முறையும் அதனுடைய சடங்குகளும் மிக வித்தியாசமாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு முஸ்லிம் இறந்து விட்டாலோ அவனுக்காக அந்த ஊர் ஜமாஅத்தார்கள், ஊர்மக்கள், பக்கத்துவீட்டார்கள் இவர்களெல்லாம் நின்று அந்த மய்யித்தை(இறந்த உடலை) குளிப்பாட்டி விட்டு கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வார்கள். இறப்பு விஷயத்திலும் இஸ்லாம் ஒன்றை போதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இஸ்லாத்தை அடைவதற்கு முன்னால் ஒரு கம்யுனிஸ்ட்வாதியின் மகளின் இறப்பு சடங்கில் பங்கு கொண்டேன். அந்த வீட்டில் ஒரே அலறல் சத்தம் கேட்கிறது. தனது மகளின் பிரேதத்திற்கு முன் அமர்ந்து அலறி சத்தமிட்டு அழுகிறார் கம்யூனிஸ்ட்வாதியான அந்த முஸ்லிம் நபர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் அதன் பிறகு வேறொரு முஸ்லிம் மரணவீட்டிற்கு நான் சென்றேன். தெரிந்த ஒரு முஸ்லிம் நபரின் மகன் ஸ்கூட்டர் விபத்தில் இறந்து விட்டார். இறந்த மகனின் தந்தை அழாமல் வருத்தத்தோடு இருப்பதை நான் கவனித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பார்த்த பிறகு எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. இதை நான் ஒரு மார்க்க அறிஞரிடம் விசாரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-20.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 20&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116704780958816128?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116704780958816128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116704780958816128' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116704780958816128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116704780958816128'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-19.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 19.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116697341501402409</id><published>2006-12-24T07:12:00.000-08:00</published><updated>2011-08-25T06:25:50.975-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 18.</title><content type='html'>நான் விடவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் என்னிடம் காட்டின அந்த பணிவையும், பாசத்தையும், அவர்களது உபசரிப்பையும் பற்றி விவரமாக அவளிடம் சொன்னேன். கடைசியில் அவளது மனம் எனது ஆசைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயாரானது. நான் மனைவியையும் அழைத்துக் கொண்டு நாசர் மஹ்தனியின் வீட்டிற்குச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளையெல்லாம் எனக்கு சொல்லித் தந்து விட்டு புனிதமான எங்களது பூர்விகன் பிலால்(ரலி) உச்சரித்த அந்த கலிமாவை மொழிந்து தந்தார்கள். நாங்கள் சந்தோஷமாக மனதில் அந்த புனித கலிமாவை மொழிந்தோம்; ஏற்றோம் இஸ்லாத்தை.&lt;br /&gt;&lt;blockquote&gt;அஷ்ஹது அன்லா இலாஹ இல்லலாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்)&lt;br /&gt;&lt;/blockquote&gt;என்று சொல்லி விட்டு மஹ்தனி அந்த தியாகி பிலாலின் பெயரைத்தான் எனக்கும் சூட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்ந்த இனத்தவனாக இருந்த நான் இஸ்லாத்தை ஏற்றுக்  கொண்டதற்காக எனது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிலால், நீ கலிமா சொன்ன இந்த நிமிடத்தில் இருந்து இன்று பிறந்த பாலகனைப் போலாவாய்" என்று மஹ்தனி சொல்லிக் கற்பித்தார். இதைக் கேட்ட பொது மனம் திரும்பவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது முந்தைய பாவங்களையெல்லாம் மன்னிக்கக்கூடிய இறைவனையா நான் ஏற்றுக்கொண்டேன் என்று எனது மனம் திருப்தியடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு முழுவதும் நான் தூங்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;36 வருடம் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து ஒரு புது வாழ்க்கையை துவங்குகின்ற அந்த ஆனந்தத்தில் எனது மனம் மூழ்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக நாங்கள் இருவரும் இஸ்லாத்தைத் தழுவினோம். மனைவிக்கு பாங்கோடு ரபீக் மெளலவி கலிமா சொல்லிக்கொடுத்து  ஃபாத்திமா என்று பெயர்ச் சூட்டவும் செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இருக்கின்ற இடத்தை விட்டு மாறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் தங்கினோம். முஸ்லிமான பிறகு எனக்கொரு இப்னு பிலால் என்ற மகனும் பிறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட தலித் இனத்தைச் சார்ந்த பழைய வேலாயுதனாக நான் மரணம் அடைந்தால் எனது மனைவியும் மக்களும் பிச்சை எடுக்கக் கூடியவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் பிலாலான எனக்கு இப்போது அல்லாஹ்வின் கருணையால் தனது உயிரைக்கூட கொடுக்கக்கூடிய முஸ்லிம் சமுகம் இருக்கின்றது. அந்த இஸ்லாமிய சகோதர சமூகம் இருக்கும் காலம் வரை நான் அஞ்சத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அல்லாஹ்வின் கருணையினால் நானும் எனது மனைவி மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக குர்ஆனுடைய நிழலின் கீழ் பாதுகாப்பாக சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தின் மாதவிக்குட்டி சுரையா இஸ்லாத்தை தழுவியபோதும் நாங்கள் குடும்பத்தோடு சென்று அவர்களைச் சந்தித்தோம். ஈமானின் பிரகாசம் அவர்களது முகத்தில் தெளிந்து நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர் குல மாதவிக்குட்டியை பறயனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஆனால் இஸ்லாம் கோட்பாட்டின் கீழ் (பிலாலும், சுரையாவும்) நாங்கள் இருவரும் இணைந்ததால் எங்களுக்குள்ளே அக விவரங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித்  இனத்திற்கு ஒரு   வேண்டுகோள் வைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள இஸ்லாமே நன்மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குர்ஆன் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் வாருங்கள்…..&lt;/blockquote&gt;அல்லாஹ்வின் மார்க்கத்தில் எனக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கும் நேர் வழியைத் தந்த வல்ல இறைவன் அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பாங்கின் ஒலி என்றும் தொடரும். அல்லாஹ் அக்பர்; அல்லாஹ் அக்பர்; அல்லாஹ் அக்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-19.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 19&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116697341501402409?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116697341501402409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116697341501402409' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116697341501402409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116697341501402409'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-18.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 18.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116694841399108688</id><published>2006-12-24T00:16:00.000-08:00</published><updated>2011-08-25T06:25:28.433-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 17.</title><content type='html'>ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் பழகியதால் எனக்கு என்ன  கிடைத்தது? கேவலம் தாழ்ந்த இன மக்களுக்குக்கூட தன்னுடைய மதத்தைப் பகிர்ந்து கொள்ள கொடுக்காத ஒரு வெறிபிடித்த இனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாமல் நாஸர் மஹ்தனி மலபாரிலே கோட்டக்கல் ஜும்ஆ மஸ்ஜிதில் ஒரு இரவு தொழுகை தொழுவதற்காக காரை விட்டு இறங்கினார். நானும் அவரோடு இருந்தேன். மஹ்தனி பள்ளியின் உள்ளே செல்லும் போது நான் வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். முன் வரிசையில் நிற்கின்ற ஒரு கூலிப்பணிக்காரனது காலின் கீழ் மஹ்தனியின் தலை. அது மட்டுமல்லாமல் பல பணக்காரர்களும், ஏழை மக்களும் ஒரே அணியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து தொழுவது என்னை நன்றாக கவர்ந்தது. ஆகா என்ன சமத்துவம் இது! என எனது மனம் மகிழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் கோவில்களுக்குச் செல்லும்போது தாழ்ந்த இனத்தைச் சார்ந்த என்னை கோவிலுக்குள் நுழைய விடமாட்டார்கள். வெளியே நின்று கும்பிட வேண்டியதுதான். அது மட்டுமல்லாமல் ஏதாவது நாட்டின் முக்கியமான நபர் கோவிலுக்கு வந்தால் பிற மக்கள் அன்று முழுவதும் சாமிக்கு லீவு போட வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. முன் ஒருநாள் நான் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காகச் சென்றேன். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு மலையாள சினிமா நடிகர் சாமி தரிசனதிற்காக வந்திருந்தார். அவர் வந்திறங்கியதுதான் தாமதம், ஐயப்பனை தரிசிப்பதற்கு வந்த அந்த இந்து இளைஞர் எல்லாம்  ஐயப்பனை மறந்து விட்டு அந்த சினிமா நடிகரை தரிசிக்க முன் வந்தார்கள். அது மட்டுமல்லாமல் முதலில் சென்ற எங்களை நிறுத்திவிட்டு நடிகரை உள்ளே விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட வேறுபாடு இந்து கலாச்சாரத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தவிர தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு முதலமைச்சர்(முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைக் குறிப்பிடுகிறார்.) சாமி தரிசிக்க  குருவாயூர் சென்றார். சென்றிறங்கியதுதான் தாமதம் அங்கு நின்று  கொண்டிருந்த பக்தர்களுக்கு அடி,உதை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட வேறுபாடு இந்து கலாச்சாரத்தில். இதே சமயம் நான் முஸ்லிம்களின் நிலைமையை சிந்தித்தேன். முஸ்லிம் மந்திரி தொழுவதற்காக பள்ளியில் ஏறும் பொழுதும் மற்ற முஸ்லிம்கள் எல்லாம் வெளியே நிற்க வேண்டும் என்று சொன்னால் என்னவாகும் நிலைமை? மந்திரியும் அதை எதிர்பார்ப்பதில்லை. மக்களும் அதை செய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சமத்துவ, சகோதரத்துவத்தை நான் அந்த பள்ளிவாயிலின் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாமல் அங்கிருந்து நானும் மஹ்தனியும் மலப்புரம் மாவட்டம் திருவங்காடி என்ற இடத்தில் பானு காக்கா என்ற முஸ்லிம் நண்பனின் வீட்டிற்குச் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட என்னை மிகவும் கண்ணியமாகவும் பாசத்தோடும்  அரவணைத்து நல்ல சாப்பாடும் தந்து அங்கேயே தங்க வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட தன்மைகளை வலியுறுத்துகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் நானும் இணைந்து கொண்டால் என்ன? என்ற கேள்வி என்னை ஆட் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதை ஒரு நாள் மனைவி சாந்தாவிடம் கூறினேன். அவள் இதற்கு சற்று தயக்கம் தெரிவித்தாள். உடனே நான் முஸ்லிம்களாலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களாலும் நமது வாழ்க்கையில் ஏற்பட்ட வித்தியாசங்களையும் இஸ்லாத்தின் தன்மைகளையும் எடுத்து விவரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் அவளது மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் முஸ்லிம்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரி அல்லவா? என்ற எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் உதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-18.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 18&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116694841399108688?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116694841399108688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116694841399108688' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116694841399108688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116694841399108688'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-17.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 17.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116688352419914848</id><published>2006-12-23T06:08:00.000-08:00</published><updated>2011-08-25T06:38:17.048-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 16.</title><content type='html'>முஸ்லிம் பெண்களை பாதுகாப்பான முறையிலும் தங்களது பார்வையை தாழ்த்திக்கொண்டும் பணிவோடு நடக்கவும்  வலியுறுத்தி பர்தா முறையை இஸ்லாம் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட அவர்களோடு சேர்ந்து நின்று முஸ்லிம் பெண்மணிகளைப் பற்றியும் அவர்களது பர்தாவைப் பற்றியும் கிண்டல் செய்த காலம் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த சங்பரிவார்களோ தங்களது இந்து பெண்கள் ஆடை அணிவதையும் அதிலும் குறிப்பாக அவர்கள் மார்பை  மறைப்பதையும் கண்டிக்கும் நிலை உடையவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்களை கண்டால் அவர்களை தேவைக்கேற்ப பயன்படுத்திவிட்டு  விட்டுவிடுவதுதான் இந்த இந்து சமுதாயத்தவரின் பழக்கமாக இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இஸ்லாத்திலோ அது போன்று காணவே முடியாது. பெண்களை மிகவும் கண்ணியமாக நடத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரத்தை உடைய இந்து ஆர்.எஸ்.எஸ். [தம்புராக்கள்] தேவர்கள்தான் கண்ணியத்திற்குரிய  முஹம்மது நபியை குறை கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக நாசர் மஹ்தனியின் ஒரு பேருரை ஒன்றை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பேருரையில் மஹ்தனி எடுத்துக்கொண்ட தலைப்புதான் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டு நின்ற கறுப்பு நிற முஸ்லிம் பிலால்(ரலி) பற்றியது. இந்தப் பேருரை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஒரு முக்கிய காரணமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக மஹ்தனி தியாக பிலாலின் வாழ்வை ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார். அரங்கம் நிசப்தமாக காதை கொடுத்து கேட்டுக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புனிதமான அந்த இஸ்லாத்தை தழுவிய ஒரே காரணத்திற்காக  பிலால்(ரலி) அவர்களை சுடு மணலில் கிடத்தி பாரமான பளுவை அவரின் நெஞ்சின் மீது வைத்து கொடுமைப்படுத்தினர் அந்த முஷ்ரிக்குகள்(இஸ்லாத்தை எதிர்த்தவர்கள்). மேலும் பிலால்(ரலி) அவர்களின் உணர்வுகளைப் பற்றி மஹ்தனியின் உருக்கமான உரை என் உள்ளத்தை உருக்கிற்று. மஹ்தனியின் அந்த பிலாலைப் பற்றிய உரை எனது கண்ணில் இருந்து கண்ணீர் துளியை வரவழைத்தது. மேடையில் இருந்து கொண்டே நான் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரசூல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அந்த நீக்ரோ இன அடிமையை கட்டி அணைத்தது மட்டுமல்லாமல், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) இவர்கள் எல்லாம் இருந்த பொழுதும் பிலால்(ரலி) எங்கே? என்று அவர்கள் கேட்டு, "கஃபா ஆலயத்தை திறப்பதற்கு இங்கே நிற்பவரில் நீ தான் அதற்கு தகுதியானவன்" என்று சொல்லி அந்த கறுப்பு இன மாமனிதனை மகிழ்வித்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நின்று தொழுகின்ற அந்த கஃபா ஆலயத்தை திறந்து, அல்லாஹு அக்பர் என்ற பாங்கைச் சொல்வதற்கு முதலில் பாக்கியமடைந்தவர் அந்த அடிமை பிலால்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப்பட்ட பாக்கியம்!. அது மட்டுமல்லாமல் கஃபாவின் மேல் ஏறுவதற்கு முடியாமல் தவிக்கின்ற அந்த அடிமை பிலால்(ரலி) அவர்களிடம் நாயகம் திருமேனி முஹம்மது(ஸல்) அவர்கள் தன் கரம் மிதித்து ஏறுவதற்கு சொன்னதும், அந்த வெண்ணிற மேனியின் கையில் கறுப்பு நிற பாதங்கள் மிதித்து ஏறுவதும், அடிமைத் தனத்தை முற்றிலுமாக அது அடித்து நொறுக்கிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அந்த மஹ்தனியின் பிரசங்கத்தை கேட்டதும் எனது பூர்விகன் பிலாலை நான் ஒரு நிமிடம் மனதில் பதித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-17.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 17&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116688352419914848?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116688352419914848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116688352419914848' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116688352419914848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116688352419914848'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-16.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 16.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116685192959187439</id><published>2006-12-22T21:28:00.000-08:00</published><updated>2011-08-25T06:24:08.501-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 15.</title><content type='html'>அன்வாருஷ்ஷேரியின் வாழ்க்கை எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் ஓர் புது அனுபவம் கிடைத்தது. என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு சென்று கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்துதான் இஸ்லாத்தைப் பற்றி மேலும் தெரியவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது. பல இஸ்லாமிய அறிஞர்களையும் நான் நாசர் மஹ்தனி மூலம் அறிந்து கொண்டேன். இந்தப் பழக்கவழக்கம் தான் வேலாயுதன் என்ற எனக்கு இஸ்லாத்தைத்  தெரிந்திட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்த அந்த ஆலிம்கள் சாதாரண மக்களோடு காட்டுகின்ற அன்பு, பாசம் இவற்றைப் பார்த்து இஸ்லாம் அன்பினாலும் மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு நல்ல மார்க்கம் என்பதை நான் மேலும் புரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மது(ஸல்) அவர்களின் எதார்த்த அடியார்கள் இவர்கள்தான்  என்பதை நான் உணர்ந்தேன். மேன்மையான நல்ல அன்பும் பாசமும் மிகுந்த அந்த முஹம்மது(ஸல்) அவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றும் அந்த நல்ல உள்ளத்தையா ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள், தீவிரவாதிகள் என்றும் இஸ்லாம் தீவிரவாதத்தின் மதம் என்றும் கூறினார்கள் என்று எனது மனதில் தோன்றி நான் மிகவும் வருத்தப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வூரில் பிரார்த்தனை நடக்கும் போது நான் வெளியில் நின்று பார்த்தேன். பிறருக்காக பிரார்த்தனை செய்கின்ற அந்த அநாதை குழந்தைகளை பார்த்த பொழுது, எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பிறருக்காக பிரார்த்தனை செய்வதை நான் பார்த்ததில்லை. அவர்களின் கீழ் இயங்குகின்ற எந்த அநாதை ஆலயத்திலும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுமில்லை. இவர்களது மத்தியில் நல்ல கலாச்சாரம் இருந்தால் தானே நல்ல குணங்கள் இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் பி.டி.பியின் ஓர் அங்கமானதால் அதன் கீழுள்ள நாசர் மஹ்தனியின் தொண்டர்கள் அநியாயத்திற்காக எந்த ஒரு இன வேறுபாடுமில்லாமல் ஒன்றாய் நின்று போராடுவது எனது உள்ளத்தை மேலும் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக குன்னத்தூரில் தங்கிவிட்டு திரும்ப கிளம்பும்  போதுதான் எனது மனது முழுவதும் அந்த அநாதை விடுதியின்    நினைவுகளும் அங்குள்ள ஆலிம்களின் நல்ல பணிவான  தோற்றமும் தான் இந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த எனக்கு இஸ்லாத்தைப் பற்றி நன்றாகப் புரிய ஒரு வாய்ப்பைத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிகளைப் பற்றி அந்த சங்பரிவார கும்பல்கள் கூறுவது:&lt;br /&gt;&lt;br /&gt;நமது இனத்தைச் சார்ந்த ஒரு இந்து பெண்ணையும் இந்த முஸ்லிம்கள் விட்டுவைப்பதில்லை. இவர்களுக்கு ஆசைவரும் போதெல்லாம் நமது இனப் பெண்களைத்தான் இவர்கள் வெறும் போகப்பொருளாக பயன்படுத்துவார்கள். என்றெல்லாம் மிக மோசமாக முஸ்லிகளைப் பற்றி பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதுதான் எனக்கு தெரிகிறது, முஸ்லிம்கள் இத்துனை கண்ணியத்தோடும் ஒழுக்கத்தோடும் வாழக்கூடியவர்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னியப் பெண்களைப் பார்ப்பது கூட ஹராம்(தடுக்கப்பட்டது) என்று இஸ்லாம் போதிக்கின்றது. எனது வீட்டில் முஸ்லிம்கள் வந்தால், எனது மனைவியைப் பற்றியும், குழந்தையைப்பற்றியும்  விசாரிப்பது மட்டும் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். எனது மனைவியின் முகத்தைக்கூட அவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை. நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது மனைவி உட்காரச் சொன்னால்கூட தலையை குனிந்தவண்ணமாக சலாம் கூறி விட்டு கண்ணியத்தோடு திரும்புவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நல்லுள்ளம் கொண்ட அந்த சமுதாயத்தையா இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தவறாக சித்தரிக்கிறார்கள் என்று நான் பல  நாளும் நினைத்து வருந்தியதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-16.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 16&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116685192959187439?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116685192959187439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116685192959187439' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116685192959187439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116685192959187439'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-15.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 15.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116663120360701436</id><published>2006-12-20T08:05:00.000-08:00</published><updated>2011-08-25T06:23:42.961-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 14.</title><content type='html'>அது மட்டுமல்லாமல் இவ்வளவு சுலபமாக முஸ்லிம்களுக்கு இந்த அவமானம் நடந்த பிறகும் இன்னொரு முஸ்லிம் சமூகம் அதற்காக கொஞசம்கூட வருத்தப்படவில்லையே ஏன்? அதற்கெதிராக பேசுவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது என்னுள் வியப்பை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக முதன் முதலில் கொல்லம் மாவட்டத்தில் முன்னத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் எனக்கு மஹ்தனியின் அன்வாருஷ்ஷேரியுமாக [ஸ்தாபனம்] பந்தம் ஏற்பட்டது. இந்த ஸ்தாபனம் நாசர் மஹ்தனியால் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக நிறுவப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிறுவனத்தைப் பற்றித்தான் நான் எனது ஆர்.எஸ்.எஸ் வாழ்க்கையில் மிகவும் கோபமாக உரையாற்றினேன். இந்துக்களை கொன்றொளிப்பதற்காக நாசர் மஹ்தனியால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் அன்வாருஷ்ஷேரி என்றும், தீவிரவாதத்தை வளர்க்கின்ற ஒரு முக்கிய நிறுவனம் என்றும், சிறுவர்களுக்கு ஆயுதப்பயற்சி கொடுக்கின்ற ஒரு நிறுவனம் என்றெல்லாம்  பொய்யைப் பேருரையாக ஆற்றியது எனது நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் இஸ்லாமிய நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த  நான் தங்குவதும், அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு என் மேலுள்ள பாசமும் பரிவும் என் மனதை நன்றாக கவர்ந்தது. எங்களை இவர்கள் தாழ்வாக பார்ப்பார்கள் என்றெல்லாம் நான் முன்னால் நினைத்ததுண்டு. இதற்கெல்லாம் நேர் மாறாகத்தான்  அவர்களது[முஸ்லிம்களது]பழக்க வழக்கங்கள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லித் தீர்க்கமுடியாத அரவணைப்பு, அவர்களுடன் ஒன்றாக இருந்து சாப்பிடுவது, அவர்களோடு ஒன்றாக ஒரே இடத்தில் துங்குவது, இதெல்லாம் என் மனதில் வேலாயுதன் என்ற நான் ஓர் பிலாலாக மாறுவதற்கு பாதை போட்டுத்தந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்வாருஷ்ஷேரி என்ற நிறுவனம் குறிப்பாக சொல்லப்போனால்  ஒரு யத்தீம்கானாவாகும்[அநாதைகள் விடுதி]. அங்குள்ள அநாதைப் பிள்ளைகள் என்னோடு கொண்டிருந்த மரியாதை இதெல்லாம் தாழ்ந்த இனத்தைச் சார்ந்த எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு தலைவரிடம் கூட இப்படிப்பட்ட எளிமையான, அன்பான குணங்களை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யத்தீம்கானாவில்(அநாதைகள் விடுதியில்) நான் கொஞ்சம் நாள் பி.டி.பியின் ஒரு ஸ்ஷார்த்தியாக[வேலாயுதனாக] தங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வியாழக்கிழமையிலும் அந்த அநாதைகள்:&lt;br /&gt;&lt;blockquote&gt;"இறைவா, எங்களுக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!" &lt;/blockquote&gt;என்றெல்லாம் பிரார்த்தனை செய்வதை நான் பார்த்தேன். அப்போது தான் எனது மனதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வாழ்க்கை தென்பட்டது. இந்த பிள்ளைகளைப் பற்றியா நாங்கள் தீவிரவாதிகளென்றும், தீவிரவாதத்தை ஊட்டுகின்ற நிறுவனம் என்றும் இந்நிறுவனத்தில்  தீவிரவாதத்தை பிஞ்சு உள்ளங்களில் ஊட்டுகிறார்கள் என்றும் பொய்யைப் புனைந்துரைத்தோம்?.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அபாண்டமான பொய்யைச் சொன்னார்கள் என்ற எண்ணம் எனது மனதில் தெரிந்தது. மேலும் நாசர் மஹ்தனியையும் இவ்வாறுதான் தீவிரவாதி என்று முத்திரை குத்தினார்கள் என்ற உண்மையும் எனக்குத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-15.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 15&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116663120360701436?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116663120360701436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116663120360701436' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116663120360701436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116663120360701436'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-14.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 14.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116651026460643037</id><published>2006-12-18T22:31:00.000-08:00</published><updated>2011-08-25T06:23:03.751-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 13.</title><content type='html'>தலித் இனத்தவர்களை எப்படியேனும் அழிக்க வேண்டும் என்ற கூட்டு ஆலோசனைதான் ஆர்.எஸ்.எஸ். நடத்திக் கொண்டிருந்தது. அன்றைய நாள்களில் சவர்ணர்கள், தலித்துகளை வீதியில் போட்டுக் கொன்றார்கள். இன்றோ இந்த சவர்ணர்கள்தான் உயர்ஜாதியினர் ஆர்.எஸ்.எஸ். ரூபத்தில் அவர்களை சதி செய்து கொலை செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் நாசர் மஹ்தனி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை முன்னிறுத்தி மேடைப் பேச்சுக்களை தீவிரமாக பேசும் போது அது கேட்க கேட்க கோபம்தான் வந்து கொண்டிருந்தது எனக்கு. ஏனென்றால் சிறு வயதில் அம்மா சொல்லிக் கொடுக்கின்ற ஒரு ராம வசனம் நினைவுக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராம ராம ராம ராம் பாஹிமாம் [ராமபாதம் சேரணே முகுந்தராம பாவரிமாம்].&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ராமபாதம் சேருவதுதான் மிகவும் உயர்ந்தது என்று அம்மா சிறு வயதில் எனக்குச் சொல்லிக்கொடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ராமன் பிறந்த இடத்தில்தான் திரும்பவும் பாபரி மஸ்ஜிதை நாங்கள் கட்டுவோம் என்று மேடையில் பேசுகின்ற மஹ்தனியை பார்க்கும் போதேல்லாம் எனக்கு வெறுப்பும், கோபமும் பொத்துக் கொண்டுவரும்.&lt;br /&gt;மாலை நேரம் சுமார் 4 மணிக்குத்தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட செய்தியை நான் அறிகிறேன். அன்று முழுவதும் நானும் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தோம். எனது சாகாவின் எதிரொலி கேரளத்தில் நடக்கவில்லையென்றாலும், பைசாபாத்தில் நடந்தேறியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், சாகாவின் மீது அதிக ஈர்ப்பும் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் மறுப்பாகவும், எதிர்ப்பாகவும் பாபரி மஸ்ஜித் திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்ற ஓரே எண்ணத்தோடுதான்  பி.டி.பி. யின் பின் துணையோடு அயோத்தி சென்றேன் 1996 ல்.&lt;br /&gt;&lt;br /&gt;1996 டிசம்பர் 30 -ம் தேதிதான் எர்ணாகுளத்திலிருந்து ரயில் ஏறினேன். அந்த இரண்டு நாள்களிலும் கடந்த நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லக்னோவில் சென்றிறங்கினால் ஒரு பெரும் முஸ்லிம் சமூகம் எங்களை வரவேற்கும் என்ற எண்ணம் எனது மனதில் இருந்தது. அங்கு சென்று இறங்கும் போதுதான் தெரிகிறது. போலீஸ் பட்டாளம் தெரு முழுவதும் நிறைந்து நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 6 முதல் அங்குள்ள முஸ்லிம்கள் பயத்தால் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபரி மஸ்ஜித் என்று பேசுவதற்குக்கூட அவர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.&lt;br /&gt;கேரளத்தின் மக்கள் தொகைக்கு சமமான உத்திரப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்களின் இந்த உள்ளத்தைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தில் தாழ்த்தப்பட்ட தலித் இனத்தாரும் உ.பி.யில் முஸ்லிம்களும் சங்கபரிவாரின் சக்திகளுக்கும் அவர்களது தந்திரங்களுக்கும் இரையாகி தரைமட்டமாக ஆகிவிடுகிறார்களே என்ற எண்ணம்தான் எனது உள்ளத்தில் வேதனையில் ஆழ்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்துணை எளிமையாகவும், இனிமையாகவும் பாசமும் காட்டுகின்ற முஸ்லிம் சமூகத்தையா மிகவும் கீழான இட்டுக்கட்டப்பட்ட  அவதூறுகளைச் சொல்லி அழிக்கத் துடிக்கின்றார்கள். அவர்களின்  சின்னங்களையும் பள்ளிகளையும் அவதூறு பேசுகிறார்கள் என்று எனது மனம் கவலையில் வாடிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தி நோக்கி நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லையென்றால் இதையெல்லாம் நான் தெரிந்திருக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தி அணிவகுப்பிற்காக சென்ற பிறகுதான் தெரிகிறது இந்த ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் இல்லாத ஒரு பழியை முஸ்லிம்கள் மீது வேண்டுமென்றே போட்டு குற்றம் சுமத்தி அவர்களை அழிப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் என்ற உண்மை. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதனை நடத்திக்காட்டிவிட்டார்கள். இதனை நான் கண்கூடாகக் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்திக்கு  மேற்கொண்ட பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லையென்றால் முஸ்லிம்களைப் பற்றி இன்னும் மிக கேவலமான கருத்துக்களைக் கொண்டவனாகவே வாழ்ந்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் முக்கியமான இஸ்லாமிய கேந்திரங்கள் நிறைந்த உத்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் இவ்வளவு பிற்போக்குவாதிகளாகவும் கிஞ்சிற்றும் விழிப்புணர்வு இல்லாதவர்களாகவும் போனது ஏன்? என்ற கேள்வி இப்போதும்  எனது மனதை உறுத்திக் கொண்டே இருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-14.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 14&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116651026460643037?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116651026460643037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116651026460643037' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116651026460643037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116651026460643037'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-13.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 13.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116644105727080131</id><published>2006-12-18T03:20:00.000-08:00</published><updated>2011-08-25T06:22:32.850-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 12.</title><content type='html'>ஒரு நாள் இவர்கள் என்னிடம்,  "வேலாயிதா, நீ மஹ்தனியோடு சேர்ந்து நின்று பணியாற்று. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பிஜேபி க்கும் பதிலடி கொடுப்பவர் அவர்தான்" என்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இரவில் அவர்கள் என்னை மஹ்தனியைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார்கள். அன்று தான் முதன் முதலாக முஸ்லிம் நண்பர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;மஹ்தனியின் அந்த விகாரமான தோற்றத்தை பார்ப்பதற்கு எனக்கு ஒரு வித அச்சமாகத்தான் இருந்தது. தலித் இனத்தை,  தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த என்னை அவர் ஏற்றுக்கொள்வாரா? என்னிடம் பேசுவதற்கு விருப்பப்படுவாரா? என்றெல்லாம் எனது மனம் கலங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக ஒரு விதத்தில் எர்ணாகுளம் ஃபிரீடம் சாலையில் இருக்கின்ற என்.எம்.மெஹ்பூபின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். வீட்டின் மேல் மாடிக்கு என்னை அழைத்துச் சென்று தனிமையாக ஓரிடத்தில் உட்கார வைத்தார்கள். நாஸர் மஹ்தனியை பார்ப்பதற்கு ஒரு வித அச்சமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் நானும் ஓர் ஆர்.எஸ்.எஸ். காரனாகத்தானே இருந்தேன். மஹ்தனி மீது வெடிகுண்டு எறிந்து அவரது காலை முறித்தது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?. என்னை ஏதாவது செய்யப்போகிறாரா?. தனிமையில் சிக்கிக்கொண்டேனோ? என்றெல்லாம் எனது மனம் அச்சத்தால் அல்லாடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழிந்ததும் அதி விகாரமானத் தோற்றத்தில் பிரகாசமான முகத்தோடு நாஸர் மஹ்தனி படியேறி வந்தார். ஒரு கால் ஊனமானதால் வேறொரு நபரின் தாங்கலோடு ஏணிப்படி ஏறி வந்து என் முன்னே உட்கார்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிடம் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். என்னைப் பற்றியும் வீட்டு நிலவரம் பற்றியும் ரொம்ப அக்கரையோடும் ஆவலோடும் விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எர்ணாகுளத்தில் மஹ்தனி கட்சியின் மாநாடு நடக்கிறது. கட்சியில் முழுமையாகச் செயல்பட வேண்டும் என்று கூறி பி.டி.பியை  எனக்கு அறிமுகப் படுத்தினார்கள். நாஸர் மஹ்தனியின் கட்சியின் பெயர் மக்கள் ஜனநாயக கட்சி [PEOPLES  DEMOCRATIC PARTY]PDP எனச் சுருக்கமாக கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எர்ணாகுளத்தில் கட்சியின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். மஹ்தனியின் தீப்பொறி பறந்த பேருரையை நான் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி க்கு எதிராக அவரது பேச்சும், ஆவேசமும் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கமுள்ள அவரது மன ஈர்ப்பும் என்னை நன்றாக கவர்ந்தது. மேடையில் வேலாயுதன் என்று என்னையும் அறிமுகப்படுத்தினார்கள். பிஜேபியையும்,ஆர்.எஸ்.எஸ்ஸையும் எதிர்த்து வரும்போது உன்னை ஒரு மேடையிலும் சேர்க்கமாட்டாங்கடா. பறைய இனத்தைச் சார்ந்த உனக்கு யாரும் அடைக்கலம் தரமாட்டார்கள் என்றெல்லாம் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இதற்கு முன் என்னிடம் கூறியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல மேடைகளில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் சதி வேலைகளை சொல்வதும், தலித்துகளுக்காக மேடையில் பேசுவதற்கும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நாஸர் மஹ்தனியின் கட்சியான ஜனநாயக மக்கள் கட்சியின் ஒரு முக்கியப் பங்காளியாக நான் மாறினேன். முஸ்லிம் மக்களின் அரவணைப்பும் அவர்களுக்கு என்னிடமிருந்த பாசகுணமும் என் மனதை பெரிய அளவில் மாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் கட்சியின் ஒரு கமிட்டிக் கூட்டம் எர்ணாகுளத்தில் நடக்கும் போது நாஸர் மஹ்தனியின் மாவட்ட செயலாளர் சித்திரபானு என்ற நபர் என்னிடம் கூறினார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"வேலாயுதா நீ உஷாராக இரு. மஹ்தனி உன்னை கொலை செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். காரன் கொன்றதாக கூறிவிடுவார்." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிக்காக ஒரு இரத்த சாட்சி என்ற முறையில் இந்த விஷயம் எனது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. இதை நான் நேரடியாக மஹ்தனியிடம் கூறினேன். மஹ்தனி கோபப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் பொதுச் செயலாளர் இருக்கும் போதுதான் இதை நான் மஹ்தனியிடம் கூறினேன். அப்போதுதான் வெடித்தது கலகம். சித்திரபானுவின் மகன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன். சித்திரபானுவும் இரகசியமாக ஆர்.எஸ்.எஸ்ஸில் பணிபுரிந்து வந்தார். என்னை மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் கை கொண்ட தந்திரம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-13.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 13&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116644105727080131?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116644105727080131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116644105727080131' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116644105727080131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116644105727080131'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-12.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 12.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116634354048127748</id><published>2006-12-17T00:17:00.000-08:00</published><updated>2011-08-25T06:21:59.300-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 11.</title><content type='html'>குழந்தை பிறந்ததும், திரும்பவும் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. வேறு வழியில்லாமல் எனது  ஆட்டோவை விற்று பழைய தொழிலான கருங்கல் உடைப்பதற்கும், மரம் சுமக்கவும் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் சென்றபோது தலித் விகஸன் கார்ப்பரேஷன், தலித் மக்களுக்காக வீடும் இடமும் வாங்குவதற்கு அரசு பணம் கொடுக்கின்றது என்று கேள்விப்பட்டேன். எனது இப்போதைய  ஷெட்டை மாற்றிவிட்டு வீடு கட்டுவதற்கு மனு கொடுத்தேன். அன்றும் நான் BJP யின் ஒரு மெம்பராகத்தான் இருந்தேன். கருத்து  வேறுபாடுகள் இருந்தால் கட்சிக்காக வேலை ஒன்றும் செய்ய முற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்க பிஜேபி யும், ஆர்.எஸ்.எஸ்ஸும் சேர்ந்து எனக்கு கிடைக்கப் போகின்ற அந்த பதவியைத் தடுப்பதற்கு பல வழிகளையும் கையாண்டார்கள். எல்லா வழியிலும் என்னை ஒதுக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தில் அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால் அரசு எனக்கு சாதகமானதால் அவர்களது திட்டம் நடை பெறாமலும் எனக்கு வீடு கட்டுவதற்கு உதவியும் கிடைத்தது. உடனே வீடு கட்டவும் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக உயிரைக் கொடுத்து எனது சொந்த வாழ்க்கையைக் கூட பொருட்படுத்தாமல் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளான நான் அவர்களின் உயர் குலத்து பெண்ணை திருமணம் முடித்தற்காக எல்லாவற்றையும் மறந்து கொஞ்சம் கூட நன்றியில்லாமல் எனக்குத் துரோகம் செய்வதற்கு முன்வந்தார்கள் அந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஜேபி யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எனக்கு ஒரு பிரச்னையாக மாறியவுடன், அவர்களுக்கெதிராக நான் போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சில இளைஞர் குழுவை நியமித்து பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் சதி வேலைகளை இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். இதனை அம்பேத்கார் கல்வி மையம் மூலம்  வெளிப்படுத்திக் காட்டினேன். சிறிது நாட்களில் நியமித்த அந்த இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ். பயத்தால் என்னை தனிமைப்படுத்தினார்கள். சில சதி வேலைகளில் என்னை சிக்கவைக்க முயற்சிகளைச் செய்தார்கள். அம்பேத்கார் கல்வி மையத்தை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில்தான் அப்துல் நாசர் மஹ்தனியின் பாபரிமஸ்ஜித்  பற்றிய தீப்பொறி பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்  உள்ளிட்ட அமைப்புகளுக்கெதிராக கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு நபர் தான் நாஸர் மஹ்தனி என்ற எண்ணம் தான் எனக்கு இருந்தது. அம்பேத்கர் கல்வி மைத்தை சங்கபரிவாரிடமிருந்து மீட்க எனக்கு நாஸர் மஹ்தனியின் உதவி தேவைப்பட்டது. அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை என்னை தொற்றிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஊரில் தனிமையாக நிற்கும் போது ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் எனது நண்பர்களானார்கள். எனது வாழ்க்கையில் முதல் முதலாக பழகிய இரண்டு முஸ்லிம் நண்பர்கள்தாம் ரபீக்கும், அஃப்சலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-12.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 12&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116634354048127748?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116634354048127748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116634354048127748' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116634354048127748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116634354048127748'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-11.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 11.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116584729503079781</id><published>2006-12-11T06:26:00.000-08:00</published><updated>2011-08-25T06:21:22.442-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 10.</title><content type='html'>1991 ல் திரும்பவும் எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சியான BJP யில் ஒரு பதவி கிடைத்தது. எர்ணாகுளம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு நிறைய நிறைய பதவி கிடைத்தது. இதிலிருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கலாம் என்று நினைத்தேன். இதிலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தலையிட்டு அதையும் கலைத்தார்கள். B.J.P.யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எனக்கெதிராக மாறின.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அங்கிருந்து சாந்தாவையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக சொந்த உருக்குச் சென்று விடலாம் என்று எண்ணினேன். ஒரு இரவு நேரத்தில் நான் சாந்தாவை யாரும் பார்க்காமல் வீட்டில் இருந்து அழைத்து வந்தேன். இரவு முழுவதும் ஒரு முஸ்லிம் பெண்ணின் வீட்டில் தங்க வைத்தேன். நாங்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று தெரிந்தும் அந்த முஸ்லிம் பெண் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு விதமாக நான் ஊரை வந்தடைந்தேன். திருமணம் முடிந்த சில மணிகளுக்குள்ளாகவே காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்தார்கள். ஸ்டேஷன் வருமாறு அவர்கள் என்னிடம் கூறினார்கள். இன்று என்னால் வர இயலாது நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை ஸ்டேஷன் செல்லும்போது சாந்தாவின் அப்பாவும், அம்மாவும் அங்கே இருக்கிறார்கள். இருப்பத்தி ஐந்தாயிரம் ரூபாயையும், பத்து பவுன் நகையையும் இவன் திருடிக்கொண்டு போய் விட்டான் என்று சாந்தாவின் அப்பா சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தனிடம் புகார் கொடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் இப்படி பேசமாட்டார் என்று எனக்கு நன்றாக தெரியும். இதற்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செயல்படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. அது நிஜமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து எனது வீட்டில் பல பிரச்னைகள் உருவாகத் தொடங்கின. நாங்கள் இருப்பது இரண்டாவது அம்மாவின் வீடானதால் அவர்களுக்கு இத்திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நான் தனியாக இவர்களை விட்டு பிரிந்து செல்வோம் என முடிவெடுத்து இரண்டு பேருமாக ஒரு சின்ன குடிசையில் எங்களது வாழ்கையைத் தொடங்கினோம். அப்போது நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன். அதனால் கொஞ்சம் வருமானம் இருந்தது.&lt;br /&gt;வேலை செய்து கொஞ்சம் பணம் சேர்த்து எனது ஊரில் அம்பேத்கர் காலனியில் ஒரு மூன்று செண்டு இடம் வாங்கினேன். அங்கே ஒரு சின்ன செட் கட்டினோம். அங்கே வைத்து எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. மீரா என்று அதற்குப் பெயர் சூட்டினேன். இப்போது ஜாஸ்மின் என்பது அவளது பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-11.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 11&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116584729503079781?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116584729503079781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116584729503079781' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116584729503079781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116584729503079781'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-10.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 10.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116574219692958546</id><published>2006-12-10T01:14:00.000-08:00</published><updated>2011-08-25T06:20:30.009-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 9.</title><content type='html'>எங்களை வெறியூட்டி களத்தில் இறக்கிய நம்பியாரின் கூட்டத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எங்களுக்கு ஊக்கம் கொடுத்துவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;40 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இந்த மருத்துவமனை வாழ்க்கையில் எனக்கு ஒரு உற்ற துணையாக ஒருவள் இருந்தாள். அவள் வேறு யாருமில்லை நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாகா பயற்சிப் எடுக்கும் பொழுது பக்கத்தில் சாந்தா என்ற ஒரு பெண்ணுடன் பழகிவந்தேன். அந்தப் பழக்கம் காதலாக உருவானது. அவள் ஒரு தேவர் இனத்தைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்த பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையில் எனது காலின் நிலைமை மிக மோசமாக இருந்தது. காலைத் துண்டித்து மாற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். தனிமையான வாழ்க்கை அப்போதுதான் எனது மனதில் துக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை முறித்தால் பிழைப்பிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுவேன் என்ற எண்ணத்தில் காலை துண்டித்து எடுக்க நான் சம்மதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனான எனது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவனிடம் உதவி தேடினேன். அவன் என்னை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றான். கடுமையான முயற்சியின் போது சிறிது நாளில் எனது காலும் சரியானது. உடனே நான் எனது வீட்டிற்குத் திரும்பினேன். அப்பொழுது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்னை அமைப்பிலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தா என்ற அந்த ஆர்.எஸ்.எஸ். உயர் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணுக்கும் எனக்கும் தொடர்புகள் அதிகமாயின.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவனாக இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது தான் எனக்குத் தெரிந்தது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்துக்கள் எல்லோரும் சமமானவர்; இந்து மதத்தை நாம் நன்றாக பேணிக் காப்போம்; என்ற இவர்களது கோஷம் வெறும் பொய்யானது என்று.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக வேலை செய்வதை நான் தவிர்க்கலானேன். ஆர்.எஸ்.எஸ்ஸில் உயர் ஜாதி இனத்தைச் சார்ந்தவர்கள் சொகுசாக வாழ தாழ்த்தப்பட்ட மக்களான நாங்கள் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டு எங்களது சொந்த வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்காமல் ஏமாந்தவர்களானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-10.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116574219692958546?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116574219692958546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116574219692958546' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116574219692958546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116574219692958546'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-9.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 9.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116565186768151889</id><published>2006-12-09T00:06:00.000-08:00</published><updated>2011-08-25T06:19:49.486-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 8.</title><content type='html'>வேணுகோபாலன் நம்பியார் என்ற எங்களது BMS தலைவன் [இது ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிலாளர் பிரிவு]என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். CITU வைச் சார்ந்த தங்கப்பன் என்ற நபரை கொலை செய்யவேண்டும் என்பதுதான் அந்தப் பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்படம் என்ற இடத்தைச் சேர்ந்த பிரகாசன், சித்திரப்புழையில் உள்ள ப்ரதீப்குமார், தலைவர் வேணுகோபாலன் நம்பியார் இவர்கள் எல்லாம் சேர்ந்து [தங்கப்பனை கொல்வதற்கு] ஒரு இரவு இரகசியத் திட்டம் தீட்டினோம். அடுத்த நாள் காலையில் தங்கப்பனின் எல்லா அசைவுகளையும் நாங்கள் கண்காணித்தோம். இரவில் தங்கப்பனை கொலை செய்ய வேண்டும் என்றுதான் தலைவரது கட்டளை.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் மறையும் நேரத்தில்தான் தங்கப்பன் வீட்டிற்குச் செல்வான். இரவு நேரத்தில் தங்கப்பன் ஸ்கூட்டரில் வருவதை பார்த்தோம். அம்பல மேட்டில் உள்ள ரிபனரி வழியாக HOC க்கு சமீபமுள்ள சித்திரப்புழை பாலத்தில் ஸ்கூட்டர் வந்து கொண்டிருந்தது. அருகில் வந்ததும் தங்கப்பனை உருட்டுக் கட்டை கொண்டு தலையில் அடித்தேன். பிரகாசன் கத்தியை உருவி ஒரு குத்து குத்திய அதே மாத்திரத்தில் திடீரென ஒரு பஸ் எங்களது முன்னில் வந்து நின்றது. உடனே அங்கிருந்து நாங்கள் ஓடினோம். திரும்பி BMS&lt;br /&gt;ஆபீசுக்கு செல்ல முடியாமல் கலகலப்பானதும் சிறிது நாள் நாங்கள் தலை மறைவாக வாழ்தோம். சில நாட்கள் கழித்து திரும்பவும் BMS க்கும், CITU க்கும் சண்டைகள் உருவானது. நான் BMS, RSS தொழிற்சங்கத்திற்காக CITU பார்ட்டியோடு போராட வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு பார்ட்டிகளுக்கும் சண்டைகள் தொடங்கிற்று. இந்தச் சண்டைகளுக்கும், துன்பங்களுக்கும் இரையானேன். இந்தப் போரில் எனது ஒரு கால் முறிந்து தொங்கியது. இரத்தம் மடமடவென கொட்டிக்கொண்டிருந்தது. போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்ததும் நாங்கள் ஓடி தலைமறைவாக முற்பட்டோம். ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் முறிந்து தொங்கும் எனது ஒரு காலையும், வடிகின்ற இரத்ததையும் பொருட்படுத்தாமல் போலீஸ் என்னைக் கடுமையாகத் தாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்த பிறகு நான் தொங்குகின்ற காலோடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். இத்தனை துன்பங்களுக்குப் பிறகும் மருத்துவமனையில் நான் இருக்கும் பொழுது ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்கூட என்னை வந்து சந்திக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டத்தின் கீழ் நடந்த சண்டையில் மீன் விற்று தனது வாழ்க்கையை ஓட்டுகின்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த உண்ணி கிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக தனது உயிரை இழந்தான். அவனது இறுதி சடங்குகளில் பங்கெடுப்பதற்குக் கூட எனக்கு முடியாமல் போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-9.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 9&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116565186768151889?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116565186768151889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116565186768151889' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116565186768151889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116565186768151889'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-8.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 8.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116541736438685492</id><published>2006-12-06T06:51:00.000-08:00</published><updated>2011-08-25T06:19:10.607-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 7.</title><content type='html'>திப்பு போர் செய்யும் போது நமது மதத்தின் ஆண்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு நம் சகோதரிகளான இந்துப் பெண்களைச் சிறை வைத்து ஆசை தீர கற்பழிப்பான். ஆலுவாமணிப்புரத்தைச் சேர்ந்த சிவனின் அனுக்கிரகத்தால் நமக்கு அப்போது அதிக நஷ்டம் ஏற்படவில்லை. என்றெல்லாம் வெறுப்பூட்டும் பொய்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் இதயத்தில் சுமந்த என்னைப் போன்றவர்கள் முஸ்லிம்களை கடுமையாக வெறுத்தோம்; எதிர்த்தோம்; அழிக்க ஆசை கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் தாடியைக் கண்டால் வெறுப்பு; அவர்களின் தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை முழு உருவத்தில் காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம். அதிலிருந்து முஸ்லிம்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஒப்பந்த ஊழியர்களின் சங்கம்[contract workers sangh] என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்த ஊழியர்களின் சங்கத்தின் செயலராக நான் வேலை பார்த்து வந்தேன். மேடைப் பேச்சுக்கு தகுதியானவன் என்றதால்தான் எனக்கு அந்தப் பதவி கிடைத்தது. அந்த சமயத்தில் எங்களது எதிரியாக CITU இருந்தது. அதற்கெதிராகப் போராடிட நாங்கள் தீர்மானித்தோம். குடிலில் பாஸ்கர மேனோன் என்பவர் CITU என்ற தொழிற் சங்கத்தின் தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள். சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர் [அதாவது ஆர்.எஸ்.எஸ். காரர்கள்] இந்தச் சண்டைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். எங்களைத் தூண்டிவிட்டு விட்டு இவர்கள் அமர்ந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சொகுசாக வாழவேண்டும் என்ற சுயநலவாதிகளாக இருந்தார்கள் அந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களான சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர்கள். இவற்றையெல்லாம் அறியாமல் ஏதோ இந்து விடுதலைப் போராட்டம் என்ற நினைப்பில் மூடத்தனமாக நான் இயக்கத்துக்காக என்னை முழுமையாகத் தந்து கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள்,………… &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-8.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 8&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116541736438685492?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116541736438685492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116541736438685492' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116541736438685492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116541736438685492'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-7.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 7.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116533359787953019</id><published>2006-12-05T07:43:00.000-08:00</published><updated>2011-08-25T06:18:32.583-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 6.</title><content type='html'>அந்த ஒரு மணி நேரத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் தருவார்கள். மனதைக் கட்டுப்படுத்துவதற்கான பயற்சியும், உடல் பயற்சியும் தருவார்கள். சவர்ணர் என்ற இனத்தைச் சார்ந்தவர், தாழ்த்தப்பட்ட என்னைப் போன்றவர்களுக்குத்தான் பயற்சிகள் தருவார். இவர்களின் இயக்கத்திற்கு தாழ்த்தப்பட்ட நாங்கள் நன்றாகப் பயன்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயற்சிகளைப் பெறும் பொழுது ஆர்.எஸ்.எஸ். மீது எங்களுக்கு ஆழமான அழுத்தமான பிடிப்பு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயற்சியைப் பெறுபவர்கள் தங்களை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். ல் இணைத்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பில் சேர்ந்த உடனேயே கிறிஸ்தவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு உண்டாயிற்று. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவிற்கெதிரானதென்று எங்களை நம்பவைத்தார்கள். அது முதல் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாகவே பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முதலில் முஸ்லிம்களுக்கெதிராக எடுத்து வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால்,&lt;br /&gt;&lt;br /&gt;* நாமெல்லாம் கிழக்குப் பக்கம் நின்று கடவுளை வணங்கும் போது, முஸ்லிம்கள் மேற்குப் பக்கம் நோக்கித் தொழுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* நாம் கோமாதாவை[பசுவை] சாப்பிடக்கூடாது என்றால் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* நாம் வலது பக்கம் வேட்டி கட்டினால் அவர்கள் இடது பக்கமாக வேட்டியைக் கட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் முஸ்லிம்கள் இந்து ஆச்சாரங்களுக்கு எதிராவே தங்களது வழ்க்கையை ஓட்டுகிறார்கள். இந்துக்களாகிய நாம் தான் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்து என்ற மதத்தில் தாழ்த்தப்பட்ட நான் ஒரு பகுதியல்ல என்ற விவரம் எனக்குத் தெரியாது. இந்து என்ற மதத்தில் தாழ்த்தப்பட்ட எனக்கு எந்த மதிப்பும் எந்த உரிமையும் இல்லை. ஒரிரு சாதியினரும், பிராமணர்களும் தான் இந்து மதத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற விவரம் அப்போது எனக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்திற்காக உயிரை அற்பணிக்க இவர்கள் மூளைச் சலவைச் செய்து தாழ்த்தப்பட்ட எங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இதையெல்லாம் தெரியாமல் அப்போது நான் முழுநேர ஊழியனாக ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றி வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் திப்பு சுல்தானைப் பற்றி ஒரு அபாண்டமான பொய் வரலாற்றைக் கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-7.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 7&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116533359787953019?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116533359787953019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116533359787953019' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116533359787953019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116533359787953019'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-6.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 6.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116522772773171487</id><published>2006-12-04T02:19:00.000-08:00</published><updated>2011-08-25T06:17:45.819-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 5.</title><content type='html'>ஒரு விதமாக எனது தங்கை 17 வயதை அடைந்தபோது, நான் சம்பாதித்ததின் மூலம் மூன்று பவன் நகையும் ஆயிரம் ரூபாய் வரதட்சணையும் கொடுத்து எனது தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிடம் சென்று திருமணத்திற்காக அழைத்தேன். அம்மாவோ அவள் பெற்ற பிள்ளையின் திருமணத்திற்கு வரவே இல்லை. புது கணவனும் பிள்ளையுமாக அவள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எனக்கு இருந்த ஒரே சொத்து எனது தங்கை. தங்கையை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சென்று பார்த்து வருவேன். என்னால் முடிந்தளவு பொருட்களை வாங்கிச் செல்வேன். என் தங்கையைப் பார்த்துவிட்டு வரும்போது தான் எனது மனதுக்கு ஒரு நிம்மதி. மூன்று பிள்ளைகளைப் பெற்று அவள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். நான் தனியாக இருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகுதான் எனது முழுக் கவனமும் ஆர் எஸ் எஸ் மீது சென்றது. ஆர்.எஸ்.எஸ். ன் பணியில் நான் தனியொரு சுகத்தைக் கண்டேன். கல் வெட்டும் தொழில் முடிந்தால் முழு கவனமும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பருவத்தில் நான் ஊரில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும் போது சில இளைஞர்கள் வெளியில் நின்று இந்துக்களெல்லாம் ஒன்று; இந்து நடைமுறை ஒன்றாகும்; என்று பாடுவர். இவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களா? என்று எனது சிறு வயதில் நான் பார்த்தவற்றை வைத்துக் கணித்துக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கும்பலாக கோவிலுக்கு வெளியே இருந்து ஒரு நபர் சொல்லிக்கொடுக்க மற்றவர்களெல்லாம் இணைந்து பாடுவதும், கோவிலில் வேறு சில வணக்கங்களில் ஈடுபடுவதும்தான் என்னை அந்த அமைப்பில் ஈர்த்த்து. சொந்த பந்தம் எதுவுமில்லாத எனக்கு ஆர்.எஸ்.எஸ்.ஒரு சொந்தமாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக கடுமையாக உழைக்க நான் உறுதி பூண்டேன். எனது நாடு முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஒரு நாடாகும்; முஸ்லிம்கள் இந்த நாட்டின் கொள்ளைக்காரர்கள்; குழப்பக்காரர்கள்; கோவில்களை இடிக்ககூடியவர்கள்; என்றெல்லாம் அவர்கள் பாடம் சொல்லித்தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கேட்ட எனக்கு அவர்களோடு ஒரு விதமான நெருக்கம் ஏற்பட்டது. அவர்களது சாகாவிலும் நான் கலந்து கொண்டேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சாகாவில் கலந்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-6.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 6&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116522772773171487?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116522772773171487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116522772773171487' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116522772773171487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116522772773171487'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-5.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 5.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116515030639404498</id><published>2006-12-03T04:42:00.000-08:00</published><updated>2011-08-25T06:17:04.069-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 4.</title><content type='html'>அம்மாவை இழந்த எனக்கு ஒரே அறுதலாக என் தங்கை மட்டும் மனதில் தென்பட்டாள். உடனே நான் என் அன்புத் தங்கையைத் தேட ஆரம்பித்தேன். அம்மாவிடம் விசாரித்த போது தங்கையை எனது அம்மாவின் தம்பி வீட்டில் அதாவது எனது மாமா வீட்டில் விட்டு விட்டதாக அம்மா சொன்னாள். மாமா எங்கு தங்கியிருக்கிறார் என்று தெரியாமல் அலைந்து ஒரு விதமாக வீட்டைக் கண்டு பிடித்தேன். அது ஒரு வாடகை வீடாக இருந்தது. நான் சென்றடைந்தபோது மாமா இல்லை.அத்தையிடம் விசாரித்தபோது தங்கை வெளியில் சென்றிருப்பதாக சொன்னார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தபோது அம்மிணி வேலைக்குச் சென்றிருப்பதாகப் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு முஸ்லிம் பெண் என்னிடம் சொன்னாள். அங்கே ஒரு டீ கடை இருக்கிறது. அங்கு உன் தங்கையை நல்லா வேலை வாங்குகிறார்கள் என்று அப்பெண்மணி சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அந்த டீ கடை பக்கம் விரைந்து சென்றேன். அங்கு சென்று பார்த்த போது எனது ம னம் திடுக்கிட்டுப்போனது. எனது தங்கையா இது? அந்த டீ கடையின் பின்வாசலில் ஆட்கள் சாப்பிட்டுவிட்டு போடுகின்ற எச்சில் இலைகளுக்கிடையில் எனது தங்கையின் வாடிய முகம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு அவள் சகிக்க முடியாதத் தோற்றத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். இதைப் பார்த்தபோது எங்கேனும் அமர்ந்து அழ வேண்டும் போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நான் அவளை அங்கிருந்து அழைத்துவந்தேன். கை முழுவதும் சொறி பிடித்து, தலை முழுவதும் புண்ணாகவும் அந்தப் புண்களுக்கும் மேலாக பேன் ஊரிக்கொண்டும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது 12 வயதான தங்கையைப் பார்ப்பதற்கு எனக்கு சகிக்கவில்லை. கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் என் இளம் தங்கையை படாதபாடு படுத்தியிருக்கிறார் எனது அம்மாவின் வீட்டார்கள். அவளை ஒரு குளத்தில் குளிக்கச் செய்து அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவோ வேறு திருமணம் முடித்துவிட்டாள்; அப்பாவிற்கோ புது மனைவி; எனது தங்கையின் நிலைமையோ அந்தோபரிதாபம். இவற்றையெல்லாம் பார்த்து நொந்த மனதோடு வீட்டைச் சென்றடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது அம்மாவிடம் எனது தங்கையை விடுவற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனது அத்தை அவளுக்கு இழைத்த கொடுமையை அவள் திரும்பவும் அனுபவிக்கவேண்டுமா? அப்படியிருக்க என்னிடம் மிகவும் அன்பு செலுத்துகின்ற அப்பாவின் தங்கை ஒருத்தி இருந்தாள். அவளின் பெயர் குஞ்ஞாளி. எனது தங்கையை குஞ்ஞாளியின் வீட்டில் விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சம்பாதிப்பதை எனது தங்கைக்காக சேகரித்து வைக்காலானேன். அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதுதான் இலட்சியமாக இருந்தது. இப்படிச் சிறிது காலம் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;என் தங்கை பருவமடைந்தாள். குஞ்ஞாளி வீட்டில் அவளை விட்டு ஒரு வருடம் கடந்து விட்டது. இனி அவளை அங்கு விடுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது. அப்பாவின் சம்மதத்தோடு நான் தங்கையை வீட்டிற்கு அழைத்து வந்து எனது சித்தியிடம் விட்டேன். அப்போது சித்தி நாலாவது பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-5.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116515030639404498?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116515030639404498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116515030639404498' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116515030639404498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116515030639404498'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-4.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 4.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116507228575468064</id><published>2006-12-02T06:36:00.000-08:00</published><updated>2011-08-25T06:16:24.449-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 3.</title><content type='html'>இப்படியாக வேலைக்குச் சென்றதனால் எனது படிப்பும் அத்தோடு முடிந்து போனது. இப்படி நான்கு வருடம் அப்பாவுடன் வேலை பார்த்து எனது மழலைப் பருவத்தைக் கழித்தேன். வேலை செய்து திரும்பும்போது அப்பா என்னையும் அழைத்துக்கொண்டு சாராயக் கடைக்குச் செல்வார். அப்பா இரண்டு லிட்டர் சாராயத்தை அருந்துவார். நான் கிழங்கும் மீனும் சாப்பிடுவேன். இப்படி சாராயக் கடைக்குச் சென்றுச் சென்று சில நாட்களில் அப்பா கையாலேயே எனக்கு சாராயம் குடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சந்தோஷமாக நான் பயன்படுத்தினேன். அன்று இரவு சாராய மந்தத்தால் நிம்மதியாக தூங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறிருக்க அப்பாவுடன் வேலை செய்வதற்கு எனக்கு கண்ணியக்குறைவாக இருந்தது. சொந்தமாக வேலை பார்ப்பதற்காக நான் ஊரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டுவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து நான் ராமபுரம் என்ற இடத்தைச் சென்றடைந்தேன். அங்கு கொச்சுவர்கிச்சன் என்ற ஒருவரின் வீட்டில் வேலை பார்த்து வந்தேன். இரவு வேளையில் ஒரு சாக்கை விரித்து விட்டு வராண்டாவில் தான் தூங்குவேன். எனது முதலாளி கொச்சுவர்கிச்சன் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். அவர் அடிக்கடி என்னிடம் "வேலாயுதா நீ ஒரு கிறிஸ்தவனாகி விடு; நல்ல ஒரு கிறிஸ்தவப் பொண்ணை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன் என்றெல்லாம் சொல்வார்". அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் அந்த ஊரில் ஏற்கனவே என் இனத்தைச் சார்ந்த தலித் மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இருந்தார்கள். இந்தத் தலித் மக்களை கிறிஸ்தவர்கள் மிக மோசமாகத்தான் நடத்தி வந்தார்கள். தலித் கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர்களைப் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவனாக மாறினால் எனக்கும் இந்த நிலைதான் என்ற அச்சத்தால் தான் நான் கிறிஸ்தவனாக மாறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுச் சாணம் சுமப்பதுதான் எனக்கு அங்கு முக்கிய வேலையாக இருந்தது. சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு என் சொந்த ஊ ருக்குத் திரும்பிவிட்டேன். இப்போது நான் ஒரு இளைஞனாக மாறியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாலிப பருவத்தில் அம்மாவைப் போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. நான் மனிதனாகி விட்டதால் அப்பாவும் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நினைத்து வீட்டிற்குச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது அம்மா வேறு திருமணம் செய்து விட்டாள் என்று. என் ஆசைகளும் கனவுகளும் அத்தோடு உடைந்துபோயின.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் சொந்த இடத்தில் ஒரு குடிசையில் நானும் அம்மாவும் என் தங்கை அம்மிணியுமாக சந்தோஷமாக இனிவரும் நாட்கள் வாழலாம் என்று நினைத்தேன். எனது ஆசை மண்ணாகிப்போனது. ஒரு போதும் மறக்க முடியாத ஒரு கவலையாக எனது வாழ்வில் அது நின்று நிலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-4.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116507228575468064?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116507228575468064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116507228575468064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116507228575468064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116507228575468064'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/12/rss-3.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 3.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116487919715475586</id><published>2006-11-30T01:26:00.000-08:00</published><updated>2011-08-25T06:15:27.017-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 2.</title><content type='html'>அம்மா வீட்டை விட்டுப்போன இரண்டாவது வாரத்தில் அப்பா புதிய மனைவியை அழைத்து வந்து வீட்டில் குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டார். அப்போது நான் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். உணணவுக்காக மேல் ஜாதி இனத்தைச் சார்ந்த தேவர்களின் வீட்டு மனையை மிதிப்பதற்குக்கூட எங்களுக்கு அனுமதியில்லை. ஏனென்றால் நான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பசி பொறுக்க முடியாமல் நானும் எனது பாட்டியுமாக[அப்பாவின் அம்மா] முஸ்லிம்கள் வீட்டில் ஏதாவது திருமணம் மற்றும் சடங்குகள் நடந்தால் அங்கு செல்வோம். அவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே வீசுகின்ற அந்த எச்சில் மாமிசத்திற்காக நாங்கள் காத்து நிற்போம். இந்த எச்சிலை சாப்பிடுவதற்காக காகமும் நாயும் எங்களது நண்பர்களாக அங்கே நின்று கொண்டிருக்கும். எச்சில் இலையை அப்படியே எடுத்து அவர்கள் கடித்துத் துப்பின எலும்பில் ஏதாவது மாமிச துண்டுகள் இருக்கிறதா என்று ஆவலோடு எடுத்து, இருப்பதை சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே எடுத்து எனது பாட்டியின் மடியில் கட்டி சந்தோஷமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்று மிகவும் சந்தோமான நாளாக இருக்கும். இரவு சப்பாடு கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷம் தான். எச்சில் இல்லாத நல்ல சாப்பாடு கிடைக்காதா? என்று நாங்கள் ஆவலுடன் இருந்த நாட்கள் பலப்பல.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்தவுடன் நானும்,எனது பாட்டியும் சாப்பாட்டிற்காக பல இல்லங்கள் ஏறி இறங்குவோம். அதிகமாக முஸ்லிம் வீடுகளில் இருந்துதான் எங்களுக்கு திருப்தியான சாப்பாடு கிடைக்கும். நோன்பு நாட்களில்தான் எங்களுக்கு திருப்தியான சாப்பாடு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டிற்காக வீடு வீடாக செல்லும்போது எனது பள்ளி நண்பர்களின் வீட்டை அடையும் போது அவர்கள் என்னைப் பார்த்து விடாமல் நான் மறைந்து நின்று பாட்டியை மட்டும் அனுப்பிவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;6-ம் வகுப்பு வரை எனது படிப்பு நீடித்தது. பள்ளிக்கு செல்வதற்கு அப்பா கட்டாயப்படுத்தினதும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற காலத்தில்,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா என்னை கல் வெட்டுகின்ற வேலைக்கு அழைத்துச் செல்வார். அப்பாவிற்கு  எடுபிடியாக வேலை செய்வேன். காலை 10 மணி ஆகும் போது நல்ல கிழங்கும்,சுண்டல் கடலையும் கிடைக்கும். அதன் சுவை தனி ருசிதான். மதிய நேரம் வீட்டில் இருந்து கொண்டுவந்த சோற்றை சாப்பிடுவேன். மாலைவேளையில் நல்ல ஒரு டீ கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/12/rss-3.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamiccollections.blogspot.com/2006/11/rss.html"&gt;RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இறைவன் நாடினால் வளரும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19355143-116487919715475586?l=islamiccollections.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamiccollections.blogspot.com/feeds/116487919715475586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19355143&amp;postID=116487919715475586' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116487919715475586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19355143/posts/default/116487919715475586'/><link rel='alternate' type='text/html' href='http://islamiccollections.blogspot.com/2006/11/rss-2.html' title='RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 2.'/><author><name>அபூ சுமையா</name><uri>http://www.blogger.com/profile/11714789816436208964</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19355143.post-116461692378694756</id><published>2006-11-27T00:39:00.000-08:00</published><updated>2011-08-25T06:35:47.069-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 1.</title><content type='html'>&lt;strong&gt;ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியனான வேலாயுதன் பிலாலானது........&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒர் ஆர்.எஸ்.எஸ். காரனாக இருந்த வேலாயுதன் என்ற நான் பிலாலானதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துக்காடு பஞ்சாயத்தில் பிணர்முண்டா என்ற கிராமத்தில் பிறந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தகப்பனார் பெயர் ஐயப்பன். தாய் காளி. 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் நாள் என்னுடைய பிறந்ததினம். எனது தகப்பாரின் மூன்று திருமணத்தில் 7 குழந்தைகள். அண்ணன் குமாரன், தம்பி சுரேஷ், சகோதரிகள் அம்மிணி, கிரிஜா, பிந்து மஞ்ஜுளா பின்னர் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் தங்கை அம்மிணியும் ஒரே தாயின் பிள்ளைகள். தந்தை ஒரு செங்கல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அம்மா விவசாயம் செய்யக்கூடியவளாகவும் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பதினோரு வயது இருக்கும்போது.......,&lt;br /&gt;&lt;br /&gt;எனது தந்தை வேலைக்குச் சென்றால் திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோலஞ்சேரிக்குப் பக்கத்தில் கடையிருப்பு என்ற இடத்தில் கொன்னனின் வீட்டில்தான் எனது தந்தை தங்குவார். எனது தந்தை அந்த [கொன்னனின்]வீட்டில் தங்குவதில் எனது அம்மாவிற்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்கள் சில நாட்களுக்குப் பிறகு நிஜங்களாயின.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அப்பாவிற்கும் கொன்னனின் மனைவிக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்று முடிந்தது.&lt;br /&gt;அப்பா தினசரி இரவு குடித்து விட்டு வந்து அம்மாவை சித்ரவதை செய்வது தொடர்ந்து கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் சித்ரவதை தாங்க முடியாமல் கடைசியில் அது விவாகரத்து வரை சென்றது. எனது கண்முன்னே வைத்து அம்மா தன் கழுத்தில் தொங்கிய தாலியை அறுத்து அப்பாவின் முகத்தில் விட்டெறிந்தாள். இது எனது வாழ்வில் மறக்க முடி
